Prasanna
குரு உபதேசம் – 3696
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்து, காப்பாற்றிக் கொண்டிருப்பவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம். முருகப்பெருமானின் ஆசிபெற விரும்பினால், அவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு எவன் தொண்டு செய்கின்றானோ அவனுக்கு ஞானவாழ்வை தந்து, மரணமிலாப் பெருவாழ்வையும் தருவான் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3695
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முருகப்பெருமானால் படைக்கப்பட்ட ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள எந்த ஜீவராசிகளுக்கும் செய்கின்ற உதவிகள் அனைத்தும் நேரிடையாக முருகப்பெருமானின் திருவடிகளையே சென்றடையும் என்பதை அறியலாம்.
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
சித்தர்கள் போற்றித் தொகுப்பு சித்தர்கள் போற்றித் தொகுப்பு ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச்செய்த வள்ளல்,குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து வழங்கிய சித்தர்கள் போற்றித் தொகுப்பு அற்புதம் அற்புதம் ஆன்மீகவாதிகளுக்கு அகத்திய மாரிஷி நமா என்றென்றோது அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார் அகத்தியரே காஷாய வேட மீவார் அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள் அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல யாருக்கும் தடையில்லை அரசே யென்பார் அகத்தியர் தாம் எக்கியத்தில் … Read more


