Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4491

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. நாம் காணுகின்ற அனைத்தும் நிலையில்லாதது என்றும், அவை அழியக் கூடியது என்றும், அழியாமல் நிலைப்பது நாம் செய்கின்ற தானதருமங்களும், தர்மத்தலைவன் முருகப்பெருமானின் திருவடி பூஜைகளும் தான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4490

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மனிதனாய் பிறந்தவன், தான் கற்ற ஏட்டுக் கல்வியின் பயனால் பெரிய விஞ்ஞானியாக இருக்கலாம், பெரிய அறிவாளியாக இருக்கலாம், பெரிய தொழில் அதிபனாக இருக்கலாம், ஏன் இன்னும் அநேகம் அநேகம் திறமை உடையவராய் கூட இருக்கலாம். ஆனால் முருகனை வணங்காதவர்களுடைய அறிவு பொய்யறிவு, அவனது செல்வமும் அழியக்கூடிய செல்வமே. அதுவும் தமிழனாய் பிறந்தும் ஒருவன் முருகப்பெருமானை குருவாய் தெய்வமாய் ஏற்று வணங்காமல் பல்வேறு தெய்வங்களை வணங்குவதும் அல்லது தெய்வ நம்பிக்கையே இல்லாமல் … Read more

குரு உபதேசம் 4489

முருகப்பெருமான் திருவடிகளை வணங்கிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மன்னவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பது ஆன்றோர் வாக்கு. மக்களை வழிநடத்தி பாவியாகாது காத்து தருமத்தின் வழி மக்களை வழிநடத்தி சென்று நாடு செழிக்க, மக்கள் நலமுடன் வாழ, தன்னலமற்று தொண்டாய் தாம் ஏற்ற பதவியை பயன்படுத்தி ஆட்சி செய்ய வேண்டியவர்களில் சிலர் தடம் மாறி உயிர்க்கொலை செய்து புலால் உண்பவர்களாகவும், மது அருந்தி அறிவு மயக்கத்திற்கு உள்ளானவர்களாகவும், தர்மத்தின் வழி செல்லாது அதர்மம் புரிபவர்களாகவும், பதவியில் அமர்ந்து நாட்டினில் பாவச்சுமை … Read more

குரு உபதேசம் 4488

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. சடங்குகளை செய்வதினால் மட்டும் ஒருவர் சித்தி பெற முடியாது என்பதை எவ்வளவு வலியுறுத்தி கூறினாலும் பாவம் செய்திட்ட பாவிகளுக்கு உண்மை ஆன்மீகத்தில் நம்பிக்கை வராது. தாம் செய்வதே சரி எனும் உணர்வே மேலோங்கி நிற்கும். முன் செய்த பாவங்களால் தான் இப்படி நடக்கிறது என்பதை அறிந்து முன்செய்த பாவங்கள் தீர்ந்திட உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும். எல்லாம் தந்தருளும் … Read more

குரு உபதேசம் 4487

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. வரவிருக்கும் இயற்கை பேரழிவை, பிரளயத்தை தடுப்பதற்காக ஏற்படவிருக்கும் ஞானபண்டிதன் தலைமையினால் ஆன ஞானசித்தர் ஆட்சியிலே உயிர்க்கொலை செய்து புலால் உண்கிற உயிர்பலி பாவம் கொண்டோருக்கும், மது அருந்தி மதிமயங்கியவர்களுக்கும், பொருள்பற்று கொண்டவர்களுக்கும், வன்மனம் கொண்டோருக்கும், பழிவாங்கும் உணர்வு உடையவர்க்கும், மக்களிடையே பேதாபேதம் பார்த்து நீதி தவறுகிறவர்களும் ஆட்சிபொறுப்பிலே வாய்ப்பே இல்லை என்பதையும் முருகனது ஆட்சி முழுமையான ஆட்சி, ஜீவதயவுடைய ஆட்சி, பண்புள்ள ஆட்சி, மென்மையானதும் வலிமையானதுமான நீதிநெறி ஆட்சி, தர்மத்தின் ஆட்சி … Read more

குரு உபதேசம் 4486

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இதுநாள் வரை இவ்வுலகினில் நடைபெற்ற லஞ்சலாவண்யங்களெல்லாம் ஒழிந்து போகும், கலப்படம் செய்ய முடியாது, கொள்ளை கொலைகள் கடுமையாக தண்டிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும், விலைவாசிகளில் ஏற்றம் இருக்காது என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4485

முருகப்பெருமான் திருவடிபற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. ஏழைகள்பால் கருணை கொண்டோருக்கு பதவிகள் தாமே வரத்தான் செய்யும். அவர்கள் பதவிவகிக்கும் நாட்டில் பருவமழை தவறாது பெய்யும், நாடு செழிக்கும், எல்லா வளமும் பெருகும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4484

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முருகப்பெருமானை வணங்க வணங்க, வணங்குவோரிடம் உள்ள லோபித்தனம் மறையும். அன்னதானம் செய்வார்கள், ஜீவதயவை பெறுவார்கள், ஜீவதயவின் தலைவன் முருகனின் அருள்பார்வைக்கு ஆளாகுவார்கள். அதனால் செல்வம் மேலும் பெருகும், நீடிய ஆயுளும், மனவளமும், அருள்வளமும் பெருகும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் பெறுவார்கள். ……………… பிறப்பை அறுக்கும் பெருந்தகையாம் முருகனை சிறப்புடன் பூசிக்க சித்தியும் உண்டாம். உண்டாம் சித்தி ஓதி உணர்ந்திட கண்டவர் கண்ட கருத்து இதுவாகும்.