Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4350

முருகப்பெருமான் திருவடி பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால் : கடவுள் நம்பிக்கை உண்டாகும், அன்னதானம் செய்வதற்கு உண்டான வாய்ப்புகள் வரும். பாவபுண்ணியத்தில் நம்பிக்கை வரும் என்பதை அறியலாம். ……………… ஆற்றின் மணலை அளவிடினினும் ஆறுமுகனின் பேற்றை அறிய பெரும்பாடாகுமே! ஆற்றலாம் முருகனின் அருளைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். அருளாளன் முருகனின் அருளைப் போற்றவே இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.

குரு உபதேசம் 4349

முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கருணையே வடிவானவனும் ஒரு நொடியிலே உலகை வலம் வரும் ஆற்றல் உடையவனான முருகப்பெருமானின் நாமங்களை சொல்லாவிடில் அவனுக்கு வாழ்க்கையே இல்லை என்பதை உணரலாம். ……………… அற்புத முருகனின் அருளை அறியவே கற்பதே கற்ற கல்வியின் பயன்.  

குரு உபதேசம் 4348

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : நீதியின் தலைவன், சமநீதி உடையோன், தயாநிதியும், தயவே வடிவானவனுமான முருகப்பெருமான் சர்வஆற்றல் பெற்றவன். முருகனது ஆட்சியிலே நீதி காக்கப்படும், தர்மம் காக்கப்படும், ஏழை எளியோர், பஞ்சபராரிகள், பண்புள்ளோர், பத்தினி பெண்கள், நலிவுற்றோர், பக்தர்கள் என அனைவரும் கலியுக துன்பங்களிலிருந்து முருகனருளால் மீட்கப்பட்டு கடைத்தேற்றப்படுவார்கள். நீதிக்கு புறம்பாக நடப்பதோ, நடக்கத் தூண்டுவதோ, இனி முருகனருளால் ஒடுக்கப்பட்டு எங்கும் சமதர்ம சமநீதி உண்டாகுவதோடு பாவிகள் அஞ்சி நடுங்கும்படியான சூழ்நிலை … Read more

குரு உபதேசம் 4347

முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஒரு செயலை செய்வதற்கு முன்னரே தாம் செய்யும் செயலிலே உள்ள நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்ந்து உணர்ந்து தெளிந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வான்.

குரு உபதேசம் 4346

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இனி வெகு விரைவில் உலகப்பெருமாற்றம் குறுகிய காலத்திற்குள்ளாகவே நடந்து விடும் என்பதை அறியலாம். ஞானசித்தர்கள் ஆட்சி நடக்கின்ற ஞானயுக ஆட்சி காலத்திலே சித்தர் பெருமக்களே ஆட்சி நடத்துகின்றவர்களை சார்ந்து ஆட்சி நடத்துவார்கள் என்றும் இறைவனே மனிதனைச் சார்ந்து நடத்துகின்ற ஒரு புரட்சிகரமான அற்புதமான ஞானஆட்சி காலத்திலே ஜாதிகளும் மதங்களும் இவ்வுலகினில் இருக்காது என்பதும், ஜாதியை, மதத்தை விரும்புவோர் ஜாதி, மதத்தின் பெயரால் பாகுபாடு பார்த்தல் கூடாது என்றும், … Read more

குரு உபதேசம் 4345

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மனிதனாக பிறந்து விட்டால் மட்டும் போதாது அவன் உண்மையிலேயே மனிதனாக ஆக வேண்டும். மனிதனாக பிறந்தவன் தம்மை வழி நடத்துகின்ற தலைவன் முருகனின் நாமங்களை ஏதேனும் ஒருவிதத்தில் பார்த்தோ, பார்த்து படித்தோ, கேட்டோ அல்லது முருகனது பெயர்களை கூவி அழைத்தோ முருகனின் நாமத்தை எந்த வகையாயிலும் எப்போது கூற ஆரம்பிக்கின்றானோ அப்போதுதான் அவன் மனிதனாகவே ஆகிறான். அதுவரை அவன் மனிதனாக பிறந்தாலும் ஜீவதயவின் தலைவனை அழைத்திடாத பட்சத்தில் … Read more

குரு உபதேசம் 4344

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பாசமாகிய சந்திர கலையையும், பசுவாகிய சூரிய கலையையும், பதியாகிய சுழிமுனையில் அறியச் செய்து பதியாகிய சுழிமுனையில் தானும் ஒடுங்கியிருந்து அருள் செய்வான் முருகப்பெருமான் என்று அறியலாம். இந்த வாய்ப்பை பெற விரும்புகின்றவர்கள் தயவே வடிவான முருகனின் அருளை முழுமையாகப் பெற்றால்தான் கடைத்தேற முடியும். தயவின் தலைவன் முருகனது அருளைப் பெற முதலில் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினமும் காலை … Read more

குரு உபதேசம் 4343

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற : வெல்ல முடியாத காமத்தை வென்ற முருகனின் திருவடிகளைப் பற்றி பூசித்தாலன்றி காமதேகத்தை வெல்ல முடியாது என்பதை அறியலாம். …………….. கடந்தான் கந்தனின் கழலிணைப் போற்றிட கடக்கத் துணையாம் கந்தன் கழலே. அற்புத முருகனின் அருளைப் போற்றவே கற்பக விருட்சம் கைவசமாமே. ஆமாறு வேலவன் அருளைப் போற்றவே காமதேனும் கைவசமாமே. வஜ்ர வேலோனை வாழ்த்தி வணங்கிட அட்சய பாத்திரம் அவருக்கே சித்தியே.

குரு உபதேசம் 4342

முருகப்பெருமான் திருவடிப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு தயவுகாட்டி நன்மைகள் செய்ய செய்ய நன்மை பெற்ற உயிரினங்களின் மகிழ்ச்சியே நன்மை செய்தோருக்கு அறிவாக மாறி அதாவது தயவே அறிவாக மாறி மேலும் மேலும் வளர்ச்சி பெறுகிறது. தயவு பெருக பெருக அந்த அறிவே சிறப்பறிவாகிறது. தயவு மேலும் மேலும் மேலும் பெருகிட சிறப்பறிவு கூடி பிறப்பு, வாழ்தல், முதுமையடைதல், தளர்ச்சியடைதல், இறத்தல் என்பவையும் அவற்றினிடையே உள்ள தொடர்பும், அதன் சூட்சுமமும் தெளிவாக தெரிவதோடு … Read more