குரு உபதேசம் 4350
முருகப்பெருமான் திருவடி பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால் : கடவுள் நம்பிக்கை உண்டாகும், அன்னதானம் செய்வதற்கு உண்டான வாய்ப்புகள் வரும். பாவபுண்ணியத்தில் நம்பிக்கை வரும் என்பதை அறியலாம். ……………… ஆற்றின் மணலை அளவிடினினும் ஆறுமுகனின் பேற்றை அறிய பெரும்பாடாகுமே! ஆற்றலாம் முருகனின் அருளைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். அருளாளன் முருகனின் அருளைப் போற்றவே இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.


