Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4423

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மக்களின் துன்பங்களை உணர முடியாத அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளும் அவரவர்க்கு உண்டான வாய்ப்பை இழப்பார்கள் என்பதை அறியலாம். …………….. கொற்றவன் முருகனை கூவி அழைத்திட நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவனே!

குரு உபதேசம் 4422

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இயற்கை சீற்றங்களினாலே எந்தவிதமான இடையூறுகளும் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானை வணங்குவோர்க்கு வராது என்பதை அறியலாம். …………….. பணிந்தேன் முருகனின் பாதம் பணிந்தேன் துணிந்தேன் கூற்றுவனை கொல்லவும் துணிந்தேன்.

குரு உபதேசம் 4421

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி  பெற்றிட்டால்…. உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்றும், மது அருந்துகின்றவன், சூதாடுகின்றவன் போன்றவர்களது நட்பு அமையாமல் நம்மை காப்பான். ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்று கூறி நாமஜெபம்தனை தொடர்ந்து செய்கின்றவர்களுக்கு நல்ல நட்பு அமையும், சொந்த வீடு அமையும், பண்புள்ள மனைவி, பிள்ளைகள் உண்டாகும், வறுமையில்லா வாழ்வினை வாழ்கின்ற அமைப்பையும் பெறுவார்கள். தொடர் பிறவிக்கு காரணம் அறியாமை என்றும், அறியாமைக்கு காரணம் மும்மலக் குற்றம்தான் என்பதையும், மும்மல குற்றத்தை … Read more

குரு உபதேசம் 4420

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு ஏழைக்கு உணவு தந்தால் கடவுளுக்கே உணவு தந்ததாக அறிகின்ற அறிவும், ஒரு ஏழைக்கு மானம் காக்க தருகின்ற உடை கடவுளுக்கே உடை தந்ததாக அறிகின்ற அறிவைப் பெற்று, எல்லாம் கடவுளால் படைக்கப்பட்டவர்களே என்றும், கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு செய்கின்ற அத்தனையும் கடவுளுக்கு செய்வதாகவே அர்த்தம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4419

முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பிறப்பு, இறப்பு, வீடுபேறு ஆகியவற்றைப் பற்றி அறிந்தாலும் பிறவாநிலையாகிய வீடு பேற்றிற்கு தலைவனும், அதை அளிக்கும் தலைவனும் முருகனே என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4418

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. விலைவாசி கட்டுக்குள் இருக்கும், லஞ்சலாவண்யங்கள் இருக்காது, எந்த பொருளிலும் கலப்படம் இருக்காது, எங்கும் சமநீதி, சமதர்மம் ஓங்கி அரசு அதிகாரிகள் முதல் சாதாரணமானவர்களும் முருகனது அருளினாலே நேர்மையான அதிகாரிகளுக்கும் நிம்மதி உண்டாகும். …………….. ஆலவாய் அண்ணலின் அருந்தவ புதல்வனே ஞாலத்தை ஆள்வான் நன்மக்கள் போற்றவே. யுகம்பல கடந்த உத்தம வேலனை அகம்மகிழ போற்றிட ஆனந்தமாமே.

குரு உபதேசம் 4417

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பொது நிர்வாகத்திலுள்ளோர் முருகப்பெருமானை வணங்க வணங்க தக்க சான்றோர் நட்பினை முருகனருளால் அமையப் பெறுவர். தக்க சான்றோர் நட்பும், முருகனது ஆசியையும், அருளையும் பெறுகின்றவர்தான் சிறப்பான வகையில் நிர்வாகம் செய்து மக்களுக்கு உகந்த வகையில் நடந்து ஆசிபெறலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4416

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மக்கள் துன்பங்கள் தீரவே ஞானிகள் தலைமையிலே ஞானிகள் ஆட்சி அமைகிறது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4415

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உண்மையான சாதுசங்கம் ஒன்று உண்டென்றால் அது முருகப்பெருமான் தலைமையேற்று நடத்துகின்ற ஏழாம் படை வீடாம் ஓங்காரக்குடிலாகும். குடிலதனிலே வந்து அரங்க தரிசனம் பெற்றிட்டால் அரங்கனாய் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமானின் அருளைப் பெற்றுவிட்டால் நாட்டினிலே இயற்கை சீற்றங்கள் கட்டுப்படும், மிகுதி மழை இருக்காது, பருவமழை தவறாது பெய்யும் என்பதையும் அறியலாம். …………….. தேற்றமாம் முருகனின் திருவடியைப் போற்றிட மாற்றமும் உண்டு மனமும் செம்மையே.