Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 266

இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 266   இந்த சித்ஜோதியின் இயல் உரு ஆதி அந்தம் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !   ஞான பிரகாசத்தின் அறிவு வடிவான பேரொளியின் உண்மையான சொரூபமே, உலகங்கள் அனைத்தின் படைப்புக்கு மூலமான தொடக்கமும் (ஆதியும்), அழிவுக்கு (இறுதி முடிவும்) ஆகும் என்று உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 264

ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 264   ஜோதியுள் ஜோதியின் சொருபமே அந்தம் ஆதி என்றருளிய அருட்பெருஞ்ஜோதி !   அண்டங்களின் ஒளியிலும் உயிர்களின் ஒளியிலும் உள்ள நித்திய பேரொளியின் வடிவமும், அந்த வடிவமே எல்லாப் படைப்புகளுக்கும் மூலமான ஆதியும் ஆகும் என்று உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 262

படிமுடி கடந்தனை பாரிது பாரென அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி – 262   படி முடி கடந்த எனை பாரிது பார் என அடி முடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி !   தவத்தின் எல்லா நிலைகளையும் நீ வெற்றிகரமாகக் கடந்துவிட்டாய், இனி ஞானத்தால் எல்லையற்ற உலகத்தைக் காண் என்று கூறி, தனது ஆதியும் அந்தமும் காண முடியாத, எல்லையற்ற முழு வடிவத்தை எனக்குக் காட்சி அளித்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 260

இப்படி கண்டனை யினியுறு படியெலாம் அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி – 260   இப்படி கண்டு எனை இனி உறுபடி எலாம் அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி !   இதுவரை  ஞான அனுபவத்தில் கண்ட அனைத்தும் மற்றும் இனி நீ அடையவிருக்கும் எல்லா உயர் நிலைகளும் நீ நினைத்தபடியே நிறைவேறும் என்று உறுதியளித்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 258

எட்டிரண் டென்பன வியலுமுற் படியென அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 258   எட்டு இரண்டு என்பன இயலும் முற்படி என அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !   சீவனாகிய (அகாரம் – 8) உயிரையும், சிவனாகிய (உகாரம் – 2) பரமாத்மாவையும் அறிந்து கொள்வதே ஞானத்தின் முதல்படி என்று நிலையான பொருளாய் இருந்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 256

இன்பசித் தியினிய லேக மனேகம் அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 256   இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம் அன்பருக்கு என்ற என் அருட்பெருஞ்ஜோதி !   பேரின்பத்தைத் தரக்கூடிய சித்தியின் (ஆற்றலின்) இயல்பான தன்மை, ஒரே சக்தியாக இருந்து பலவிதமான இன்ப அனுபவங்களாக விரிந்து வெளிப்படுவதாகும். அந்த இன்பம் அனைத்தும் ஜீவகாருண்யம் என்னும் அன்பு நெறியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியது என்று எனக்கு உணர்த்திய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 254

ஏகசிற் சித்தியே யியலுற வனேகம் ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 254   ஏக சித்சித்தியே இயலுற அனேகம் ஆகியது என்ற என் அருட்பெருஞ்ஜோதி !   ஞானத்தினால் ஏற்படும் சித்தியே வல்லமை கொண்ட ஒரே சித்தி என்றும், அந்த சித்தியே பல சித்திகள் விளைய காரணமாக உள்ளது என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !