Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4170

முருகனை வணங்கிட: சிற்றின்பத்தில்தான் பேரின்பம் உள்ளதென்பதை முற்றும் உணர்ந்து சிற்றின்பத்தினை வென்று பேரின்பத்தை அடைந்து முற்றுப்பெற்ற முதல் முனிவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து கொள்ளலாம். பேரின்ப நிலை எய்திய முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றினாலன்றி சிற்றின்பத்தின் இயல்பையோ, பேரின்பத்தின் இயல்பையோ அறிய முடியாது என்றும், சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்தை அடையும் வழிமுறையையும் அறிய முடியாது என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டு பேரின்பமளிக்கும் அதிகாரம் முருகப்பெருமான் ஒருவனுக்கே உண்டென்பதையும் அறிந்து கொள்ளலாம். அணுக அணுக அருளும் உபதேசம் அணுக அணுகவே ஆனந்தமாமே.

குரு உபதேசம் – 418

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், உலகத்தில் சென்ற காலம், வருங்காலம், நிகழ் காலம் என்கிற முக்காலமும் உணர்ந்த முருகப்பெருமான் பிரச்சனைகள் உருவாவதற்கு முன்னரே, உணர்ந்து பிரச்சனைகள் வருவதற்கு முன்பே தீர்த்து விடுவான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4169

முருகனை வணங்கிட: சுக்கிலமாகிய விந்துவை சுத்தி செய்தால் காமத்திற்கு காரணமான அந்த விந்துவே என்றும் அழியாத பேரின்பத்தை தரவல்லதாக மாறும் என்பதை அறியலாம். சுத்த சுக்கில தேகமே சொர்ணதேகமாக மாறும். அரிய பொருளை அரிய தமிழால் அருளி நின்றான் முருகனே உரிய பொருளை உரிய நேரத்தில் ஓதுவிப்பான் உண்மையே.

குரு உபதேசம் – 4168

முருகனை வணங்கிட : முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட தமிழை கற்பதும், பரப்புவதும், தொண்டாக செய்கின்ற மக்களுக்கு ஞானவாழ்வு கைகூடும் என்பது உண்மையே என்பதை அறியலாம். நித்திய தமிழால் நின்னையே போற்றிட சக்தி எனக்கு தந்தருள் புரிவாய். வளமான தமிழால் வணங்கியே போற்றிட நிலையான வாழ்வும் நிம்மதியும் உண்டே.  

குரு உபதேசம் – 417

முருகா என்றால், பாவபுண்ணியத்தில் நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும், நாம் முன்செய்த நல்வினையால் வந்தது, மேலும் முருகப்பெருமான் ஆசி துணை கொண்டு பூசை செய்தும் புண்ணியம் செய்தும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை உணர்வான்.

குரு உபதேசம் – 4167

முருகனை வணங்கிட: இருவினையும் அறிந்து வென்று இனி பிறவா மார்க்கத்தையும் அடையலாம். அண்டத்தை காக்கவே அவதரித்தான் முருகனென்றே கண்டு கொண்டாலே போதும் காணுமே உண்மை. அற்புதம் நிறைந்த கற்பக திருவே ஆறுமுகப் பெருமானே போற்றி போற்றி முருகப்பெருமான் ஆசியை பெற விரும்புகின்ற மக்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, … Read more

குரு உபதேசம் – 4166

முருகனை வணங்கிட: தன்னைப் பற்றி அறிகின்ற அறிவே சிறப்பறிவாகும் என்றும், அதுவே சாகாக்கல்வி என்றும் அறியலாம். சாகாக்கல்வியை முருகன் அருளினால்தான் பெறக்கூடும் என்றும், முருகன் அருளைப் பெற ஜீவதயவே சாதனமாகும் என்பதையும் உணர்வான். உலக உயிர்களிடத்து எந்த அளவிற்கு ஜீவதயவை செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு அந்த ஜீவதயவே தவமாய் மாறி ஜீவதயவின் தலைவன் முருகனது ஆசியைப் பெற்று தவத்தினால் வெற்றி பெற்று தன்னையறியும் சிறப்பறிவான சாகாக்கல்வியை கற்று ஞானம் அடையக் கூடும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 4165

முருகப்பெருமானை வணங்கிட : ஞானம் என்ற சொல்லே முருகன் தான் என்றும் அதுவே உண்மை அறிவு என்பதையும் அறியலாம். மாசற்ற முருகனின் மலரடி போற்றிட ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம்! வெல்லரிய மாயையை வென்ற முருகனை நல்லுணர்வாய் போற்றிட நலமே! ஆற்றலாம் முருகனின் அருளை தினமும் போற்றியே மகிழ்வர் புண்ணியரே!

குரு உபதேசம் – 416

முருகனை வணங்கிட : காலத்தையும் காலனையும் வென்ற கந்தபெருமான் திருவடியைப் போற்றி வணங்கிட காலனை வெல்லும் உபாயத்தினை பெறலாம். அதுவே சிறப்பறிவாகும்.