Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 456

தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம் ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 456   தீயினில் பக்குவம் சேர்குணம் இயல்குணம் ஆய்பல வகுத்த  அருட்பெருஞ்ஜோதி   நெருப்பின் பக்குவம் என்பது இணையும் பொருள்கள் மற்றும் செயல்களில் வெவ்வேறு நிலைகளை அடையும் வகையில் அமைத்த அருட்பெருஞ்ஜோதி.

தினம் ஒரு அகவல் 454

தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன் ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 454   தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன் ஆய்பல வகுத்த  அருட்பெருஞ்ஜோதி   நெருப்பு பல நிலைகளில் மாற்றம் பெறுகிறது. ஒவ்வொரு நிலையிலும், அதற்கு ஏற்றது போல் செயல்பட்டு அந்த செயலுக்கு உண்டான பலன்களை தருமாறு அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி.

தினம் ஒரு அகவல் 452

தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி – 452   தீயிடை உயிர்பல திகழ்உறு பொருள்பல ஆய்வகை அமைத்த  அருட்பெருஞ்ஜோதி   பஞ்சபூத சக்திகளே உயிர்கள் பல தோன்றுவதற்கும், வாழ்வதற்கும் மூல ஆதாரம். சூரியன் இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாது. உயிர்கள் இயக்கம் பெற மூல ஆதாரமாய் நெருப்பினை அமைத்த அருட்பெருஞ்ஜோதி.

தினம் ஒரு அகவல் 450

தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள் ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 450   தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள் ஆய்பல வகுத்த  அருட்பெருஞ்ஜோதி   நெருப்பு என்னும் ஆற்றலை வைத்து அதில் பல ஆக்கங்களை உருவாக்கும் தன்மைகளையும், அக்னி என்னும் ஆற்றலை கொண்டு அதில் நுட்பமான சித்திகளை விளைவிக்க ஏதுவாகவும் அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி.

தினம் ஒரு அகவல் 448

தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும் ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 448   தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும் ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி   வேதங்களில் கூறப்பட்டு இருக்கும் யாகங்களிலும், வேள்விகளிலும், சித்தாந்தத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஞான தத்துவங்களிலும் நெருப்பின் ஆற்றல் அறியப்படுகின்ற வகையில் அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி.

தினம் ஒரு அகவல் 446

தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 446   தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல ஆய்உற அமைத்த  அருட்பெருஞ்ஜோதி   நெருப்பில் பல சித்துக்கள் பொருந்தி அமைந்துள்ளது. உடல் வெப்பம் என்பது இயற்கையான ஒன்று. யோக நிலையில் அந்த வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதும், ஞான நிலையில் அக்னியை ஒருமுகப்படுத்தி பயன்படுத்துவதும் போன்ற சித்திகளின் மூலமே நெருப்பு என்ற பஞ்சபூதம் என்பது குறிப்பிடத்தக்கது

தினம் ஒரு அகவல் 444

தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 444   தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி   நெருப்பின் தத்துவமே எந்த பொருளானாலும், அது இணையும் போது அதை பொசுக்கும் தன்மையே. அதுவே உயர்வு தாழ்வு இல்லாத சமநிலையாகும். அந்த சமநிலையிலும் மேன்மையாக விளங்கும் நடுநிலைமையையும் அமைத்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 442

தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி – 442   தீயிடை மூவியல் செறிவித்து அதில்பல ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி   மூவியல் – அக்னி, வெப்பம், சூடு நெருப்பின் கண் மூன்று இயல்புகளைப் பொருந்தச் செய்து, அந்த இயல்புகளிலிருந்தும் மேலும் பல வகையான நுண்ணிய இயல்புகளையும், பிரிவுகளையும் ஆராய்ந்து அறியும்படி அமைத்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!