குரு உபதேசம் – 3373
ஞானமென்பதே முருகன் திருவடிதான் என்றும், அவன் திருவடியைப் பற்றி பூசிப்பதே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்றும், அவன் திருவடிப் பூசையே மரணமிலாப் பெருவாழ்வை தரும் என்றும் அறியலாம். முருகப்பெருமான் மரணமிலாப் பெருவாழ்வை முதன் முதலில் பெற்றவன் என்று உணர்வதோடு ஒரே தன்மை உடையவனாய் இருப்பவன். முருகப்பெருமானுக்கு உடல் வளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் இல்லை. ஓவியம் போன்று என்றும் மாறா அழகனாய் ஒரே தன்மையனாய் இருப்பவன் அத்தகைய அழகன், அமரன், ஆற்றல் பொருந்திய ஆறுமுகப் பெருமான் திருவடியைப் போற்றுவோம் அனைத்து … Read more
குரு உபதேசம் – 3372
ஏழைகளுக்கும், பிற உயிர்களுக்கும் பசியாற்றுவிப்பதற்குரிய வாய்ப்பையும் பெறலாம். தாம் அறிந்த உண்மைப் பொருளாம் ஞானக்கருத்தை சொல்வதற்கான அறிவையும் பெறலாம்.
குரு உபதேசம் – 3371
ஒப்பற்ற ஞானத்தலைவனாய் விளங்கி நின்ற முருகப்பெருமான் ஆசியினை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுவதற்கான முயற்சிகளை முருகன் வகுத்த தூயநெறிதனிலே சென்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதே சிறப்பறிவாகும். சன்மார்க்க வாதிகளாகிய நமக்கு தலைவன் யாரெனின், கிடைத்தற்கரிய பெருந்தலைவன் முருகப்பெருமான் என்றே அறிந்து போற்ற வேண்டும். ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.
குரு உபதேசம் – 3370
மனிதவர்க்கத்திலேயே முதன்முதலில் உடல்மாசு, உயிர்மாசு, மனமாசுகளை கண்டறிந்து நீக்கி வெற்றி பெற்று மகானாக மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவனாக யாவருக்கும் எட்டா அருட்ஜோதி நிலைதனை அடைந்து முற்றுப்பெற்றவன் மகான் முருகப்பெருமான் மட்டுமே. அவனே இவ்வுலகின் தோன்றிய உயிர்கள் ஏன் தோன்றுகிறது? ஏன் வளர்கிறது? ஏன் இறக்கிறது? என்பதற்கும் அவை வாழும் போது சீராக வாழாமல் நரை, திரை, மூப்பை அடைவது ஏன்? ஏன் நோயுறுகிறது? ஈளை இருமல் எதனால் வந்தது? மூப்பை வெல்லுவது எப்படி? நரை, திரை வராமல் … Read more