குரு உபதேசம் – 3862
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அறம், பொருள், இன்பம், வீடுபேற்றினை அறிவதற்கும், அதை கடைப்பிடித்து வெற்றி பெறுவதற்கும் முருகப்பெருமானின் திருவடியே துணை என்று அறிகின்ற அறிவைப் பெறலாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அறம், பொருள், இன்பம், வீடுபேற்றினை அறிவதற்கும், அதை கடைப்பிடித்து வெற்றி பெறுவதற்கும் முருகப்பெருமானின் திருவடியே துணை என்று அறிகின்ற அறிவைப் பெறலாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஆறறிவு படைத்த மனிதன் சிறப்பறிவு உடைய மனிதனாக மாறிட வேண்டுமாயின் ஜீவதயவை கடைப்பிடித்தாலன்றி இயலாது. ஜீவதயவை கடைப்பிடிக்க கடைப்பிடிக்க சிறப்பறிவு உண்டாகும்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானநூல் என்பவை ஞானியர் திருவடிகளைப் பற்றி பூஜிக்க தூண்டுவதாயும், ஞானமளிக்க வல்லதாயும் இருக்க வேண்டும். அதுவும் ஞானபண்டிதனது பெருமைகளையும் ஞானபண்டிதன் திருவடிகளைப் பற்ற ஏதுவாய் உள்ள நூல்கள் மிகவும் பயனுள்ளதாகும். அதிலும் மகான் அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம், திருப்புகழ், நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுபடை போன்ற நூல்கள் படிப்பது முருகனது அருளை பெற மிகவும் பயனுள்ளது என்பதும் முருகனைப் பற்றிய இந்த நூல்களை படித்து அதன்படி நடந்திட வெகுவிரைவில் ஞானமடையலாம் என்பதையும் … Read more