Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3583

முருகா என்றால், அறியாமையின் காரணமாக நாம் பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம் நோயாக, வறுமையாக, மன உளைச்சலாக ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து, மீண்டும் பிறவாமைக்கு உரிய மார்க்கத்தை அறியச் செய்து, நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3582

முருகனை வணங்கிட, முன்ஜென்ம பாவங்கள் முருகனருளால் நீங்க நீங்க பாவ வினைகள் நீங்கிடும், பாவ வினைகள் நீங்க நீங்க, உண்மையான அறிவு வெளிப்படும் என்பதையும் அறியலாம். ஞானிகளிடத்து நம்பிக்கையும், மரணமிலாப் பெருவாழ்வு உள்ளதையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

குரு உபதேசம் – 3581

முருகா என்றால், முருகப்பெருமானை வணங்க வணங்க, பாவ புண்ணியத்தில் நம்பிக்கையும், நமக்கு உள்ள பொன்னும், பொருளும், பதவியும், கௌரவமும் முருகப்பெருமான் நமக்கிட்ட பிச்சையென்பதையும் அறிவதோடு, நமக்கு பிறரால் வருகின்ற துன்பங்களுக்கு காரணம் நாம் முன் ஜென்மங்களிலே செய்த பாவம்தான் என்பதையும் அறிந்து துன்புறுத்தியோர் துன்பத்தை பொறுத்துக் கொள்வானே தவிர, தனது பதவியையோ, அதிகாரத்தையோ, ஆள்பலத்தையோ, பொருளையோ பயன்படுத்தி பழிவாங்கவோ, துன்புறுத்தவோ மாட்டான். இதுவே முருகப்பெருமானை வணங்குவோர் பெறுகின்ற சிறப்பறிவாகும்.

குரு உபதேசம் – 3580

முருகா என்றால், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதான அறம், பொருள், இன்பம், வீடு பேறாகிய நான்கையும் அறியச் செய்தும், அதனை உணரச் செய்தும் அதை கடைப்பிடிக்கக் கூடிய வழிமுறையை அருளியும், அருளிக் காப்பவன் முருகப்பெருமான் ஒருவனே என்பதை அறியலாம்.