Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4405

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது திருவடி பற்றி ஆசிபெற்று ஆட்சி பொறுப்பிலே அமர்ந்து ஆட்சி செய்வோர் முருகனது பிரதிநிதிகளாக செயல்படுவதினாலே அந்த ஆட்சியிலே மக்கள் அரசிற்கு கட்டும் வரிப்பணமெல்லாம் சிவன் கொடுத்த பொருளாய் எண்ணி, சிவன் சொத்தாக போற்றப்படும். பொது சொத்தை அபகரித்தல் என்பது சிவன் சொத்தை அபகரிப்பதாக எண்ணப்பட்டு கடும் தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து பொது சொத்தை சிவன் சொத்தாகவும், மக்கள் வரிப்பணத்தை சிவன் சொத்தாகவும் போற்றி பாதுகாப்பார்கள். முருகனது … Read more

குரு உபதேசம் 4404

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உடம்பே ஞானத்தை அடைய கருவியாகவும் காரண கருவியாகவும், காரிய கருவியாகவும் உள்ளதை அறியலாம். எந்த உடம்பு பல ஜென்மங்களாக தொடர்ந்து செய்திட்ட பாவங்களினால் ஞானம் அடைவது தடைபட்டதோ அந்த உடம்பின் துணை கொண்டே புண்ணியங்களை செய்ய செய்ய, தருமங்களை செய்யவும், சிந்தித்தும் அவரவர் கையால் கொடுத்தும் பழக பழக தீமைசெய்து பழகிய தேகம், நன்மை செய்ய பழகியதால் பாவம் ஒழிந்து புண்ணியம் பெருகும். புண்ணியம் பெருக பெருக மெய் … Read more

குரு உபதேசம் 4403

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நல்வினை தீவினையில் நம்பிக்கையும், அன்னதானத்தில் நம்பிக்கையும் சைவத்தில் நம்பிக்கையும் வைத்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற அறிவைப் பெறலாம். …………….. பாடுபெறும் முருகபிரான் பதத்தை போற்றிட வீடுபேறு உண்டாம் விரைந்தே.

குரு உபதேசம் 4402

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இகவாழ்வாகிய இல்லறத்திற்கும், பரவாழ்வாகிய ஞான வாழ்விற்கும் மற்றுமுள உலக நன்மைக்காக செயல்படுகின்ற அனைத்தும் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானின் அருளினால்தான் நடக்கின்றது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4401

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளை வணங்க வணங்க முற்றுப்பெற்ற ஞானியர் கூறிய உபதேசங்களை கேட்கவும், அறியவும், படிக்கவும், உணரவும் வாய்ப்புகள் ஏற்படும். கோளறுபதிகம், மகான் மாணிக்கவாசகரின் சிவபுராணம், ஒளவையாரின் விநாயகர் அகவல் போன்ற நிலையாமையை உணர்த்தும் ஞானிகளின் ஞான நூல்களை கற்கும் வாய்ப்பு உண்டாவதோடு நிலைப்பெற்ற வாழ்வாகிய மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கமும் புலப்படும். மரணமிலாப் பெருவாழ்வை அளித்து காக்க வல்லவன் முருகன்தான் என்பதையும் அறியவும் முடியும். முருகனை வணங்க வணங்க … Read more

குரு உபதேசம் 4400

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. உடம்பிற்கு ஆக்கமளிப்பது உணவு என்பதும், உயிருக்கு ஆக்கமளிப்பது பக்தியும், புண்ணியமும் என்பதை அறியலாம். உடம்பை ஆக்கம் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? உயிரை ஆக்கம் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பதையும் உணர்த்துவான். முருகப்பெருமானை வணங்க வணங்க உடம்பும் தேவைதான் உயிரும் தேவைதான் என்பதையும், தனி உடம்பும் இயங்காது, தனி உயிரும் இயங்காது என்பதையும் அறியலாம். உடம்பின் வழியில்தான் உயிர் ஆக்கம் பெறும் என்றும், உயிரினால்தான் உடம்பும் நிலைப்பெறும் … Read more

குரு உபதேசம் 4399

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி செய்கின்ற பூஜைகளே சாகாக்கல்வியைத் தரும் என்றும் முருகனது திருவடிகளை மனமுருகி பூஜித்து பூஜித்து நிலையில்லாததையும் நிலையானவற்றையும் அறிந்து நிலையில்லாததை விட்டு விலகி நிலையான ஒன்றைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான், பாசமெனும் மயக்கத்தில் வீழ மாட்டான்.

குரு உபதேசம் 4398

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானயுகமான ஞானசித்தர்கள் ஆட்சியிலே ஞானிகளின் மூத்த தலைவனும், முதல்வனுமான ஞானபண்டிதனே நேரில் அவதாரமாக தோன்றி அருள்பாலிப்பதை அறிந்து கொள்வதோடு ஞான ஆட்சி காலமதிலே பண்புடையோர், பத்தினி பெண்கள், ஆதரவற்றோர், பஞ்சபராரிகள் என அனைவரும் ஞானவான் முருகனாலும் சித்தர்களாலும் காக்கப்படுவார்கள் என்பதையும் அராஜகம் செய்வோர், பொது சொத்தை அபகரிப்போர், லஞ்சம் வாங்குவோர், கலப்படம் செய்வோர், வஞ்சனை செய்வோர், நீதிக்கு புறம்பாக நடப்பதும், தீமைகள் புரிகின்ற அனைவரும் ஞானிகளால் கட்டுப்படுத்தப்பட்டு இவ்வுலகம் … Read more

குரு உபதேசம் 4397

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பண்புடையவர்களது நட்பு அமையும், நல்ல சூழ்நிலையில் வீடு அமையும், பண்புள்ள மனைவியும், பண்புள்ள புத்திரபாக்கியமும் ஏற்படும், பண்புடைய சுற்றமும் உண்டாகி, எதையும் ஆழ்ந்து சிந்திக்கின்ற அறிவும், ஞானத்திற்குரிய பரிபக்குவமும் உண்டாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான தக்க சூழ்நிலையும், சற்குரு, சொற்குருவின் தொடர்பும், ஆசியையும் பெறுகின்ற அற்புதமான வாய்ப்பும் அமையப் பெறுவார்கள்.