admin
குரு உபதேசம் 4373
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது தலைமையில் முருகனது தொண்டர்களால் இந்நாடு ஆட்சி செய்யப்பட்டால், நாடெங்கும் புண்ணியமும் அருள்பலமும் பெருகி எல்லோரிடத்தும் ஜீவதயவு உண்டாகி நாடெங்கும் பருவமழை தவறாது பெய்து எங்கு பார்த்தாலும் நல்ல விளைச்சலும், பசுமையும் மிகுந்து காணப்பட்டு அந்த நாட்டிலுள்ள மனிதர்கள் சொர்க்க வாழ்வை வாழ்வதோடு அந்நாட்டிலுள்ள அனைத்து உயிர்களாகிய எல்லா ஜீவராசிகளும் மகிழ்வுடன் வாழ்கின்ற ஒரு சொர்க்கமயமான வாழ்வை வாழ்கின்ற அமைப்பை பெறலாம் என்பதை அறிவார்கள். முருகப்பெருமானின் ஆசியை பெறபெற … Read more
குரு உபதேசம் 4372
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. கற்புடைய பெண்களை கற்பழிப்போர், கலப்படம் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், அதிகாரத்தின் துணையோடு பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்கிறவர்களும் பொது சொத்தை அபகரித்து வாழ்பவரும் அசுரர்களாக கருதப்பட்டு முருகப்பெருமானால் தண்டிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவார்கள்.
குரு உபதேசம் 4371
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. தற்காலத்தில் தவறு செய்வோர் தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர் ஞானிகளால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம். மணிவாசகப் பெருமானின் மலரடி போற்றிட அணிமா சித்தியும் அடைவார் திண்ணமே. மகத்துவம் மிக்கதோர் மணிவாசகப் பெருமானை அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம்.
குரு உபதேசம் 4370
முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தொல்லுலகில் நல்லோர்கள் படுகின்ற துன்பத்தை காணச் சகியாமல் ஞானபண்டிதனே நேரில் தோன்றி நல்லோரை காப்பான் என்பதும் உண்மையே, கலியுகம் முடித்து ஞானயுகமதனை அமைப்பான் என்பதும் உண்மையே.
குரு உபதேசம் 4369
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பொது சொத்தை அபகரிக்காமல் தப்பிக்கலாம், பொதுசேவை மனப்பான்மையுடையவராய் ஆகலாம், தேச விரோதமான செயல்களை செய்யாமல் தப்பிக்கலாம், தமக்கு கொடுக்கப்பட்ட பதவி அதிகாரங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு நன்மைகள் செய்யும் எண்ணம் வரும். அதன் மூலம் அவரவரும் தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
குரு உபதேசம் 4368
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு மனிதனுக்கு விடாத பிறவிகளை உண்டுபண்ணுவது அவனது காமதேகமே காரணம் என்பதை அறியலாம். …………….. காமனைக் கடிந்த கந்தனின் நாமத்தைச் சொல்லிட நமனும் அஞ்சுவன்.
குரு உபதேசம் 4367
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பஞ்சமகா சக்திகளும் முருகனின் ஆணைக்கு உட்பட்டு நடப்பதினாலே, நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4366
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், நவகோடி சித்தரிஷி கணங்களுக்கும், தலைவனான முருகப்பெருமான் நேரில் தோன்றி ஞானசித்தர் காலத்தை வழி நடத்துவான் என்பதை அறியலாம்.


