குரு உபதேசம் – 3376
எந்த காமதேகம் பிறவிக்கு காரணமாக இருக்கின்றதோ அந்த காமதேகமே பிறவியை ஒழிப்பதற்கும் காரணமாய் இருப்பதை ஞானிகளை வணங்கியதால் அறிந்து கொண்ட போதும் அதை நம்மால் கடைப்பிடித்து அதன் அற்புத இரகசியங்களை அறியஒட்டாமல் செய்வது நாம் முன் ஜென்மங்களிலே செய்த பாவங்கள்தான் என்பதை உணர்வான்.
குரு உபதேசம் – 3375
முதன்மைத் தலைவன் முருகன் என்பதை அறிந்தும், அவரது ஆசியினால்தான் நவகோடி சித்தர்களும் உருவாகியுள்ளனர் என்பதையும் அறியலாம். எனவே அகத்தீசா என்றாலும், அருணகிரிநாதா என்றாலும் பதஞ்சலிமுனிவா என்றாலும், பட்டினத்தடிகள் என்றாலும், நந்தீசா என்றாலும், நந்தனார் என்றாலும் நவகோடி சித்தர்களுள் யாரை அழைத்தாலும், அழைப்பது யாரை அழைத்தாலும் அந்த அழைப்புகள் அனைத்தும் முருகனது திருவடிகளையே சென்றடையும். “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று சொல்லுங்கள். நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியை பெறுங்கள். சுருதியாம் அருணகிரி சொல்லிய அலங்காரம் கருதியே … Read more
குரு உபதேசம் – 3374
குற்றமற்ற அருணகிரி கூறிய அலங்காரம் கற்றறிய வேண்டுமே கருத்து. பற்றற்ற அருணகிரி பகர்ந்த அலங்காரம் கற்றறிய வேண்டுமே கருத்து. நலம் பெற்ற அருணகிரி நாட்டிய அலங்காரம் பலம் பெறவே கற்றிடுவர் பணிந்து. பலம் பெற்ற அருணகிரி பாடிய அலங்காரம் நலம் பெறவே கற்றிடுவர் நயந்து. அல்லலற்ற அருணகிரி அருளிய அலங்காரம் தொல்லையற வாழ்வோர்க்கு துணையாம். துணையாம் அருணகிரி தோற்றிய அலங்காரம் தினையளவேனும் கற்க திடமே.