Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4202

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : இக வாழ்வாகிய இல்லற வாழ்வை செம்மையாக நடத்துவதற்கும், பரவாழ்வாகிய மோட்ச லாபத்தை அடைவதற்கும் முருகப்பெருமான் திருவடியினாலன்றி வேறெந்த வகையிலும் பெற முடியாது என்று அறியலாம். முக்கண் மைந்தன் முருகன் திருவடியே தக்க துணையென்றே சாற்றுதல் நலமே.

குரு உபதேசம் 4201

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட்டால் : ஞானத்தலைவர் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற மக்களுக்கெல்லாம் ஞானவாழ்வு சித்திக்கும் என்பதை சத்தியமாக அறியலாம். சத்தியவான் நந்தனார் தாளிணை போற்றிட சித்தியும் உண்டாம், திடமாம் வாழ்வு. ஆற்றலாம் நந்தனார் அருளைப் போற்றிட ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். மாசற்ற நந்தனார் மலரடி போற்றவே ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம். வந்தித்தேன் நந்தனாரை வாழ்த்தினேன் சிந்தித்தேன் சித்தியும் பெற்றேனே. பாடுபெறும் நந்தனார் பாதம் பணிந்திட வீடுபேறு உண்டாம் விளம்பு. ஆற்றலாம் நந்தனார் அருளைப் போற்றவே … Read more

குரு உபதேசம் 4200

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட : நரகமும், சொர்க்கமுமாக இருக்கின்ற இந்த உடம்பை அறிந்து தவமுயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பதே ஞான சித்தியாகும் என்று அறியலாம்.

குரு உபதேசம் 4199

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட : சைவ உணவை கடைப்பிடிக்கவும், தூய மனதினை பெறவும், தயைசிந்தை பெற்று பெருகிடவும், பக்தி செலுத்திடவும் அருள் செய்து தவமுயற்சியினை மேற்கொள்ள செய்து முருகன் அருள் கூடிட தவத்தோன் ஆகிடலாம் என்பதை அறியலாம். ஒரு மனிதன் இகவாழ்வாகிய இல்லறம் சிறப்படைய சைவ உணவை கடைப்பிடித்தும், தூய மனதோடு தயைசிந்தையுடன் பக்தி செலுத்தினால்தான் இல்லறமும் சிறக்கும். இப்பண்புகளை தீவிரமாக கடைப்பிடித்தால்தான் துறவறமாகிய பரவாழ்வும் சிறக்கும். ஆதலினால் முருகன் அருளால்தான் ஒருவன் சைவ உணவை மேற்கொள்ளவும், … Read more

குரு உபதேசம் 4198

முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : பாலையும் நீரையும் பிரித்தெடுக்கும் அன்னப்பட்சியைப் போல் தூலதேகத்தின் மாசை நீக்கியும் சூட்சும தேகத்தை ஒளி பெறச் செய்தும் என்றும் அழிவிலாத ஒளி உடம்பை பெறலாம் என்று அறியலாம். மாற்றமாம் மணிவாசகர் மலரடி போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். நந்தனார் திருவடியை நாளும் போற்றவே சிந்தையும் தெளியும் திடமாம் சித்தியே. எந்தை வாசகன் இணையடி போற்றிட சிந்தையும் தெளியும் திடமாம் சித்தியே. சித்தியாம் வாசகம் தினமும் படித்திட முக்தியும் … Read more

குரு உபதேசம் 4197

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட : தன்னையும் அறியலாம் தலைவனையும் அறியக் கூடிய வாய்ப்பை பெறலாம். நெற்றிக்கு மத்தியில் நிலைக்கும் வாசகத்தை உற்றுமே கற்றிட உள்ளம் உருகுமே ஆற்றலாம் மணிவாசகர் அருளை தினமும் போற்றியே மகிழ்வர் புண்ணியரே. வல்லவர் வழங்கிய வாசகம் கற்றிட தில்லையிலாடும் திருவடி தோன்றுமே.

குரு உபதேசம் – 4196

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட: பொறாமை, பேராசை, அளவுகடந்த கோபம், பிறர் மனம் புண்படும்படி பேசுவது ஆகியவற்றை உணரச் செய்வதுடன் அதை நீக்கிக் கொள்ளவும் அருள் செய்வார். தவம் என்பதே குணக்கேடுகளை அறிந்து நீக்கி வெற்றி காண்பதே ஆகும். தவமுனிவன் மணிவாசகன் தந்த வாசகத்தை பவம் அகல படித்தே பயன்பெறுவர். தக்கதோர் மணிவாசகன் தந்த வாசகத்தை திக்கெலாம் பரப்ப திடமாம் வாழ்வு. கற்றறிந்த மணிவாசகன் கழலிணை போற்றிட பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் சித்திக்குமே. வல்லவர் வழங்கிய வாசகம் தன்னை … Read more

குரு உபதேசம் – 4195

முருகனை பூஜித்து ஆசிபெற்றிட: உயிர்களிடத்து செலுத்துகின்ற அன்பே பக்தியாக மாறும். அந்த பக்தியே இறைவனிடத்து ஆசிபெற உறுதுணையாய் வரும் என்பதையும் அறியலாம். மாசற்ற மணிவாசகன் திருவடியை ஆசற்றார் போற்றியே அகம் மகிழ்வர். கனிவுடைய மணிவாசகன் கழலிணை போற்றிட பணிவான வாழ்வும் பண்பும் உண்டாம். வாட்டமற்ற மணிவாசகன் வழங்கிய வாசகத்தை நாட்டமுற்று படித்திட நலமாம் சித்தியே கல்லும் கனியும் கனிவான வாசகத்தை அல்லும் பகலும் அருளாளரே போற்றுவர்.