தினம் ஒரு அகவல் 328
வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள் அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி – 328 வெருள் மனமாயை வினை இருள் நீக்கி உள் அருள் விளக்கு ஏற்றிய அருட்பெருஞ்ஜோதி ! அச்சம் கொள்ளும் மனதை சூழ்ந்திருந்த மாயை மற்றும் வினைப்பயனால் வந்த அறியாமை இருளை நீக்கி, என்னுடைய உள்ளத்தின் உள்ளே அருளையே வடிவமாகக் கொண்ட ஞான விளக்கை ஏற்றியருளிய அருட்பெருஞ்ஜோதியே!


