Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4252

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : நரை, திரை, மூப்பு, பிணிக்கு ஆட்பட்ட உடம்பை மாற்றி என்றும் அழிவிலாத ஒளி உடம்பைப் பெற்று மரணமிலாத வாழ்வை வாழலாம் என்று அறியலாம். தும்பி முகனுக்கு இளையவன் முருகனை நம்பியே பூசிக்க நரைதிரை மாறுமே. மன்மதன் முருகனின் மலரடி போற்றிட மன்மத ஆண்டு மகத்துவம் தோன்றுமே!

குரு உபதேசம் 4251

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பயனற்ற கவிகள் எவை எவை என்றும் உணரச்செய்து, அவை வெறும் புனைக்கதைகள்தான் என்று உணரக் கூடிய தெளிந்த அறிவைப் பெற்றும் உண்மையில் ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல கவிகள் எவை எவை என்பதையும் உணரச் செய்வான் முருகன். முருகனே முன்னின்று தோன்றி அருளிச்செய்த மகான் நக்கீரப்பெருமான் எழுதிய கவிகளும், மகான் அருணகிரிநாதர் எழுதிய கவிகளும் இதுபோன்ற முதுபெரும் ஞானிகள் எழுதியதும், முருகப்பெருமான் ஆசிபெற்றவர்களாகிய சித்தர்கள் எழுதிய கவிகளாகிய திருமூலர் திருமந்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ், … Read more

குரு உபதேசம் 4250

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்கிற அறிவும், அதற்குரிய சூழலும் வைராக்கியத்தையும் பெறுவதோடு கடவுள் உண்டு என்பதை ஏற்கும் மனப்பக்குவமும், கடவுளின் ஆசியால்தான் கடைத்தேற முடியும் என்பதையும் உணர்வதோடு அந்த கடவுள் முருகப்பெருமான்தான் என்பதையும் அறிகின்ற சிறப்பறிவையும் பெறுவதோடு பிற உயிர்கள் தமக்கு இரங்கி இதம் புரிவதே ஜீவதயவு என்றும் அந்த கடைத்தேற்றவல்ல ஜீவதயவினை முருகனை வணங்க வணங்கத்தான் பெற முடியும் என்றும், ஜீவதயவினை பெற்றால்தான் முருகனது ஆசியை … Read more

குரு உபதேசம் 4249

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பெறுதற்கரிய மானுட பிறவியை பெற்றவர்கள் நிலையில்லாததை நம்பாமல் நிலையானதாகிய பூஜையையும், புண்ணியத்தையும் அறிந்து நிலையில்லாததை நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்பதையும், அதையும் முருகனை பூஜித்து ஆசி பெற்றால்தான் பெற முடியும் என்பதையும் அறியலாம். பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் சித்திக்கும். சித்திக்கும் முருகனின் திருவடியை பூஜிக்க முக்தியும் உண்டாம் முனையும் திறந்திடும். முனையும் திறந்திடும் முக்தியும் உண்டாம் வினையும் இல்லை வெற்றியும் உண்டாம். உலக நன்மைக்காக அவதரித்தவன்தான் … Read more

குரு உபதேசம் 4248

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : போலி வேடதாரிகளின் இயல்பினையும், உண்மை ஆன்மீகவாதிகளின் இயல்பையும் உணர்த்துவான். போலி வேடதாரி தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமல், தான் பாவியாவதோடு தன்னை நம்பிய தொண்டர்களையும் பாவியாக்குவான் என்பதையும், தன்னை நாடி வருகின்ற மக்களையும் பாவிகளாக்கி விடுவதையும், உண்மை ஆன்மீகவாதிகள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதோடு தன்னை நம்பியுள்ள தொண்டர்களையும் காப்பாற்றி கடைத்தேற்றுவான் என்பதையும், தன்னை நாடி வருகின்ற அன்பர்களையும் காத்து இரட்சிப்பான் என்பதையும் அறிந்து சான்றோர்களாகிய உண்மை ஆன்மீகவாதியின் வழிநடந்திட … Read more

குரு உபதேசம் 4247

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்: மகான் மாணிக்கவாசகர், மகான் திருஞானசம்பந்தர், மகான் ஒளவையார் போன்ற முதுபெரும் ஞானிகள் அருளிய ஞான நூல்களை படிக்கவும், படித்து நன்னெறி நடக்கவும் வாய்ப்பை அருள்வதோடு முற்றுப்பெற்ற ஞானிகளை உருவாக்கி அவர்கள் ஞானம் பெற காரணமாய் இருந்தவனும், அவர்களையெல்லாம் ஞானிகளாய் ஆக்கியவனும், அன்றும் இன்றும் என்றும் ஞானத்திற்கு தலைவனாய் இருப்பவனும் ஞானிகளை உருவாக்கி அவர்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வை அளித்து காத்து இரட்சிப்பதையே தொழிலாகக் கொண்டவனும் சதகோடி சூரிய பிரகாசமும் எல்லையில்லா பேராற்றலும், … Read more

குரு உபதேசம் 4246

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால்: பரு உடம்பை பற்றியும், நுண்ணுடம்பைப் பற்றியும் அறிந்து, பரு உடம்பின் துணையோடு நுண்ணுடம்பை அடைந்து முதன் முதலில் வெற்றி கண்டவன்தான் முருகப்பெருமான் என்றும் அறியலாம். அவன் அடைந்த அந்த பேரின்ப பெருநிலைதனை, தம்மை உளமார மனமுருகி பூஜித்து வணங்கினோர்க்கும் அருளி அவர்களையும் தம்மைப்போல ஆக்கிக் கொண்டவன்தான் முருகப்பெருமான் என்றும், நாமும் முருகனை வணங்க வணங்க, நம்மையும் அவனைப்போல ஆக்கிக் கொள்வான் என்பதையும் அறியலாம். தாயினும் தயவுடைய முருகப்பெருமான் திருவடிகளை பற்றுகின்ற மக்களுக்கு … Read more

குரு உபதேசம் 4245

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால்: சிந்தை, செயல், சொல் ஆகியவை மாசுபடுவதற்கு காரணம் உடல்மாசுதான் என்றும், உடல் மாசு நீங்கினால் சிந்தை, செயல், சொல் ஆகியவையும் தூய்மையாகும் என்பதையும் அறியலாம். கட்டகன்ற முருகனின் கழலிணை போற்றிட எட்டிரண்டும் நமக்கு எளிதாய் காணுமே. எந்தை கந்தன் எனக்கு உரைத்தது கந்த புராண காதையாம்.