தினம் ஒரு அகவல் 252
சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம் அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 252 சித்தி என்பது நிலை சேர்ந்த அநுபவம் அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி ! சித்தி என்பது இறைநிலையை அடைந்ததால் உண்டாகும் அனுபவமே என்றும், அதுவே உண்மையான வல்லமை என்றும் எனக்குத் தெளிவாக உணர்த்திய என்னுடைய அருட்பெருஞ்ஜோதியே!


