Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 68

68. மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும் அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி   மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும் அதனுக்கு அதுவாம் அருட்பெருஞ்ஜோதி !   ஆண்பாலாகவும், பெண்பாலாகவும் பிரபஞ்ச சக்தியைக் குறிப்பிட்ட வள்ளல் பெருமான் அந்த சக்தியை அஃறிணையாகவும் குறிப்பிடுகிறார்கள். ஆற்றலும் சக்தியும் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தின் எல்லைக்குட்பட்ட  எல்லா இடங்களிலும், ஒவ்வொரு அஃறிணைப் பொருளுக்கும் (உயிர் அல்லாத சடப் பொருளுக்கும்) அதன் உண்மை வடிவமாகவே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 67

67. திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும் அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி   திவளுற்ற அண்டத் திரளின் எங்கெங்கும் அவளுக்கு அவளாம் அருட்பெருஞ்ஜோதி !   திவள் – ஒளி      அண்டத்திரள்கள் – கோள்கள் ஒளி வீசிக்கொண்டு இருக்கின்ற பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களிலும், வாலை தேவியின் சக்திக்கும்  மூலமாகவும் இருந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 66

66. பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும் அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி   பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும் அவனுக்கு அவனாம் அருட்பெருஞ்ஜோதி !   அனைத்து உலகங்களிலும், அவற்றின் பரப்பிலும், எங்கெங்கிலும் ஒவ்வொரு உயிருக்கும்,  உயிராக  இருந்து (எல்லாமாகவும் ஆகி) விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 65

65. படியடி வான்முடி பற்றினுந் தோற்றா அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி   படி அடி வான் முடி பற்றினும் தோற்றா அடி முடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி ! பூமி முழுவதையும் அடியாகவும், வானத்தை முழுவதையும் முடியாகவும் கொண்டு தேடினாலும் காண முடியாத (தோற்றா), அடி முடி என வரையறுக்க முடியாத ஒப்பற்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 64

64. ஓதியோ தாம லுறவெனக் களித்த ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி   ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த ஆதி ஈறு இல்லா அருட்பெருஞ்ஜோதி !   ஆதி – தொடக்கம்      ஈறு – முடிவு எந்தவொரு உபதேசமும் இல்லாமலும், நான் எந்தவொரு நூலையும் படிக்காமலும், நேரடியாக தன்னையே உறவாகவும் (ஞானமாகவும்) எனக்கு அளித்து, தொடக்கம் மற்றும் முடிவுகள் எதுவும் இல்லாத நிலையில் என்றும் நிலைத்திருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 63

63. என்னையும் பணிகொண் டிறவா வரமளித் தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி   என்னையும் பணிகொண்டு இறவா வரம் அளித்து அன்னையின் உவந்த அருட்பெருஞ்ஜோதி ! என்னையும் தன் அடிமையாக ஏற்றுக்கொண்டு, எனக்கு மரணமே இல்லாத பெருவாழ்வு என்னும் வரத்தை அளித்து, நான் அந்த இன்ப நிலையை அடைவதைக் கண்டு அன்னையின் அன்பை விடவும் அதிகமாக மகிழ்ச்சி அடைகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 62

62. உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின் அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி   உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி !   உளவு – சூட்சுமம் / இரகசியம் இறைவனை உள்ளத்தில் உணரும் சூட்சும வழியால் மட்டுமே அறிய முடியுமே தவிர, உலகில் உள்ள எந்த அளவுகோல்களைக் கொண்டு அளக்க முயன்றாலும், அவன் அளந்து அறிய முடியாத எல்லையற்ற பொருளாகவே விளங்குவான். அத்தகைய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 61

61. பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி   பொது உணர்வு உணரும் போது அல்லால் பிரித்தே அது எனின் தோன்றா அருட்பெருஞ்ஜோதி !   பொதுவான உணர்வான “எல்லா உயிரும் ஒன்றே” என்று உணராமல், இறைவன் வேறு, உயிர்கள் வேறு என்று பிரித்துப் பார்க்க முயல்பவர்களுக்கு இறை அனுபவத்தை கொடுக்காமல் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியே !

தினம் ஒரு அகவல் 60

60. உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி   உனும் உணர்வு உணர்வாய் உணர்வெலாம் கடந்த அநுபவா தீத அருட்பெருஞ்ஜோதி  !   உனும் உணர்வு – உள்ளறிவு உள்ளறிவுக்குள் (உனுமுணர்வு) உணர்வாக இருந்து, உலகியல் மற்றும் ஆன்மீக அறிவுகள் அனைத்தையும் தாண்டி, நேரடியாக உணரும் அனுபவத்தின் எல்லைகளுக்கும்கூட அப்பாற்பட்டவராய் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!