Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 206

சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி – 206   சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி   சாமாறு – இறக்கும் தன்மைகள் / அழிவுகள்; ஆமாறு – நிலை பெற்று வாழ்ந்திட மரணத்தை ஏற்படுத்தும் வழிகள், காரணங்கள், வினைகள் (சாமாறு அனைத்தும்) அனைத்தையும் நீக்கி, இந்த உலகிலேயே நான் நித்தியமாக இருக்கும் (அழியாத) நிலையை எனக்கே அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 204

204 வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள் ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி   வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள் ஐ அறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி !   உலகங்களும் விண்ணுலகங்களும் என்னுடைய நிலையைப் புகழ்ந்து போற்றும்படி எனக்கு அருள் செய்தவரும், ஐந்து அறிவுகளையும் கடந்து, முழுமையான தெய்வீக அறிவை அளித்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 201 – 202

201-202 எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம் அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி   எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம் அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி !   (வேதங்களும், ஆகமங்களும்) எந்த வழியை உண்மையான முக்திக்கு வழி (மெய்வழி) என்று போற்றிக் கூறுமோ, சரியான அந்த வழியையே எனக்குத் தெளிவாகக் காட்டி அருளிய அருட்பெருஞ்ஜோதி!

தினம் ஒரு அகவல் 199 – 200

199 – 200 தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி   தேவி உற்று ஒளிர் தரு திரு உருவுடன் எனது ஆவியில் கலந்த ஒளிர் அருட்பெருஞ்ஜோதி !   சிவம் மற்றும் சக்தியுடன் கூடிய திரு உருவ வடிவான சச்சிதானந்த வடிவில் வந்து, என்னுடைய ஆன்மாவில் இரண்டறக் கலந்து ஒளிர்ந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 197 -198

197 -198 பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென் ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி   பாருயப் புரிக எனப் பணித்து எனக்கருளி என் ஆருயிர்க்குள் ஒளிர் அருட்பெருஞ்ஜோதி ! இந்த உலகம் உயர்வு அடைய செய் என்று எனக்கு ஆணையிட்டு எனக்கு அருள் செய்து என் உயிருக்குள் ஆன்மாவாக ஒளி வீசிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 98

98. இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக் கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி   இங்கு உறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு அங்கையில் கனியாம் அருட்பெருஞ்ஜோதி !   உற – இருந்து  அங்கைக்கனி – உள்ளங்கைக் கனி இந்த உலக வாழ்க்கைச் சூழலில் அலைந்தாலும் (திரிந்தாலும்) என் மனம் ஒருபோதும் தளர்ச்சி அடையாத (இளையாத) நிலைமையைத் தந்தவரும், உள்ளங் கையில் கிடைத்த கனி போல எளிதாகவும், இனிமையாகவும் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 97

97. எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக் கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி   எத்தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி !   எத்தகை – எந்த வகை, தகுதி, நலன்கள் எனது மனம், எந்தெந்தத் தகுதி வாய்ந்த சிறப்புகளையும், உயர்ந்த ஞானத் தன்மைகளையும் விருப்பத்துடன் கேட்டதோ, சரியாக அந்தத் தன்மைகள் அனைத்தையும் அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 96

எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக் கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி   எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி !   என் உள்ளத்தில் என்ன நினைத்தேனோ, சரியாக அந்த எண்ணப்படியே எனக்கு அருளை வழங்கிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 95

95. ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக் காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி   ஓமயத் திரு உரு உவப்புடன் அளித்து எனக்கு ஆமயத் தடை தவிர் அருட்பெருஞ்ஜோதி !   ஓம் – பிரணவ மந்திரம் ஓமயம் – பிரணவத் தேகம் ஆமயம் – பாசப்பிணைப்பு ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமே ஆன ஒளித் திருமேனியை (தேகத்தை) எனக்கு மகிழ்ச்சியுடன் (உவப்புடன்) வழங்கி, பாசப் பிணைப்பால் வரும்  தடைகள் அனைத்தையும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதியே!