Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 234

எச்சநி னக்கிலை யெல்லாம் பெறுகவென்று அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி – 234   எச்சம் நினக்கு இலை எல்லாம் பெறுக என்று அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி !   எச்சம் – குறை / முன் செய்த வினைகளின் மிச்சம் உனக்கு இனி எந்தவிதக் குறையும் (பாதிப்பும்) இல்லை; எல்லா நன்மைகளும் நிறைந்து வளரட்டும்” என்று வாழ்த்தி, என்னுடைய எல்லாவித அச்சங்களையும் நீக்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 232

மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி – 232   மாய்ந்தவர் மீட்டும் வரு நெறி தந்து இதை ஆய்ந்திடு என்றுரைத்த அருட்பெருஞ்ஜோதி !   இறந்து போனவர்களை மீண்டும் உயிர்ப்பித்து எழுந்து வரச் செய்கின்ற (மரணத்தை வெல்லும்) ரகசியமான வழியை (ஞான நெறி) எனக்கு அளித்து, “இதை நீயே ஆராய்ந்து அறிந்து கொள்” என்று உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 230

வாழிநீ டூழி வாழியென் றோங்குபே ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி – 230   வாழி நீடுழி வாழி என்று ஓங்கு பேர் ஆழியை அளித்த அருட்பெருஞ்ஜோதி !   “வாழ்க! நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி உயர்ந்த நிலையில் (ஓங்கு) வீற்றிருந்தவரும், அளவற்ற, முடிவில்லாத கடல் போன்ற அருளை (பேராழியை)  வழங்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 228

சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி – 228   சார் உயிர்க்கெல்லாம் தாரகமாம் பரை ஆருயிர்க்கு உயிராம் அருட்பெருஞ்ஜோதி !   சார்ந்த உயிர்களையெல்லாம் தாங்கி (தாரகம்) ஆதாரமாக விளங்குகின்ற பராசக்தியாகவும், அனைத்து உயிர்களின் உயிராகவும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 226

எண்டர முடியா திலங்கிய பற்பல அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி – 226   எண் தர முடியாது இலங்கிய பற்பல அண்டமும் நிறைந்துஒளிர் அருட்பெருஞ்ஜோதி !   பிரபஞ்சத்தில் உள்ள எண்ணிலடங்கா அண்டங்கள் அனைத்திலும் ஒளிமயமாக விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 224

கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி – 224   கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் ஆறியல் என உரை அருட்பெருஞ்ஜோதி !   உயிர்களின் அறிவுக் கோட்பாட்டின்படி உள்ள கீழ்/மேல் நிலைகளிலும், பிரபஞ்சத்தின் மூலமாகவும் பொருந்தி விளங்கும் அருட்பெருஞ்ஜோதி!

தினம் ஒரு அகவல் 222

எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள் அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 222   எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள் அம்மதம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி   எந்த மதத்தைப் பின்பற்றுவது? எந்த இறைவனை வழிபடுவது?” என்று  சந்தேகத்துடன் கேட்டு நிற்கும் மனிதர்களிடம்  “அந்த மதம், அந்த இறைவனும் நாமே“ (அருட்பெருஞ்ஜோதியே) என்று அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 220

எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 220   என் குலம் எம் இனம் என்பது தொண்ணுற்றாறு அங்குலம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி   எம்முடைய குலம் என்பதையும் எம்முடைய இனம் என்பதையும், வெறும் 96 அங்குலம் தான் என்று எனக்கு புரிய வைத்து அருள் புரிந்த அருட்பெருஞ்ஜோதி ! தன் விரல்களின் அளவால் மனிதனின் உயரம் 96 அங்குலமாக இருக்கும். உடல் 96 தத்துவங்களில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தினம் ஒரு அகவல் 218

காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின் ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி – 218 காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின் ஆட்டியல் புரியும் அருட்பெருஞ்ஜோதி !   ஆட்டியல் – இயக்கம் (ஆட்டுவித்தல்), கூத்து தன்னால் தோற்றுவிக்கப்பட்ட உலகங்கள் அனைத்தையும், அளவற்ற கருணையைக் கொண்டு, சித்திகளின் ஆற்றல் துணை கொண்டு  இயக்கிக் கொண்டிருக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!