Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4543

முருகனை வணங்கிட: சதானந்த நிலை நின்று அருட்பெருஞ்ஜோதி வடிவினனாகி எண்ணிலா கோடி பரந்து விரிந்து அருள் பிரகாசமாய் சொல்லொண்ணா பேரானந்த நிலை நின்று அருளும் முருகப்பெருமான் அமைதியுடன் பேரானந்த நிலை நின்று அருள் புரிகின்றனன். பேரானந்த நிலை நிற்கும் முருகனை அழைத்தாலன்றி நம்மீது அவன்தன் அருட்கண் பார்வை திரும்பாது. இவ்வுலகினிலே உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு ஜீவதயவின் வழியில் தூய நெறி வழி நடந்து, எவ்வுயிருக்கும் தீங்கு நினையாது உள்ள மென்மையான … Read more

குரு உபதேசம் 4542

அகத்தீசனை வணங்கிட: பசியுள்ள பிள்ளைகள் தாயிடம் உணவு கேட்டால் தருவாள். ஆயிரம் ஆயிரம் தாயினும் மிக்க தயவுடை தனிப்பெருங்கருணை மிக்க ஞானிகள் திருவடி பணிந்து பத்தினி பெண்டிரும், பக்தர்களும், யோகிகளும், பஞ்சபராரிகளும், பாதிக்கப்பட்டோரும், பண்புள்ளோரும் நலம் பெற வேண்டுகோள் வைத்து, வேண்டுகோளை கேட்டால்தான் தருவான் தனிப்பெருங்கருணையுடைய ஞானிகளெல்லாம். கேட்டால்தான் பெறலாம் என்பதையும் கேட்காவிட்டால் ஞானிகள் எப்படி அருள் செய்ய முடியும். ஆதலினால் இடைவிடாது தனக்காகவும், தன்னை சார்ந்தவர்களுக்காகவும் உலக நன்மைக்காகவும் தொடர்ந்து திருவடி பூஜைகளை செய்ய வேண்டுமென்றும் … Read more

குரு உபதேசம் 4541

முருகனை வணங்கிட: உலகத்தில் அதர்மம் மிகுதியாகும் போதெல்லாம் ஞானத்தலைவன் முருகப்பெருமானே விஷ்ணுபகவானாகவும், அகத்தியராகவும், அவதாரங்களாகவும் தோன்றி அதர்மத்தை அழித்து நீதியை நிலை நாட்டினான் என்பதை அறியலாம். தாயினும் மிக்க தயவுடை தனிப்பெருங்கருணை தெய்வம் முருகப்பெருமானே வேற்படை கொண்டு அதர்மத்தை அழித்து பண்புடையோரை காப்பான் என்பதையும் அறியலாம். பொல்லா மாமாயை சூழ் கலியுகம் காக்க மக்களை மீட்க ஞானயுகம் அமைக்க அவனே ஞானியாக அரங்கர் வடிவினில் அவதரித்துள்ளதையும் அறியலாம். பூரணமாக பூவுலகை ஆளவே வாரணக்கொடியோன் வருவான் உண்மையே.

குரு உபதேசம் 4540

அகத்தீசனை வணங்கிட: நீசர்களாகிய கயவர்களால் பண்புடையோர்கள் பாதிக்கப்படுவதையும் பஞ்சபராரிகள் பாதிக்கப்படுவதையும் ஞானிகள் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4539

முருகனை வணங்கிட: சிற்றின்பத்தில்தான் பேரின்பம் உள்ளதென்பதை முற்றும் உணர்ந்து சிற்றின்பத்தினை வென்று பேரின்பத்தை அடைந்து முற்றுப்பெற்ற முதல் முனிவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து கொள்ளலாம். பேரின்ப நிலை எய்திய முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றினாலன்றி சிற்றின்பத்தின் இயல்பையோ, பேரின்பத்தின் இயல்பையோ அறிய முடியாது என்றும், சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்தை அடையும் வழிமுறையையும் அறிய முடியாது என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டு பேரின்பமளிக்கும் அதிகாரம் முருகப்பெருமான் ஒருவனுக்கே உண்டென்பதையும் அறிந்து கொள்ளலாம். அணுக அணுக அருளும் உபதேசம் அணுக அணுகவே ஆனந்தமாமே.

குரு உபதேசம் 4538

அகத்தீசனை வணங்கிட: எந்த அளவிற்கு ஞானிகள் நாமத்தை நாமஜெபம் செய்கின்றோமோ அந்த அளவிற்கு குணக்கேடுகளைப் பற்றி அறியவும் அவற்றை நீக்கிக் கொள்ளவும் வேண்டிய அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் 4537

அகத்தீசனை வணங்கிட: சிற்றின்பத்திற்கு காரணமாக இருக்கின்ற தூய்மையற்ற காமதேகத்தை தவ முயற்சியால் சுத்தி செய்தால் அந்த தேகமே சுத்தமாகி என்றும் அழியாத பேரின்பத்தை தரக்கூடிய ஒளி தேகமாக மாறும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4536

அகத்தீசனை வணங்கிட : என்றும் அழிவிலாது நிலைப்பெற்றுள்ள தமிழை கற்கவும், பரப்புவதும் தன் கடமை என எண்ணுகின்ற அறிவைப் பெறலாம்.