குரு உபதேசம் – 3390
ஒருவனை பார்க்கும் போதே இவன் தகுதி உடையவனா, தகுதி இல்லாதவனா என்பதை அறியக்கூடிய அறிவைப் பெறலாம். அவ்விதம் முருகன் அருள்கூடி தகுதியுள்ள நட்பை இனம் கண்டு பெருக்கிக் கொள்ளும் வல்லமையையும், ஆற்றலையும் முருகன் அருளால் பெறலாம்.
ஒருவனை பார்க்கும் போதே இவன் தகுதி உடையவனா, தகுதி இல்லாதவனா என்பதை அறியக்கூடிய அறிவைப் பெறலாம். அவ்விதம் முருகன் அருள்கூடி தகுதியுள்ள நட்பை இனம் கண்டு பெருக்கிக் கொள்ளும் வல்லமையையும், ஆற்றலையும் முருகன் அருளால் பெறலாம்.
காமவிகாரமும், லோபித்தனமும், பொறாமையும், பழிவாங்கும் உணர்ச்சியும், சிறுமை குணங்களும்தான் ஒருவனுக்கு தொடர்பிறவிகளை உண்டுபண்ணுகின்றது என்பதை அறிந்து, முருகப்பெருமானின் ஆசியால் குணக்கேடுகளை நீக்கிக்கொண்டு தாய்மை குணத்தையும் பெறலாம். முருகப்பெருமானே தாய்மை குணமென்றும், தாய்மை குணமே முருகப்பெருமான் என்றும் அறியலாம்.
காலனாகிய எமனை வென்று வெற்றி கண்ட முதல் தலைவன் முருகன்தான் என்பதை அறியலாம்.