Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4234

முருகனை வணங்கிட : தன்னையறிந்து தன்னை வென்ற தகைமை பெற்ற முருகனை பூஜித்து ஆசி பெற்ற மக்கள் கோடானுகோடிபேர். இன்னும் பலகோடி மக்கள் அவனது அருள் திருவடிகளை பூஜித்து ஆசி பெற இருக்கிறார்கள். அப்படி ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக் கூடியவர்களில் நாமும் ஒருவனாக இருந்து முருகனது திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற உண்மை ஞானவழிதனை தெரிந்து பூஜிப்பான். தன் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்ற மக்களுக்கு அருள் செய்யக்கூடிய ஆற்றல் முருகப்பெருமானுக்குத்தான் உண்டு … Read more

குரு உபதேசம் 4233

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பால பருவம், வாலிப பருவம், முதுமைப் பருவம் ஆகிய மூன்று நிலைகளும் உண்டாகி இறுதியில் அனைத்தும் அழிந்து போவதும் இயற்கையால் வந்தது என்றும், இயற்கையால் விதிக்கப்பட்ட இந்த பருவங்களை கடந்து மாற்றி, என்றும் மாறாத அழிவில்லாத இளமைப் பருவத்தை அடையலாம் என்பதையும் அதுவே மரணமிலாப் பெருவாழ்வாகிய பெருநிலை என்பதையும், அதை தவ முயற்சியால், தயவின் துணையால் அடையலாம் என்பதையும் முதன் முதலில் முருகப்பெருமான் தான், இத்தவத்தை கண்டு பிடித்தார் என்பதையும் … Read more

குரு உபதேசம் 4232

முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : காமுகனாகவும், பொருள் பற்றுடையவனாகவும் உள்ள பொய் வேடதாரிகளை இனம் கண்டு அவர்களை கட்டுப்படுத்தியும் பண்புள்ள இல்லறத்தானுக்கு உரிய பாதுகாப்பு தருவதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். போலி வேடதாரி ஆன்மீகவாதிகளால் நாட்டில் பருவமழை தவறும், மூடப்பழக்கங்கள் நாட்டில் அதிகமாகும், உண்மையான தெய்வபக்தி குறைந்து விடும், பாவங்கள் அதிகமாகி உலகம் இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் உண்டாகும் என்பதையும் அறியலாம். தெய்வத்தின் பெயரால் பொருளைப் பறிப்பதே குறிக்கோளாய் கொண்டும் … Read more

குரு உபதேசம் 4231

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சத்தும் அசத்துமாய் இருக்கின்ற உடம்பை ஒரு மென்மையான வேதியியல் செய்து சத்தையும் அசத்தையும் பிரித்தெடுக்கக் கூடிய வல்லமையை பெறலாம் என்று அறியலாம். உடம்பிலுள்ள சத்தையும் அசத்தையும் பிரித்து சத்தை தன்வயமாக்கிக் கொள்ளவும் அசத்தை நீக்கவும் விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொள்வதோடு எண்ணம், சொல், சிந்தை, செயல் என அனைத்திலும் சைவமாக இருந்து சுத்த சைவராக விளங்கி தினம் தினம் காலை, மாலை, இரவு என … Read more

குரு உபதேசம் 4230

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவனது குடும்பமே பெருமைக்குரிய குடும்பமாக மாறும். செந்திலம் பழனி குன்றம் திருத்தணி வடமலைவாழ் விந்தையாய் நடனம் செய்யும் வித்தகன் திருவடியை விரும்பியே போற்றுவோம்.

குரு உபதேசம் 4229

முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட : செல்காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய இக்காலத்தையும் அறிகின்ற அறிவைப் பெறலாம். தன்னையே அறியக் கூடிய பண்பையும் பெறலாம். தினைப்பொழுது அளவேனும் திருவடியை சிந்திக்க நினைத்தவை அனைத்தும் நிச்சயம் நடைபெறும்.

குரு உபதேசம் 4228

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி, தொடர்ந்து பூஜை செய்யசெய்யத்தான் முருகப்பெருமான் தான், ஞானத்தின் கடவுள் என்றும், யாருக்கும் எளிதில் அகப்படாத முருகனே ஞானத்தலைவன், அவனே அனைத்திற்கும் காரணமாகியுள்ளான் என்பதையும் உணர்ந்து முருகனது திருவடி துணையின்றி யாதொன்றும் ஆகாது என்பதையும் அறிந்து தெளியலாம். தெளிந்து தொடர்ந்து பூஜை செய்ய, பூஜை செய்ய முருகனது திருவருளை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

குரு உபதேசம் 4227

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு நொடிக்குள் உலகினில் உள்ள எல்லா செயல்களையும் அறிந்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் அற்புதமான ஆற்றல் உடையவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். உலகத் தலைவன் ஓங்கார நாதனே கலகத்தை அடக்கி காப்பான் உலகையே. சுந்தர வேலவன் தொல்புவி ஆண்டிட வந்திடும் நல்வாழ்வு வளமே. – மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

குரு உபதேசம் 4226

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனி வரும் காலங்களில் முருகப்பெருமானின் தலைமையில் உள்ள ஞான ஆட்சியிலே மக்கள் பிரச்சனைகள் எல்லாம் உடனுக்கு உடன் ஆராய்ந்து பார்த்து தீர்த்து வைக்கப்படும் என்பதை அறியலாம். பலமான வேலவன் பாருலகை ஆண்டிட நலம்பல உண்டாகும் நாட்டிற்கே. – மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.