Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3380

முருகனே கதியென்றும், அவனே ஞானத்தலைவன் என்றும், ஞானமளிப்பவன் அவனே என்றும், உணர்ந்து உணவிலே சைவமும், தவறாது முருகனது திருவடிகளை மறவாது பூஜை செய்தும், தான தருமங்களை முறையாக செய்தும், தூய நெறிகளை கடைப்பிடித்து ஜீவகாருண்ய வழி நடந்து வரவர, முருகனின் அருள்கூடி தேகத்தினை மாற்றி ஞானதேகமாக ஆக்கிட வாய்ப்பும் வல்லமையும் பெற்று ஞானிகள் புடைசூழ ஞானியர் கூட்டம் உடன் துணைபுரிய ஞானத்தலைவன் வாசிநடத்தி கொடுக்க, நானிலம் போற்ற நன்னயமாய் தவங்களும் யோகங்களும் செய்துமே ஞானநிலையடைந்து மரணமிலாப் பெருவாழ்வையும் … Read more

குரு உபதேசம் – 3379

உயிர்க்கொலை செய்து புலால் உண்டு கொண்டே, இறைவனாம் முருகனது ஆசியை ஒருபோதும் பெற இயலாது என்பதை தெளிவாக உணர்வதோடு, இறைவன் முருகன் ஆசியில்லாமல் பாவவினை நீக்கமோ, ஆன்மீக வாழ்விலும் சரி, இல்லற வாழ்விலும் சரி அணுவளவும் முன்னேற முடியாது என்பதையும் உணர்வான்.

குரு உபதேசம் – 3378

முருகன் அருள்கூடி தான தருமங்களை தவறாது செய்து செய்து, முருகனின் அருளாசிகளைப் பெற்றும் பிற உயிர்களின் மனமகிழ்வை பெற்றாலும், நாம் அருள் பெற தடையாய் இருப்பது முதலில் நாம் உண்ணுகின்ற உணவிலேதான் பெரும்பாவம் செய்கிறோம் என்பதை உணர்வான். ஆதலினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து முதலில் சைவத்திற்கும், பிறகு சுத்த சைவத்திற்கும் அதன் பின் வீரசைவ நெறிக்கும் அதன்பின் அதிவீர சைவநெறிக்கும் வந்து காமத்திற்கு காரணமாய் உள்ள இத்தேகத்தினை கட்டுப்படுத்தி காமத்தினால் விளையும் வினைகளை குறைத்திடுவான்.