தினம் ஒரு அகவல் 59
59. தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர் அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அநுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி ! தனு – உடம்பு, கரணாதிகள் – அந்தக்கரணங்கள் ( மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) உடல், மனம் போன்ற கருவிகள் அனைத்தையும் கடந்துச் சென்று நேரடியாக அனுபவ அறிவாகவே ஆகி விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


