Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4148

முருகனை வணங்கிட : பிறஉயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும் உதவி செய்கின்ற வாய்ப்பையும் பெறலாம். கோடியுகம் தவம்செய்த குகனைப் போற்றி பாடிப் பணிவதே பண்பு. ஆற்றலாம் முருகனின் அடியைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். அருளாளன் முருகனின் அடியை போற்றிட இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.

குரு உபதேசம் – 4147

முருகனை வணங்கிட : பசி, காமம், நரை, திரை, மூப்பு, பிணி ஆகியவற்றை வென்று, என்றும் இளமையாக அழிவிலாத ஒளி உடம்பை பெற்றவன்தான் முருகப்பெருமான். அவனது திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெறுவதே உண்மையான அறிவும், சாகாக்கல்வியும் ஆகும். பற்றற்ற முனிவன் பாதம் பணிந்திட பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் தரும். கற்றறிந்து சொன்ன கருத்து இதுவாகுமே உற்றது சொன்னோம் ஓதி உணர்வீர்.

குரு உபதேசம் – 4146

முருகனை பூஜித்திட : முருகப்பெருமான் திருவடிகளை வணங்குதலான திருவடி பூஜையும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வந்தால் வளர்பிறை போன்று அறிவு தெளிவாகி வரும். பூஜையும் அன்னதானமும் செய்யாவிட்டால் நாளுக்கு நாள் அறிவு தேய்பிறை போல தேய்ந்து இருண்டே போய்விடும். புண்ணியமும் அருளும் பெருகிட முருகப்பெருமான் திருவடிகளை பூசித்திடுவோம்.

குரு உபதேசம் – 4145

முருகனை பூஜித்திட : பொறிபுலன்களை அடக்கவும், உண்மைப் பொருளை அடையவும் வாய்ப்பை பெறலாம்.

குரு உபதேசம் – 4144

முருகனை பூஜித்திட :  உணவிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவையும், சிந்தையில் தூய்மை உண்டாகி சிந்தையில் சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், செயல் தூய்மை உண்டாகி செயலிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், சொல்லிலே தூய்மை உண்டாகி, சொல்லிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், பார்வையிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும் பெற்று தீவிர சைவநெறி நின்று முருகனது ஆசிகளை முழுமையாக பெறலாம். உணவிலே சைவம்   :      தாவர உணவினை மட்டும் மேற்கொள்ளுதல். சிந்தையில் சைவம்  :      எந்த வகையிலும் பிறஉயிர்களுக்கு சிந்தையில் கூட … Read more

குரு உபதேசம் – 4143

முருகப்பெருமானை பூஜித்திட்டால் : காலத்தையும் அறிந்து வெல்லலாம், காலனையும் அறிந்து வெல்லலாம். காலத்தையும் காலனையும் வென்று பொடிப்பொடியாக்கிய கந்தபெருமான் திருவடியைப் பற்றி பூசிப்பவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பெறுவார்கள். கருணைக்கடல் கந்தபிரான் திருவடியை மனமுருகி பூஜித்தால்தான் காலத்தை வென்று காலனையும் வெல்கின்ற சாகாக்கல்வியை கற்க முடியும். அதை விடுத்து எத்துணை கல்வி கற்றாலும் பயனில்லை, எத்துணை அறிவு இருந்தாலும் பயனில்லை, எத்துணை ஆற்றல் இருந்தாலும் பயனில்லை, வெல்லற்கரிய மாமாயை வெல்லும் சாகாக்கல்வியை கற்காவிட்டால் எந்த பயனும் இல்லை … Read more

குரு உபதேசம் – 4142

முருகனை வணங்கிட : பெறுதற்கரிய மானுட பிறவியைப் பெற்றவர்கள், இந்த உடம்பின் துணை கொண்டே பரவாழ்வை அடைய செய்கின்ற முயற்சிகளும், செயல்பாடுகளுமே சாகாக்கல்வி என்பதையும் அறியலாம். சாகாக்கல்வி கற்பிப்பது அன்று, கற்பதும் அன்று. அது முருகப்பெருமானின் அருளால் அவரவருள்ளும் எழுகின்ற ஞானக்கல்வியாகும். அப்படிப்பட்ட ஞானக்கல்வியை கற்று ஞானம்அடைய விரும்புகின்றவர்கள் முதலில் உயிர்க்கொலை தவிர்க்க வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினம்தினம் தவறாமல் காலை பத்து நிமிடமும் மாலை  பத்து நிமிடமும் … Read more

குரு உபதேசம் – 4141

முருகா என்றால்: காமம் அற்று போகும். பொறாமை நம்மை விட்டு விலகும். கோபம் நீங்கிவிடும். பேராசை அறவே இருக்காது பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படாமல் பகைவனுக்கும் அருள் செய்யும் மனப்பாங்கு வரும். லோபித்தனம் நீங்கி தயைசிந்தை உண்டாகும். தாய்மை குணமுடைய முருகப்பெருமானது திருவடிகளைப் பற்றி பூசித்தால் நம்மிடம் உள்ள தீயன ஒழிந்து நன்மைகள் அனைத்தையும் பெறுவதோடு மேற்கண்ட குணப்பண்புகளை முழுமையாகப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

குரு உபதேசம் – 4140

முருகா என்றால்: பல பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம் அவரவர் செய்திட்ட பாவத்தின் பயனை ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து பாவவினை நீக்கி காத்து, இரட்சித்து, வீடுபேற்றினை அருள்வான் முருகன் என்பதை அறியலாம்.