Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4241

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : உடல் மாசு நீங்கும், உயிர் மாசும் நீங்கும், மனமாசும் நீங்கும், முருகனருளால் உடல் மாசு, உயிர் மாசு, மனமாசு ஆகிய அனைத்தும் நீங்கி தூய்மையான ஒளிஉடம்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்று அறியலாம். மாசற்ற முருகனின் மலரடி போற்றிட ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம். வேலவன் திருவடியை வேண்டியே போற்றிட காலனை வெல்ல கருத்து தோன்றுமே! குணவான் முருகனை கூவி அழைத்திட வனவாசம் ஏகா வாழ்வு … Read more

குரு உபதேசம் 4240

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்ளவும், பிற உயிர்கள்பால் கருணை கொண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான அறிவையும் பெறலாம். பாலன் முருகனின் பாதம் பணிந்திட ஞாலத்தை வெல்ல நியாயம் கிட்டுமே. கடந்தான் கந்தனின் கழலினை போற்றிட கடக்க உதவுமே கந்தன் இணையடி. ஆசான் ஆசியும் அடியவர்கள் ஆசியும் நேசத்தே பெற்றிட நிலைபல காணுமே.

குரு உபதேசம் 4239

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : செய்யக் கூடிய செயல்களிலே எது பாவம், எது புண்ணியம் என்று அறிகின்ற சிறப்பறிவைப் பெறலாம். இருவினைகள் கடந்தே இன்பம் பெறலாம் குருவருள் கூடிட கூடுமே நலம்.

குரு உபதேசம் 4238

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கொடுக்கக் கூடிய மனமும் முருகனே, அதற்கு தேவையான பொருளும் அவனே. கிடைக்கும் புண்ணியமும் அவனே, அதனால் வருகின்ற ஜென்மத்தைக் கடைத்தேற்றும் உபாயமும் அவனே என அனைத்தும் அவனே ஆகி நின்று, தர்மத்தின் தலைவனாக விளங்கி நம்மை காப்பவன் முருகனே என்பதையும் அறியலாம். இருகலையும் பொருந்திட இடரேதும் இல்லை குருவருள் பெற்றிட கூடுமே நலம். குகார்ப்பணம் என்று கூவியே கொடுங்கள் பகவான் அருள் தானே வரும்.

குரு உபதேசம் 4237

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அகத்தியம் பெருமானாருக்கு அருள் செய்து ஒளி தேகத்தை அளித்து மரணமிலாப் பெருவாழ்வை அளித்து அருள் செய்து காத்ததைப் போல நாம் முருகனை வணங்க வணங்க, முருகனும் நம்மீது கருணை கொண்டு ஒரு கால பரியந்தத்திலே நமக்கும் அருள் செய்து நம்மையும் அருள் பார்வைக்கு உள்ளாக்கி அகத்தியருக்கு அருளியது போல நம்மையும் சார்ந்து வழிநடத்தி மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்வான் என்பதை அறியலாம். அதற்கு நாம் முருகப்பெருமானாரது ஆசியையும், அருளையும் அளவிலாது … Read more

குரு உபதேசம் 4236

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : பிற உயிர்களுக்கு செய்கின்ற நன்மையே நமது ஆன்மாவிற்கு ஆக்கம் தரும் என்பதை அறியலாம். ஆன்ம ஆக்கம் கூடிட கூடிட அறிவும் மென்மையாக மாறி சிறப்பறிவாக மாறிடும். இதை முருகப்பெருமான் அருளினால் பெறலாம் என்பதையும் அறிந்து ஜீவதயவின் வழி ஆன்மாவை ஆக்கப்படுத்தி சிறப்பறிவையும் பெறலாம். அருளாளன் முருகனை அனுதினமும் போற்றிட இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.

குரு உபதேசம் 4235

முருகனை வணங்கிட : செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணக்கூடிய செயல்களாகவே அமைவதை அறியலாம். முற்றும் உணர்ந்த முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெறுவதனாலே நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்ற செயல்களாகவே அமையும். முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும்.    

குரு உபதேசம் 4234

முருகனை வணங்கிட : தன்னையறிந்து தன்னை வென்ற தகைமை பெற்ற முருகனை பூஜித்து ஆசி பெற்ற மக்கள் கோடானுகோடிபேர். இன்னும் பலகோடி மக்கள் அவனது அருள் திருவடிகளை பூஜித்து ஆசி பெற இருக்கிறார்கள். அப்படி ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக் கூடியவர்களில் நாமும் ஒருவனாக இருந்து முருகனது திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற உண்மை ஞானவழிதனை தெரிந்து பூஜிப்பான். தன் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்ற மக்களுக்கு அருள் செய்யக்கூடிய ஆற்றல் முருகப்பெருமானுக்குத்தான் உண்டு … Read more

குரு உபதேசம் 4233

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பால பருவம், வாலிப பருவம், முதுமைப் பருவம் ஆகிய மூன்று நிலைகளும் உண்டாகி இறுதியில் அனைத்தும் அழிந்து போவதும் இயற்கையால் வந்தது என்றும், இயற்கையால் விதிக்கப்பட்ட இந்த பருவங்களை கடந்து மாற்றி, என்றும் மாறாத அழிவில்லாத இளமைப் பருவத்தை அடையலாம் என்பதையும் அதுவே மரணமிலாப் பெருவாழ்வாகிய பெருநிலை என்பதையும், அதை தவ முயற்சியால், தயவின் துணையால் அடையலாம் என்பதையும் முதன் முதலில் முருகப்பெருமான் தான், இத்தவத்தை கண்டு பிடித்தார் என்பதையும் … Read more