குரு உபதேசம் 4626
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இயற்கை கடவுள் மனிதனை படைக்கும்போது அவனுள் அற்புத சக்தியினை வைத்து படைத்துள்ளான் என்பதை அறியலாம்.
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இயற்கை கடவுள் மனிதனை படைக்கும்போது அவனுள் அற்புத சக்தியினை வைத்து படைத்துள்ளான் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. கடவுள் முருகன்தான் என்பதை அறியும் உண்மை அறிவைப் பெறலாம். உண்மைக் கடவுளான முருகனை மனமுருகி பூஜிக்கும் வாய்ப்பை பெறலாம், சைவத்தை கடைப்பிடிக்க தக்க சூழ்நிலையும், மன உறுதியும் பெறலாம். சைவத்தை தடையின்றி கடைப்பிடிக்கலாம். அன்னதானம் செய்வதற்குரிய வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெற்று புண்ணியவானாகலாம். புண்ணியத்தைப் பெருக்கி பெருக்கி, மரணமிலாப் பெருவாழ்வை அடைகின்ற மார்க்கத்தையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானத்தலைவன் முருகப்பெருமானே கடவுள் என்றும், அவனது ஆசியை பெற்றிட்டால், மரணத்தை வென்ற மகான்களான நவகோடி சித்தரிஷி கணங்கள் ஆசியையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.
அகத்தீசனை வணங்கி பூஜித்திட்டால்…. தினம் தினம் கடவுளை பூஜை செய்வது நன்மையை தரும். ஆயினும், அதனினும் நன்மை தரக்கூடியது பிற உயிரை கொன்று தின்னாதிருத்தல், சுத்த சைவ உணவை மேற்கொள்ளல். அதனினும் நன்மை தருவது பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தல் என்பதை அறியலாம்.
அகத்தீசனை வணங்கி பூஜித்திட்டால்…. ஜீவதயவிற்குரிய அறிவு வரும், உயிர்க்கொலை தவிர்த்து புலால் உண்ணக் கூடாது என்கிற நல்லறிவு உண்டாகும். சைவஉணவை மேற்கொள்ளவும் நல்ல உறுதியுள்ள மனம் உண்டாகி சைவத்தில் நம்பிக்கையும் பாவபுண்ணியத்தின் மீது நம்பிக்கையும் உண்டாகி கடவுள் நம்பிக்கையும் உண்டாகும்
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தக்க ஆசானின் துணையைப் பெறுவார்கள், ஆன்மீகத்தில் முன்னேறி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு மேல்நிலை அடைய முயற்சித்தாலும் தக்க ஆசானின் வழிகாட்டல் இல்லாவிடில் எந்தவிதத்திலும் முன்னேற முடியாது என்பதை அறியலாம்.
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. புண்ணியமும் அருள்பலமும் உள்ள மக்களுக்குத்தான் ஞானசித்தர் கால ஞான ஆட்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…. ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்து, காப்பாற்றிக் கொண்டிருப்பவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம். முருகப்பெருமானின் ஆசிபெற விரும்பினால் அவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு எவன் தொண்டு செய்கின்றானோ அவனுக்கு ஞானவாழ்வை தந்து, மரணமிலாப் பெருவாழ்வையும் தருவான் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம்.