Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3431

சிவபுராணம், கோளறுபதிகம் போன்ற முற்றுப்பெற்ற முனிவர்களின் ஞான நூல்களை படித்துவிட்டு, மனம் ஒருநிலைப்பட்டு “ஓம் அகத்தீசாய நம” என்று குறைந்தது 24 நிமிடம் பூஜை செய்திட, மனம் செம்மைப்படும். அதிக நேரம் பூஜை செய்தால், பூஜையில் சோர்வு ஏற்பட்டு மனத்தளர்ச்சி வந்து, பூஜை செம்மையாக செய்ய முடியாது என்பதை உணர்ந்து, தவறாது தொடர்ந்து பூஜை செய்யும் நிலையைப் பெறலாம்.

குரு உபதேசம் – 3430

முருகா என்றால், எதையும் செய்து முடிக்கக் கூடிய வல்லமை வரும், உயிர்க்கொலை செய்து புலால் உண்பதை விடுத்து சைவ உணவை மேற்கொள்வார், சோம்பல் நீங்கும், மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள், வரவுக்கு மீறி செலவு செய்வதிலிருந்து விடுபட்டு போலி கௌரவத்திற்கு ஆளாகாமல் நெறிக்குட்பட்ட வாழ்வை வாழ்வார்கள், தானும் தன்னை சார்ந்த குடும்பத்தினருக்கும் ஆதரவாய் அவப்பெயர் ஏற்படாத வாழ்வை வாழ்வார்கள்.

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

குரு உபதேசம் – 3429

முருகா என்றால், இளமை, அழகு, கல்வி, பதவி இன்னும் அநேக சிறப்புகள் இருந்தாலும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்ற மகா மந்திரத்தை சொல்லியும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தால்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும். நாம் பெற்ற இளமையும், அழகும், கல்வியும், பதவியும் இன்னும் பெற்ற எல்லாமும் ஒரு காலத்தில் அழிந்தே போய்விடும் ஆனால் என்றும் அழியாத முருகனின் அருள் மட்டுமே ஆன்மாவைப் பற்றி தொடர்ந்து அழியாது உடன்வருவதுடன் நம்மையும் அழிவிலாமையாகிய மரணமிலாப் பெருவாழ்வையும் தந்து அழிவிலாமையை … Read more