குரு உபதேசம் – 3402
காமம், கோபம், மோகம், லோபம் ஆகிய அனைத்தையும் வெல்லக் கூடிய அறிவையும், ஜென்மத்தைக் கடைத்தேற்றக் கூடிய வல்லமையையும் பெறலாம்.
குரு உபதேசம் – 3401
தானமும், தியானமும் செய்கின்ற மக்களுக்கு இடையூறு செய்யவல்ல நவக்கிரகங்களே தமது குறைபாடுகளால், அவர்களுக்கு எந்த பாதகமும் வராது காத்து, சாதகமாக செயல்பட்டு, அவர்களுக்கு நலவாழ்வை அருளும். பாவிகளுக்கு பாதகமாகவும், நவக்கிரகங்கள் புண்ணியவான்களுக்கு சாதகமாகவும் இருக்கும்.
குரு உபதேசம் – 3400
முருகப்பெருமான்தான் முதன் முதலில் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை பெற்றவனென்றும், மரணமிலாப் பெருவாழ்வை “ஜீவ தயவு” எனும் கொள்கையை கடைபிடித்ததால்தான் பெற முடிந்தது என்பதையும், ஜீவதயவே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதையும் அறியலாம். முருகனது அருளைப் பெற்று, ஜீவதயவினை கடைப்பிடித்து நாமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம்.