admin
குரு உபதேசம் 4381
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஏழை எளிய மக்களுக்கு கருணை காட்டக்கூடிய பண்புடைய மக்களைக் கொண்டு முருகப்பெருமான் தலைமை தாங்கி இவ்வுலகை வழி நடத்தி ஆட்சி செய்வார் என்பதை அறியலாம். …………….. காக்கும் கடவுள் கந்தனைப் போற்றிட நோக்கம் அனைத்தும் நொடியில் சித்தியே.
குரு உபதேசம் 4380
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றவர்கள் புண்ணிய பலத்தை பெற்றும் முருகனது அருளை முழுமையாகப் பெற்றும் இனி பிறவா மார்க்கமாகிய மரணமிலாப் பெருவாழ்வை அடையலாம் என்பதை அறியலாம். முருகனது ஆசியைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டும் வருவதோடு, எந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு உதவி செய்கின்றோமோ அந்த அளவிற்கு ஜீவதயவு பெருக்கம் அடையுமென்றும், எந்த அளவிற்கு உயிர்கள் மகிழ்வுறுகிறதோ அந்த அளவிற்கு அறிவு … Read more
குரு உபதேசம் 4379
முருகனது திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் ஆசியைப் பெற வேண்டுமானால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் முருகனது அருளால் வருகின்ற ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறலாம் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4378
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உலகிலுள்ளோர்க்கு வருகின்ற இடையூறுகளை அறியவும், அதை தீர்க்கவும் முடிகின்ற வாய்ப்பையும் முருகனருளால் பெறலாம். …………….. பாசமாம் பசுவும் பதியில் ஒன்றிடில் ஆசற்ற வாழ்வும் அருளும் முக்தியே. அகிலம் போற்றும் ஆறுமுகப்பெருமானே மகிழ ஆட்சி செய்வான் மண்ணுலகம் செழிக்க.
குரு உபதேசம் 4377
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் அற்புதமான ஒரு சொர்க்கமயமான ஆட்சியாக மாறுகின்ற ஞானசித்தர்கள் ஆட்சியிலே, பருவமழை தவறாது பெய்து உலகெங்கும் செழிக்கின்ற ஆட்சியிலே, சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம், சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்றும் எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக எண்ணும் பொதுநிலை ஆட்சியிலே எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழும் அற்புத வாழ்வினை வாழ்கின்றதானதும் இதுவரை இந்த பூவுலகமே காணாத ஒரு அதிசய அற்புத ஞான ஆட்சியிலே … Read more
குரு உபதேசம் 4376
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. காமதேகத்தினில் உள்ள அந்த அற்புத சக்தியை முருகனருளால் தட்டி எழுப்பி செயல்படுத்த துவங்கினால் மும்மலக் கசடுடைய காமதேகத்தை அச்சக்தி வென்று இந்த மானுட தேகத்தையும் அற்புத தேகமாக மாற்றி ஒளி உடம்பாக்கிவிடும் என்பதையும் அறியலாம். முருகனது அருள் கூடினால் ஞானம் பெறலாம். முருகனது அருளைப் பெற வேண்டுமாயின் இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு செலுத்திட வேண்டும். அன்பு செலுத்த செலுத்த, செலுத்துவோர்க்கு ஜீவதயவை பெருக்கும், ஜீவதயவு பெருக … Read more
குரு உபதேசம் 4375
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இவ்வுலகினிலே மனிதர்களை மனிதர்கள் ஆட்சி செய்து செய்து, ஏராளமான வகையிலே ஒருவரை ஒருவர் அதிகாரத்தாலும், பணபலத்தாலும், ஆள்படையின் துணையினாலும் அளவு கடந்த வகையிலே துன்பப்படுத்தி விட்ட காரணத்தாலே பண்புடையோரும், பக்தர்களும், பத்தினி பெண்டிரும், பஞ்சபராரிகளும் துன்பம் தாளாது மனதினுள் இறைவனை அழுது தொழுததினாலே, எல்லாம்வல்ல இறைவன் முருகப்பெருமான் மனமிரங்கி இவ்வுலகினில் வெகுவிரைவில் ஞானஆட்சியை ஞானிகள் தலைமையிலே அமைக்க இருக்கிறார் என்பதை அறியலாம். ஞானஆட்சியிலே ஜீவதயவே அடிப்படையாக இருக்கும் என்பதையும், … Read more
குரு உபதேசம் 4374
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானின் திருவடிகளை உலக மக்கள் எந்த அளவிற்கு வணங்குகிறார்களோ, முருகப்பெருமான் தலைமையை எந்த அளவிற்கு மக்கள் விரைவில் ஏற்கிறார்களோ, முருகப்பெருமானை ஞான ஆட்சி அமைக்க எந்த அளவிற்கு மக்கள் மனம் உருகி அழைக்கின்றார்களோ, அந்த அளவிற்கு முருகப்பெருமான் விரைந்து வெளிப்பட்டு இவ்வுலகினில் ஞானியர் கூட்டம் புடைசூழ தேவாதி தேவரெல்லாம் ஒன்றுகூடிய ஞான ஆட்சியை இவ்வுலகினில் அமைப்பான் என்பதை உணரலாம். உலக மக்களே! அழையுங்கள் ஆறுமுகனை ஆட்சி அமைக்க. உலக … Read more