குரு உபதேசம் 4212
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : சைவ உணவை கடைப்பிடித்து அன்னதானம் செய்து, ஞானிகளை பூஜித்து ஆசிபெற்று நாள்நாளும் பெருகுகின்ற வளர்பிறை போன்ற சிறப்பு அறிவை பெறலாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : சைவ உணவை கடைப்பிடித்து அன்னதானம் செய்து, ஞானிகளை பூஜித்து ஆசிபெற்று நாள்நாளும் பெருகுகின்ற வளர்பிறை போன்ற சிறப்பு அறிவை பெறலாம்.
முருகனை பூஜித்து ஆசி பெற்றிட : சைவ உணவை கடைப்பிடிக்கவும் ஞானிகள் திருவடியை பூசித்து ஆசி பெறவும் முருகப்பெருமானின் ஆசி இருந்தால்தான் முடியும் என்பதை அறியலாம். ஆற்றலாம் நக்கீரன் அருளைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். நக்கீரன் திருவடியை நாளும் போற்றவே துக்கமும் இல்லை துயரமும் இல்லையே. இல்லையே நக்கீரன் இணையடி போற்றிட தொல்லையும் இல்லை துயரமும் இல்லையே.
முருகப்பெருமானின் ஆசியை பெற்றிட : உழைப்பிற்கு தகுந்த ஊதியம் பெறாமல் அதிகமாக பொருளை பெறுதல் பாவம் என்பதை அறியலாம். ஆற்றலாம் முருகனின் அருளைப் போற்றலே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மூச்சுக்காற்றின் இயக்கமும் அதை லயப்படுத்துகின்ற அறிவையும் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்று அறியலாம். முருகன் அருளால் மூச்சுக்காற்று லயப்பட்டால் கடுகை மலையாக்கலாம், மலையை கடுகாக்கலாம். ஆணையும் பெண்ணாக்கலாம் பெண்ணையும் ஆணாக்கலாம். அதுமட்டுமன்று ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்யலாம். ஐந்தொழில் செய்யும் வல்லமையை முருகப்பெருமானின் அருளாசியினாலன்றி வேறு எதனாலும் பெற முடியாது என்று அறியலாம். குணவான் முருகனை கூவி அழைத்திட மனமும் செம்மையே மாள்வதும் … Read more
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : பத்தாம் வாசலாகிய புருவமத்தியை திறந்து வெற்றி காண்கின்ற வாய்ப்பை பெறலாம். தசமாம் வாசல் தானே அறிந்திட வசமாம் சித்தி வல்வினை இல்லை. புண்ணிய முருகனின் பொன்னடி போற்றிட நண்ணியே அனைத்தும் நல்கும் முக்தியே.
முருகப்பெருமானை வணங்கிட : சைவத்தில் நம்பிக்கையும், பக்தியில் நாட்டமும் உண்டாகி முருகனது ஆசியை பெற்று கடைத்தேற்றி கொள்ளலாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : காமத்திற்குரிய காரணத்தை அறிந்து காமத்தை வெல்லுகின்ற உபாயமும் பெற்று மரணமிலாப் பெருவாழ்விற்குரிய மார்க்கத்தையும் பெறலாம் என்று அறியலாம். காமமே வாமமாக கண்டவன் ஞானி அடக்க அடக்க அடங்கா காமம் கடக்க கடக்க காட்டுவான் கந்தன்.
முருகன் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இருவினையையும் அறிந்து இடரையும் வெல்லக்கூடிய அறிவைப் பெறலாம். திருமூலர் திருவடியை தினமும் போற்றிட கருமூலம் கடக்க காட்டுமே உண்மை. திருமூலர் திருவடியை தினமும் போற்ற இருவினையும் இல்லை இடரும் இல்லையே. ஐய்யன் மூலன் அருளைப் போற்றவே வையகம் போற்ற வாழ்வது திண்ணமே. திண்ணிய மூலன் திருவடியைப் போற்றிட எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே. புண்ணிய மூலன் பொன்னடி போற்றிட நண்ணிய அனைத்தும் நல்கும் முக்தியே. முக்தியும் உண்டாம் முனையும் … Read more
முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : மும்மலத்தால் ஆன தேகத்தைப் பற்றி அறியவும், மும்மலக்கட்டினை உடைத்து வெற்றி காண்கின்ற அறிவை பெறலாம். முக்கண் மைந்தன் முருகன் திருவடியே பக்கத்துணை என்றே பகர்தல் நலமே. முத்தமிழ் வித்தகன் முருகன் அருளே சத்தும் சித்தும் கைவசம் ஆகுமே.