admin
தினம் ஒரு அகவல் 464
காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல் ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 464 காற்றிடைப்பூ இயல் கருதுறு திறவியல் ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி கருதுறு – கருதி ஆராயப்படும் திறவியல் – திறன்களின் இயல்பு காற்று வீசப்படும் பூமியின் தன்மையை இயல்பாக பொருந்தி வீசக்கூடிய இயல்பான ஆற்றலை அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி.
தினம் ஒரு அகவல் 462
காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல் ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி – 462 காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல் ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி காற்றின் தன்மைகளாக அசைவு, கலை (சுவாசம், யோகம்), உயிர் (பிராணன்) போன்ற இயல்புகளை சக்தியாக அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !
தினம் ஒரு அகவல் 460
தீயியல் பலபல செறித்ததிற் பலவும் ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 460 தீஇயல் பலபல செறித்து அதில்பலவும் ஆய்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி பஞ்சபூத தத்துவத்தின் மூன்றாம் நிலையில் உள்ள நெருப்பு தத்துவத்தின் இயல்பான செயல்களையும், சூழ்நிலைக்கேற்ப பல பலன்களையும் அமைத்து கொடுத்த அருட்பெருஞ்ஜோதி.
தினம் ஒரு அகவல் 458
தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல் ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 458 தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுஇயல் ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி நெருப்பு உலக பொருள்களை உருக்கும் தன்மையையும், அக்னியாக உடல் கழிவுகளை உருக்கும் தன்மையையும் அமைத்த அருட்பெருஞ்ஜோதி.
தினம் ஒரு அகவல் 456
தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம் ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 456 தீயினில் பக்குவம் சேர்குணம் இயல்குணம் ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி நெருப்பின் பக்குவம் என்பது இணையும் பொருள்கள் மற்றும் செயல்களில் வெவ்வேறு நிலைகளை அடையும் வகையில் அமைத்த அருட்பெருஞ்ஜோதி.
தினம் ஒரு அகவல் 454
தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன் ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 454 தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன் ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி நெருப்பு பல நிலைகளில் மாற்றம் பெறுகிறது. ஒவ்வொரு நிலையிலும், அதற்கு ஏற்றது போல் செயல்பட்டு அந்த செயலுக்கு உண்டான பலன்களை தருமாறு அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி.
தினம் ஒரு அகவல் 452
தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி – 452 தீயிடை உயிர்பல திகழ்உறு பொருள்பல ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி பஞ்சபூத சக்திகளே உயிர்கள் பல தோன்றுவதற்கும், வாழ்வதற்கும் மூல ஆதாரம். சூரியன் இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாது. உயிர்கள் இயக்கம் பெற மூல ஆதாரமாய் நெருப்பினை அமைத்த அருட்பெருஞ்ஜோதி.


