Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 302

கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண் டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி – 302   கூற்றுதைத்து என்பால் குற்றமும் குணங்கொண்டு ஆற்றல் மிக்க அளித்த அருட்பெருஞ்ஜோதி !   எமனை அழித்து (கூற்றுவனை உதைத்து), என்னுடைய குற்றங்களையும் (குறைகளையும்) தன் கருணையால் குணங்களாக மாற்றி, மிகுந்த வல்லமையை எனக்கு வழங்கி அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 300

நவையிலா வுளத்தி னாடிய நாடிய வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி – 300   நவையிலா உளத்தில் நாடிய நாடிய அவையெலாம் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி !   எதுவும் தேவையில்லை என்ற மனப்பக்குவம் அடைந்த பின் ஞானத்திற்கு உரிய தேடுதல்களை உடனே அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 298

எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி – 298   எல்லாம் வல்ல சித்து எனக்களித்து எனக்கு உனை அல்லாது இலை எனும் அருட்பெருஞ்ஜோதி !   எல்லாவிதமான வல்லமைகளையும் கொண்ட ஞான ஆற்றலை எனக்கு அளித்து, “இனி உனக்கு நம்மைத் தவிர வேறு துணை இல்லை” என்று உறுதியளித்து அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 296

வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால் ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி – 296   வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால் ஆய்தற்கு அரிய அருட்பெருஞ்ஜோதி !   வாய்மையை உரைக்கக்கூடியவை என்று சொல்லப்படும் வேதங்கள், ஆகமங்கள் போன்றவையாலும் ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்ள முடியாத அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 294

சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி – 294   சமயம் குல முதல் சார்பு எலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி !   சமயம், குலம் போன்ற சார்பு நிலையை விட்டு விலகியவுடன் அத்தருணத்தில் ஞானப் பிரகாசமாய் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி!

தினம் ஒரு அகவல் 292

பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – 292   பற்றுகள் அனைத்தையும் பற்று அறத் தவிர்த்து எனது அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !   உலக வாழ்க்கையின் பற்றுகள் அனைத்தையும் தவிர்த்து, எனது மரணத்தையும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 290

மாண்டுழ லாவகை வந்திளங் காலையே ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி – 290   மாண்டு உழலா வகை வந்து இளங்காலையே ஆண்டு கொண்டு அருளிய அருட்பெருஞ்ஜோதி !   பிறப்பு இறப்பு எனும் சுழற்சியில் இருந்து இளமையிலேயே என்னை காப்பாற்றி ஆட்கொண்ட அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 288

எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 288   எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி !   தோன்றி அழியக்கூடிய உலகப் பொருட்கள் மற்றும் பற்றுகள் போன்ற எதைப்பற்றியும் அச்சம் கொள்ளாதே என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி!