குரு உபதேசம் – 3515
முருகனை வணங்கிட, சைவ உணவை மேற்கொண்டும் மற்ற உயிர்களிடத்து அன்பு காட்டி வாழ்கின்ற மக்களுக்கு, ஞானத்தலைவன் முருகன் அருள் செய்வான் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3514
முருகனை வணங்கிட, இக வாழ்வாகிய இல்லற வாழ்வை செம்மையாக நடத்துவதற்கும், பரவாழ்வாகிய மோட்ச லாபத்தை அடைவதற்கும் முருகப்பெருமான் திருவடியினாலன்றி வேறெந்த வகையிலும் பெற முடியாது என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3513
முருகனை வணங்கிட, இளமை இருக்கும்போதே உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற அறிவைப் பெறலாம்.