குரு உபதேசம் – 3415
தன்னை அறிந்து, தன்னை வென்று தகைமை பெற்றவன்தான் முருகப்பெருமான். அவனது தாளினைப் பற்றி இறைஞ்சுவதே தகைமையாகும் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3414
மரணமிலாப் பெருவாழ்வு உண்டு என்பதை நிரூபித்து வெற்றி கண்டவன் முருகப்பெருமான்தான் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் வெற்றி பெற்றதோடு, அந்த ஞானத்தை தமது அடியவர்க்கும் அருள் செய்கின்றான் முருகன் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3413
நாம் எடுத்த இந்த ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்றால், ஈடு இணையில்லாத பேராற்றல் பெற்ற பெருந்தகையாளன் முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்றால்தான் முடியும்.