Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4187

முருகனை வணங்கிட: முருகனே சத்தும் சித்துமாக இருப்பதை அறியலாம். வித்தகன் முருகனடியை விரும்பியே போற்றிட சத்தும் சித்தும் கைவசமாமே. இடைபின் கலைநடுவில் இயங்கிடும் சுழிமுனையை தடையற கண்டிட தான் அவனாமே.

குரு உபதேசம் – 4186

முருகப்பெருமானை வணங்கிட: கொடுக்கக் கூடிய மனமும் அதற்குரிய வாய்ப்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக்கூடிய அறிவையும் முருகப்பெருமான்தான் அருள்வான் என்பதையும் அறியலாம். பாடுபெறும் திருவடியை பணிந்தே பூசிக்க வீடுபேறு உண்டாம் விளம்பு.

குரு உபதேசம் – 4185

முருகப்பெருமானை வணங்கிட: முக்திக்கு வித்தான செம்பொருளை மறைத்த காமதேகத்தை வென்றவன் தான் முருகப்பெருமான் என்று அறியலாம். முப்பூவை அறியலாம் முனையும் திறந்திடும் தப்பின்றி பூஜைகள் தானே செய்திட.

குரு உபதேசம் – 4184

முருகப்பெருமானை வணங்கிட: யோகத்துக்கும், ஞானத்திற்கும் தலைவன் முருகப்பெருமானே. முருகப்பெருமான் அன்றி, மனிதர்கள் வாசி நடத்தி கொடுப்பது என்பதெல்லாம் வெறும் பொய்யென்றும், ஏமாற்று வேலை என்றும், அவர்களை முருகப்பெருமான் தண்டிப்பார் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 4183

முருகப்பெருமானை வணங்கிட: உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடிக்கக்கூடிய வல்லமையை பெறலாம் என்று அறியலாம். புலனைந்தும் வென்ற புண்ணியன் முருகனை நலம் பெறவே போற்றுவோம் நாளும் துதித்தே சத்தியவான் முருகனின் தாளிணை போற்றியே நித்திய வாழ்வு நிலைக்கும் உண்மையே. சத்தியமே முருகன் முருகனே சத்தியம்

குரு உபதேசம் – 4182

முருகப்பெருமானை வணங்கிட: தயை குணம்தான் ஜென்மத்தைக்  கடைத்தேற்றும் என்பதை அறியலாம். சீலமாம் முருகனின் திருவடி போற்றிட காலத்தை வெல்ல கருத்தும் தோன்றுமே. சீலமாம் முருகனின் திருவடி போற்றிட தூல சூட்சுமம் கைவசமாமே.

குரு உபதேசம் – 4181

முருகப்பெருமானை வணங்கிட: எந்தெந்த வகையில் தொடர் பிறவி ஏற்படும் என்றும், அதற்கு காரணம் என்ன என்பதையும் அறிந்து நீக்கிக் கொள்ளலாம். நிலையில்லாத உடம்பை பெற்ற நாம் முருகன் அருளால் நிலையில்லாத உடம்பை நிலையான உடம்பாக உறுதிப்படுத்திக் கொள்ளும் வழியை அறியலாம். முருகப்பெருமான் திருவடியே வேதம் என்றும், அவன் நாமஜெபமே தவம் என்றும், அவனது நாமமே மந்திரம் என்றும், அவனது ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும், அதில் வெற்றி பெறுவதே ஞானம் என்றும் அறிந்து கொள்ளலாம். காரண குருவான கந்தனைப் … Read more

குரு உபதேசம் – 4180

முருகனை வணங்கிட: இப்பிறப்பு, மறுபிறப்பு, மீண்டும் பிறவாமை ஆகிய இரகசியங்களை முதன் முதலில் அறிந்து வென்று பிறவாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வை பெற்றவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். பசியின் கொடுமையால் உணவினது பெருமையையும், வறுமையின் கொடுமையால் செல்வத்தின் பெருமையையும், காமவிகாரத்தின் கொடுமையால் பெண்ணின் பெருமையையும், நோயின் கொடுமையால் மருத்துவரின் பெருமையையும் அறிந்து தெளிவது போல கடைத்தேற விரும்பி முயற்சி செய்து முன்னேற விரும்புகின்றபோது ஆன்மீக வழிதனை அறிய முற்படும் முயற்சிகளினால் முருகனின் பெருமையை உணரலாம். அன்றி முயற்சி … Read more

குரு உபதேசம் – 4179

முருகனை வணங்கிட: ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அச்செயலைப் பற்றி சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுத்து செய்பவன் புண்ணியவான் என்றும், ஒரு செயலை செய்துவிட்டு அதன் பின் அச்செயலைப் பற்றி சிந்தித்து பார்ப்பவன் சாதாரண மனிதன் என்றும், ஒரு செயலைச் செய்துவிட்டு அச்செயலினைப் பற்றியோ அச்செயலின் விளைவைப் பற்றியோ சற்றும் சிந்திக்காமல் இருப்பவன் விலங்கினத்திற்கு ஒப்பானவன் என்பதையும் அறிந்து, இதில் நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதையும் அறிந்து முருகனது திருவடிகளைப் பற்றி பூசித்து பூசித்து செயலைச் செய்வதற்கு … Read more