தினம் ஒரு அகவல் 38
38. நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய் அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி நவம் தவிர் நிலைகளும் நண்ணுமோர் நிலையாய் அவம் தவிர் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ! ஆன்மாவை கட்டுப்படுத்தும் ஒன்பது தத்துவ நிலைகளையும் (காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை, பிரகிருதி, குணம்) கடந்து எல்லோரும் அடைய விரும்பும் ஒரே நிலையாக விளங்கி, வீண் செயல்களையும் துன்பங்களையும் நீக்கிய ஞானசபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


