Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3315

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… கற்புடைய பெண்களை கற்பழிப்போர், கலப்படம் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், அதிகாரத்தின் துணையோடு பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்கிறவர்களும், பொது சொத்தை அபகரித்து வாழ்பவரும், அசுரர்களாக கருதப்பட்டு முருகப்பெருமானால் தண்டிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவார்கள்.

குரு உபதேசம் – 3314

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தற்காலத்தில் தவறு செய்வோர், தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர் ஞானிகளால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3313

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒரு மனிதனுக்கு விடாத பிறவிகளை உண்டுபண்ணுவது அவனது காமதேகமே காரணம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3312

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பஞ்சமகா சக்திகளும் முருகனின் ஆணைக்கு உட்பட்டு நடப்பதினாலே, நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும் என்பதை அறியலாம்.