தினம் ஒரு அகவல் 13
13.ஒளவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர் அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி ஒளவியம் ஆதியோர் ஆறும் தவிர்த்த பேர் அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி ! மனிதர்களின் ஆன்மீக வாழ்க்கைக்கும், இறைவனை அடைவதற்கும் தடையாக உள்ள பொறாமை முதலான ஆறு குணக்கேடுகளை (பொறாமை, காமம், குரோதம், லோபித்தனம், மோகம், மதம்) நீக்கி உள்ளம் தூய்மையாக இருப்பவர்களால்தான், பேரொளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர்ந்து துதிக்க முடியும்.


