Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4462

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கை கடவுளால் மனிதனுள் வைக்கப்பட்ட அற்புத சக்தியை தட்டி எழுப்ப புண்ணியமும் அருளாசியும் வேண்டும். முருகப்பெருமானை வணங்க வணங்க முருகனது அருள் கூடி நிற்பதோடு புண்ணிய பலத்தின் உதவியால் அந்த சக்தி தட்டி எழுப்பப்படும். அதுவே எல்லாவற்றையும் தரும் என்பதையும் அறியலாம். கோடானு கோடி யுகங்கள் தவம் செய்து தாம் பெற்றிட்ட அற்புத சக்தியின் வெளிப்பாட்டின் மகிமையை தாம் அடைந்த அந்த பேரின்பத்தை மற்றவர்க்கும் அற்புதமாய் பெருந்தாய் பெருங்கருணையோடு வழங்கி அனைவரையும் … Read more

குரு உபதேசம் 4461

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. கடவுள் முருகன்தான் என்பதை அறியும் உண்மை அறிவைப் பெறலாம். உண்மைக் கடவுளான முருகனைமனமுருகி பூஜிக்கும் வாய்ப்பை பெறலாம், சைவத்தை கடைப்பிடிக்க தக்க சூழ்நிலையும், மன உறுதியும் பெறலாம். சைவத்தை தடையின்றி கடைப்பிடிக்கலாம். அன்னதானம் செய்வதற்குரிய வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெற்று புண்ணியவானாகலாம். புண்ணியத்தைப் பெருக்கி பெருக்கி, மரணமிலாப் பெருவாழ்வை அடைகின்ற மார்க்கத்தையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

குரு உபதேசம் 4460

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானத்தலைவன் முருகப்பெருமானே கடவுள் என்றும், அவனது ஆசியை பெற்றிட்டால், மரணத்தை வென்ற மகான்களான நவகோடி சித்தரிஷி கணங்கள் ஆசியையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4459

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தக்க ஆசானின் துணையைப் பெறுவார்கள், ஆன்மீகத்தில் முன்னேறி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.

குரு உபதேசம் 4458

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால் இயற்கை சீற்றங்களிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். முருகனை, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவஉணவை உண்டு காலை மாலை இரவு என பத்து நிமிடமேனும் மனமுருகி பூஜிப்பதோடு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வருவதோடு முருகனை எப்போதும் நாமஜெபமாகிய பூஜைகளை ஏராளமானோர் செய்திட்டால் இயற்கை சீற்றங்களே வராமல் முருகன் அருள் செய்வான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4457

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி தினமும் மறவாமல் பூஜித்து தினம் தினம்தவறாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ முருகப்பெருமான் திருவடிகளை மனமுருகி பூஜித்திடல் வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு … Read more

குரு உபதேசம் 4456

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…. ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்து, காப்பாற்றிக் கொண்டிருப்பவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம். முருகப்பெருமானின் ஆசிபெற விரும்பினால் அவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு எவன் தொண்டு செய்கின்றானோ அவனுக்கு ஞானவாழ்வை தந்து, மரணமிலாப் பெருவாழ்வையும் தருவான் முருகப்பெருமான் என்பதையும் அறியலா

குரு உபதேசம் 4455

முருகப்பெருமான் திருவடிகளைப்  பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முருகப்பெருமானால் படைக்கப்பட்ட ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள எந்த ஜீவராசிகளுக்கும் செய்கின்ற உதவிகள் அனைத்தும் நேரிடையாக முருகப்பெருமானின் திருவடிகளையே சென்றடையும் என்பதை அறியலாம். இனிவரும் ஞானசித்தர் காலங்களிலே ஜீவர்களுக்கு செய்கின்ற ஆராதனைகளே இறைவனுக்கு செய்யும் ஆராதனைகளாக பெருமளவில் செய்யப்படும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4454

முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. சைவத்தலைவன் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால், பூஜிப்போர்க்கு சைவ உணவின் மீது நாட்டம் வருவது இயல்பேயாகும். இதுநாள் வரை அசைவ உணவு பழக்கத்திற்கு ஆளாகியிருந்தாலும் இன்றேனும் முருகனை வணங்கினால் முருகனது கருணையால் அசைவ பழக்கத்திலிருந்து விடுபட்டு பாவியாகாத உணவான சைவ உணவினை உண்டு நாமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம்.