Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4510

அகத்தீசனை பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அகத்தீசனை வணங்கி பூஜிக்க பூஜிக்க சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அடைவது அவசியம் என்பதும், இந்த நான்கு படிநிலைகளையும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்காய், மகான் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மகான் திருமூலர் இயற்றிய திருமந்திரம் போன்ற ஞானநூல்களை பயபக்தியுடன் வணங்கி படித்தால் அறிந்து கொள்ளலாம் என்பதையும், ஆனால் அதைவிட எளிமையான வழி எதுவெனில் எந்த ஞானி இந்த நூலை எழுதினார்களோ அவர்களது சூட்சுமங்களை … Read more

குரு உபதேசம் 4509

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது ஆசியைப் பெற முருகனது திருவடிப் பற்றி பூஜித்தல் அவசியம் என்பதும், வெறும் பூஜையால் வரும் தவபலத்தால் மட்டும் ஞானத்துறையில் முன்னேற முடியாது என்பதும், முருகனை பூஜித்து ஆசி பெற்றதால் வந்த பூஜை பலத்தின் உதவியால் புண்ணியங்களை செய்ய முருகனது அருளைப் பெற வேண்டும். முருகனது அருளைப் பெற வேண்டுமாயின் அவன் ஜீவ தயவு உடையோராய் இருத்தல் அவசியம் ஆகிறது. ஜீவதயவை பெற வேண்டுமாயின் உயிர்க்கொலை தவிர்த்து புலால் … Read more

குரு உபதேசம் 4508

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை வணங்கி பூஜிக்க பூஜிக்க ஞானத்தினை அடைதலின் படிகள், நான்கென்றும் அவை அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதும், அதுவே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன என்றும் நற்பண்புகளை அறிவதும் ஞானிகள் துணையால் நற்பண்புகளை பெற்று நன்னடத்தை உடையோராய் வாழ்தல் சரியை என்பதும், கடவுள் உண்டென்று நம்புவதும் கடவுளை பூஜித்து கடவுளின் ஆசியை பெற்று கொள்வதும் கிரியை என்பதும், மூச்சுக்காற்றைப் பற்றி அறிதலும், அதை வயப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து … Read more

குரு உபதேசம் 4507

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பாவவினைகளை போக்கி நம்மை கடைத்தேற்றும் தலைவனே முருகன் என்பதையும் முருகனது அருளாசியை பெற்றிட்டால் எல்லா தீயபழக்கங்களிலிருந்தும் விடுபடுவதோடு தொடர்ந்து பூஜைகள் செய்தும், புண்ணியச் செயல்களை செய்தும் வரவர, முருகனது கருணையாலே அருளாளனாய், புண்ணியவானாய் நாமும் மாறி ஞானமும் பெறலாம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4506

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இக்காலம் கலிகாலத்தின் உச்சமான காலமாகும். இக்கலிகாலத்தின் உச்சத்திலே பத்தினி பெண்களும், பக்தரும், பண்புடையோரும், தொழிலாளர்களும், விவசாயிகளும், பஞ்சபராரிகள் என உள்ள அனைவர்களிலும் ஒரு சில பகுதியினர் மட்டுமே கலியுகத்தின் கொடுமைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் அநீதிக்கு துணையாய் நிற்பதினாலே அவர்களுக்கு பாதிப்புகள் வரவில்லை. உலகினில் எல்லோரும் கலியின் கொடுமையால் அவதிப்பட்டு அனைவரும் ஒன்றுகூடி எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா? என்றே இறைவனை பிரார்த்திக்கும் காலத்தில்தான் முருகப்பெருமான் தனது பேராற்றலை உலகினில் ஒரு … Read more

குரு உபதேசம் 4505

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இதுவரை இவ்வுலகினில் வழக்கமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததும், முன்னோர்கள் செய்தது என மூடநம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வந்ததுமான, நடுக்கல் வணக்கம், சிறுதெய்வ வழிபாடு, உயிர்ப்பலி இடுதல், செத்துப்போன மனிதனை கடவுளாய் வணங்குதல், வீண் ஆரவார புறச்சடங்குகள், அர்த்தமற்ற வெறிச்செயல் பூஜைகள் என மனிதனை பாவியாக்கும் அனைத்து செயல்பாடுகளும் முருகனது அருளாக்கினையால் இனி இவ்வுலகினின்று வழக்கொழியும். இனி முருகனின் உத்தம பூஜையாம் ஞானியர் திருவடி பூஜையும், ஜோதி வழிபாடும் நிலைத்து, உயிர்ப்பலி இடுதல் … Read more

குரு உபதேசம் 4504

அகத்தீசனை வணங்கிப்பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. வருகின்ற காலமெல்லாம் ஞானசித்தர் காலம் என்பதினாலே உயிர்ப்பலியிடும் கோவில்களுக்கு மக்கள் செல்வதும், சிறுதெய்வ வழிபாடுகளும், வழக்கொழிந்து போய்விடும் என்பதினாலே எல்லாவிதமான சிறுதெய்வங்களும் ஆறுமுகனாம் முருகப்பெருமானின் ஆணைக்கு கீழ் வருவதினாலே சிறுதெய்வ வழிபாட்டில் பயனேதும் இனி இருக்காது. அச்சிறு தெய்வங்களின் பெயரினிலே உயிர்ப்பலி இட்டால், பெரும் பாவம் சூழ்ந்து பாழ்நரகினை அடையவும் நேரும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4503

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்… கோடானு கோடி யுகங்கள் தவமாய் தவமிருந்து முற்றுப்பெற்ற முருகப்பெருமான் கருணையே வடிவானவர். எத்தகைய கொடும் பாவிகளையும் மன்னித்து அருள்செய்யும் தயவே வடிவான தனிப்பெரும் தெய்வம், ஆனால் இக்கலிகாலத்தினில் நடந்துள்ள கொடுமைகளை கண்டு தயவுடை தனிப்பெரும் தெய்வம் முருகப்பெருமானே பொறுக்க முடியாமல் கொடுமைகளை களைய முருகனே அவதாரமாக நேரில் தோன்றி கொடுமைகளை கட்டுப்படுத்த துவங்கி விட்டான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4502

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தர்மத்தின் தலைவன் முருகப்பெருமானை வணங்கி பூஜித்தால், பூஜிக்கின்ற மக்களுக்கு ஒரு போதும் துன்பம் வராது. தர்மம் செய்யும் தர்மவான்களுக்கு இடையூறு வருவது, பெறுவோரின் வினை மிகுதியைத்தான் குறிக்கிறது. கலியுக மாயையுள் ஆட்பட்டும், உயிர்க்கொலை செய்து புலால் உண்போர் தர்மம் ஏற்பதால், கலியுகத்தின் பாவச்சுமை தர்மவான்களை சிறிது துன்புறுத்தினாலும், தர்மவான்களுக்கு எந்த இடையூறும் வாராது, முருகன் காப்பான் என்பதையும் தர்மத்திற்கு வேண்டுமானால் கலியுகத்தில் இடையூறு வரலாம். ஆனால் முருகனை நம்பிய தர்மவான்களுக்கு ஜீவதயவுடைய மக்களுக்கு … Read more