மகான் திருமூலதேவர் அருளிய அருளாசி ஆசி நூல் 02.05.2022
1961 Mahan ThiruMooladevar aruliya arulaasi nool 02.05.2022
1961 Mahan ThiruMooladevar aruliya arulaasi nool 02.05.2022
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒருமுறையேனும் “முருகா” என்று முருகனின் நாமத்தை மனமுருகி சொல்லிவிட்டால் சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், அன்னதானம் செய்கின்ற அறிவும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
Subramanyar nool pagam 945
1960 Mahan ThiruMaaligaidevar aruliya arulaasi nool 01.05.2022
017 01.05.2022 – 08.05.2022
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானிகள் ஆட்சியில் பங்கு பெறவும், ஞான ஆட்சியில் துன்பமின்றி வாழவும் விரும்புகின்றவர்கள், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து மாதம் ஒருவருக்கேனும் அன்னதானம் செய்தும், ஞானியர் திருவடி பூஜைகளை தவறாது செய்தும், தானதருமப் பணிகளுக்கு தொண்டுகள் செய்தும் வரவர, எந்தவித அச்சமும் இல்லாத வாழ்வை ஞானிகள் ஆட்சியில் வாழலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானநூல் என்பவை ஞானியர் திருவடிகளைப் பற்றி பூஜிக்க தூண்டுவதாயும், ஞானமளிக்க வல்லதாயும் இருக்க வேண்டும். அதுவும் ஞானபண்டிதனது பெருமைகளையும், ஞானபண்டிதன் திருவடிகளைப் பற்ற ஏதுவாய் உள்ள நூல்கள் மிகவும் பயனுள்ளதாகும்.
ஞானசித்தர்கள் ஆட்சி புண்ணியவான்களின் ஆட்சி, புனிதமான ஆட்சி, தயவு பெருகும் ஆட்சி, தர்மம் ஓங்கி நிற்கும் ஆட்சி என்பதையும் அறியலாம்.