admin
குரு உபதேசம் – 3815
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பெண்களை தாயாய், சகோதரியாய் பாவிக்காமல் தவறு செய்ய எண்ணினாலே அவர்களது தீய எண்ணங்களுக்கு எல்லாம்வல்ல முருகப்பெருமானின் தண்டனைக்கு ஆளாக நேரிடும். பெண்களை பாதுகாக்காமல் கொடுமைப்படுத்த நினைத்தாலே, நினைப்போர் பூனையின் கையில் அகப்பட்ட எலிபோல் ஆகி பெரும் துன்பத்திற்கும் மீளா துயருக்கும் ஆளாக நேரிடும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3814
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. வளரும் பருவமான பள்ளிப் பருவத்திலேயே மாணாக்கர்களது மனதினுள் பாவபுண்ணியங்களைப் பற்றியும், கடவுள் நம்பிக்கையும் வளர்க்க வேண்டும் என்பதும் அதற்கு சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்ற முதுபெரும் ஞானிகள் நாமங்களை கொண்ட தொகுப்பாய் உள்ள சித்தர்கள் போற்றி தொகுப்பை பள்ளி ஆரம்பிக்கும் முன்னர் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் மனதில் பதியுமாறு பாராயணம் செய்து பின் பள்ளிகளை துவங்கிட மாணவர்களது நாமஜெப பலனால் நாட்டில் பருவமழை தவறாது பெய்து … Read more
குரு உபதேசம் – 3809
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கோடானு கோடி ஆற்றல் பெற்ற முருகப்பெருமான் அழைத்தால் அக்கணமே வந்து அருள் செய்வான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3808
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞான ஆட்சியிலே சிவன் சொத்தாகிய மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றி கொள்ளையடித்த பொருளெல்லாம் ஞானிகள் ஆட்சியிலே கைப்பற்றப்பட்டு பொதுமக்களுக்கே செலவு செய்யப்படும் என்பதை அறியலாம்.