Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 197 -198

197 -198 பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென் ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி   பாருயப் புரிக எனப் பணித்து எனக்கருளி என் ஆருயிர்க்குள் ஒளிர் அருட்பெருஞ்ஜோதி ! இந்த உலகம் உயர்வு அடைய செய் என்று எனக்கு ஆணையிட்டு எனக்கு அருள் செய்து என் உயிருக்குள் ஆன்மாவாக ஒளி வீசிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 98

98. இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக் கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி   இங்கு உறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு அங்கையில் கனியாம் அருட்பெருஞ்ஜோதி !   உற – இருந்து  அங்கைக்கனி – உள்ளங்கைக் கனி இந்த உலக வாழ்க்கைச் சூழலில் அலைந்தாலும் (திரிந்தாலும்) என் மனம் ஒருபோதும் தளர்ச்சி அடையாத (இளையாத) நிலைமையைத் தந்தவரும், உள்ளங் கையில் கிடைத்த கனி போல எளிதாகவும், இனிமையாகவும் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 97

97. எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக் கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி   எத்தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி !   எத்தகை – எந்த வகை, தகுதி, நலன்கள் எனது மனம், எந்தெந்தத் தகுதி வாய்ந்த சிறப்புகளையும், உயர்ந்த ஞானத் தன்மைகளையும் விருப்பத்துடன் கேட்டதோ, சரியாக அந்தத் தன்மைகள் அனைத்தையும் அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 96

எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக் கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி   எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி !   என் உள்ளத்தில் என்ன நினைத்தேனோ, சரியாக அந்த எண்ணப்படியே எனக்கு அருளை வழங்கிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 95

95. ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக் காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி   ஓமயத் திரு உரு உவப்புடன் அளித்து எனக்கு ஆமயத் தடை தவிர் அருட்பெருஞ்ஜோதி !   ஓம் – பிரணவ மந்திரம் ஓமயம் – பிரணவத் தேகம் ஆமயம் – பாசப்பிணைப்பு ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமே ஆன ஒளித் திருமேனியை (தேகத்தை) எனக்கு மகிழ்ச்சியுடன் (உவப்புடன்) வழங்கி, பாசப் பிணைப்பால் வரும்  தடைகள் அனைத்தையும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 94

94. சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி   சேதனப் பெருநிலை திகழ் தரும் ஒரு பரை ஆதனத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !   சேதனம் – உணர்வுள்ள ஞான நிலை பரை ஆதனம் – சக்தி இருப்பிடம் உணர்வுள்ள எல்லாப் பொருள்களிலும் (சேதனம்) உள்ள மிக உயர்ந்த ஞான நிலையில் பிரகாசிக்கின்ற ஒப்பற்ற பராசக்தியின் இருப்பிடத்தில் உயர்ந்து வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 93

94. பொதுவது சிறப்பது புதியது பழயதென் றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி   பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய்த் திகழும் அருட்பெருஞ்ஜோதி !   எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும், சிலருக்குச் சிறப்பானதாகவும், புதிதாகவும், பழையதாகவும் என்று சொல்லப்படும் அந்தந்தத் தன்மைகளின் வடிவமாகவே விளங்கிப் பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 92

92. துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி   துன்பு அறுத்து ஒரு சிவ துரிய சுகந்தனை அன்பருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி !   துரிய சுகம் – நான்காம் நிலை (விழிப்பு, தூக்கம், சொப்பனம் கடந்த ஞான நிலை) உயிர்களின் துன்பங்களை முற்றிலுமாக நீக்கி, ஒப்பற்ற சிவத்தின் துரிய நிலையால் கிடைக்கும் பேரின்பத்தை, அன்பு நெறியில் உள்ள அடியார்களுக்கு மட்டுமே வழங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!