admin
குரு உபதேசம் – 3788
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… மனிதர்கள் ஆட்சியிலே பதவிகளிலும், ஆட்சியிலும் உள்ளோரெல்லாம் மக்களை ஏமாற்றி அடித்த கொள்ளைகள் எல்லாம் முருகப்பெருமானது ஆசியால் மீண்டும் பொதுமக்களுக்கே வந்து சேரும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3787
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய நான்கையும் அறிந்த முருகப்பெருமானே ஆட்சி செய்ய இருப்பதால் முருகப்பெருமானின் தலைமைக்கு கீழ் இயங்கக்கூடிய அத்தனை தொண்டர்களும் பொருள்பற்று அற்றவராகவும், பந்தபாசத்திற்கு ஆட்படாதவர்களாகவும், ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடு அற்றவராகவும், உலக மக்களை சகோதரர்களாக எண்ணுகின்றவர்களாகவும், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்பதை அறியலாம். இவர்களால் தான் சமநீதி, சமத்துவம் உடைய ஆட்சியை உருவாக்க … Read more