Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 284

சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென் றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி – 284   சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று ஆரியர் புகழ் தரும் அருட்பெருஞ்ஜோதி !   ஆரியர் – மதிப்புமிக்கவர் / ஞானிகள் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் ஒளிகள் அனைத்திற்கும் மூலமான பேரொளியாக (ஜோதியுள் ஜோதி) விளங்குகின்றவன் என்று ஞானிகளாலும் புகழப்பட்ட அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 282

ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம் ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 282   ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம் ஆரமுது எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி !   ஆரியல் – மேலான தன்மை             அகம் – ஆன்ம ஞானம், புறம் – உடல்,                                        அகப்புறம் – காரண உடல், புறப்புறம் – அண்டம்   உன்னதமான நிலையில் வீற்றிருந்து, என்னுடைய உள்ளம், உடல், உள்-உணர்வு, அண்டம் ஆகிய எல்லா நிலைகளிலும் அரிய அமிர்தமாக (அழிவில்லாத இன்பமாக) … Read more

தினம் ஒரு அகவல் 280

வல்லப சத்திகள் வகையெலா மளித்தென தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – 280   வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !   ஆற்றல் மிகுந்த பிரபஞ்ச சக்திகள் அனைத்தையும் அளித்து, எனக்கு ஏற்படும் எல்லாவிதமான துன்பங்களையும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 278

பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி – 278   பரை ஒளி என் மனப் பதியினில் விரித்தே அரசது இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி !   சக்தியின் அருள் ஒளியை எனது மனதினில் அளித்து,  மனதையே அந்த ஆற்றலுக்கு ஆட்சி செய்ய வைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 274

கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி – 274   கதிர் நலம் என் இரு கண்களில் கொடுத்தே அதிசயம் இயற்று எனும் அருட்பெருஞ்ஜோதி !   ஞானபிரகாசத்தை என் பார்வையில் கொடுத்து அதன் மூலம் அதிசயங்களை இந்த உலகிற்கு நடத்தி அருள்வாய் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 272

கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி – 272   கற்பகம் என்னுளம் கைதனில் கொடுத்தே அற்புதம் இயற்று எனும் அருட்பெருஞ்ஜோதி !   கேட்டதையெல்லாம் தரக்கூடிய கற்பகத்தை என் உள்ளங்கையில் கொடுத்து அற்புதங்களை செய் என ஆற்றல் அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 270

நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென் அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – 270   நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என் அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !   அமிர்தம் இதுதான் என்று என் உள்நாக்கில் சுவைக்க வைத்து என் பிறவிப் பிணியான துன்பத்தை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 268

ஆதியு மந்தமு மறிந்தனை நீயே ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 268   ஆதியும் அந்தமும் அறிந்த எனை நீயே ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !   மும்மூர்த்திகளால் கூட அறிய முடியாத அடி முடியை (ஆதி, அந்தம்) ஞானத்தால் பெற்ற நீயே இந்த பிரபஞ்சத்தின் மூலாதார (ஆதி) சக்தியாவாய் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 266

இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 266   இந்த சித்ஜோதியின் இயல் உரு ஆதி அந்தம் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !   ஞான பிரகாசத்தின் அறிவு வடிவான பேரொளியின் உண்மையான சொரூபமே, உலகங்கள் அனைத்தின் படைப்புக்கு மூலமான தொடக்கமும் (ஆதியும்), அழிவுக்கு (இறுதி முடிவும்) ஆகும் என்று உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!