Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 224

கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி – 224   கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் ஆறியல் என உரை அருட்பெருஞ்ஜோதி !   உயிர்களின் அறிவுக் கோட்பாட்டின்படி உள்ள கீழ்/மேல் நிலைகளிலும், பிரபஞ்சத்தின் மூலமாகவும் பொருந்தி விளங்கும் அருட்பெருஞ்ஜோதி!

தினம் ஒரு அகவல் 222

எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள் அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 222   எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள் அம்மதம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி   எந்த மதத்தைப் பின்பற்றுவது? எந்த இறைவனை வழிபடுவது?” என்று  சந்தேகத்துடன் கேட்டு நிற்கும் மனிதர்களிடம்  “அந்த மதம், அந்த இறைவனும் நாமே“ (அருட்பெருஞ்ஜோதியே) என்று அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 220

எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 220   என் குலம் எம் இனம் என்பது தொண்ணுற்றாறு அங்குலம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி   எம்முடைய குலம் என்பதையும் எம்முடைய இனம் என்பதையும், வெறும் 96 அங்குலம் தான் என்று எனக்கு புரிய வைத்து அருள் புரிந்த அருட்பெருஞ்ஜோதி ! தன் விரல்களின் அளவால் மனிதனின் உயரம் 96 அங்குலமாக இருக்கும். உடல் 96 தத்துவங்களில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தினம் ஒரு அகவல் 218

காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின் ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி – 218 காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின் ஆட்டியல் புரியும் அருட்பெருஞ்ஜோதி !   ஆட்டியல் – இயக்கம் (ஆட்டுவித்தல்), கூத்து தன்னால் தோற்றுவிக்கப்பட்ட உலகங்கள் அனைத்தையும், அளவற்ற கருணையைக் கொண்டு, சித்திகளின் ஆற்றல் துணை கொண்டு  இயக்கிக் கொண்டிருக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 216

தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல் ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி – 216 தேசு உறத் திகழ்தரு திருநெறிப் பொருள் இயல் ஆசு அறத் தெரித்த அருட்பெருஞ்ஜோதி !   தேசு – பிரகாசம் தேசு உற – பிரகாசமாய் ஆசு – குற்றம் ஆசற – குற்றமற்ற பிரகாசமாக ஒளி வீசுகின்ற புனிதமான சுத்த சன்மார்க்கப் பாதையின் (திருநெறி) உண்மையான இலக்கின் தன்மையை (உண்மைப் பொருளின் இயல்பு) எனக்கு எந்தவித குற்றமும் இல்லாமல் (ஆசற) தெளிவாக … Read more

தினம் ஒரு அகவல் 214

மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல் அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 214 மயர்ந்திடேல் சிறிது மனம் தளர்ந்து அஞ்சேல் அயர்ந்திடேல் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி !   சிறிது கூட மயங்கிப் போக வேண்டாம், மனம் சோர்வடைந்து பயப்பட வேண்டாம், எந்த நிலையிலும் அயர்ந்துவிட வேண்டாம் என்று எனக்கு உறுதி அளித்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 212

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி – 212 சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி !   சாதி, மத, சமய வேறுபாடுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை (பொய்) என்று என் தவத்தின் ஆரம்பத்திலேயே எனக்குத் தெளிவாக உணர்த்திய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 210

சாவா நிலையிது தந்தன முனக்கே ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி – 210 சாவா நிலை இது தந்தனம் உனக்கே ஆவா என அருள் அருட்பெருஞ்ஜோதி   ஆவா – ஆச்சரியம் “உனக்கு மரணமே இல்லாத உயர் நிலையை (ஒளி தேகத்தை) அளித்து விட்டோம்” என்று உறுதியளித்து, “ஆச்சரியம்! நீ அதை அடைந்து விட்டாய்!” என்று கூறி அருள் செய்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 208

சத்திய மாஞ்சிவ சத்தியை யீந்தெனக் கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி – 208   சத்தியமாம் சிவ சத்தியை ஈந்து எனக்கு அத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ்ஜோதி !   உண்மையின் வடிவமான (சத்தியம்) சிவத்தின் சக்தியை (அருள் சக்தியை) எனக்கு வழங்கி, அந்த ஆற்றலை (சித்திகளை) மேலும் மேலும் பெருகச் செய்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!