குரு உபதேசம் 4548
அகத்தீசனை வணங்கிட: பெறுதற்கரிய மானுடதேகம் பெற்றவர்கள்தான் பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அவ்வுயிர்களுக்கு உதவி செய்து அவ்வுயிர்படும் துன்பத்தை நீக்குகின்ற வல்லமையையும் பெற்றது என்பதை அறியலாம்.
அகத்தீசனை வணங்கிட: பெறுதற்கரிய மானுடதேகம் பெற்றவர்கள்தான் பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அவ்வுயிர்களுக்கு உதவி செய்து அவ்வுயிர்படும் துன்பத்தை நீக்குகின்ற வல்லமையையும் பெற்றது என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட: மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களை உணரச் செய்தும் மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம். மகத்துவம் பொருந்திய மணிவாசகப் பெருமானை அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம். முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும். தாய்மை குணம் தந்த முருகனை வாய்மையாய்ப் போற்றி வழிபடுதல் நலமே. கற்றதன் பயனே கழல் பணிதல் என்றே உற்றநல் அறிவென்றே உண்மை உணர்வோம்.
அகத்தீசனை வணங்கிட: நாம் பல ஜென்மங்களிலே மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்கள் இந்த ஜென்மத்திலே நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கு தடையாய் உள்ளது என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட: என்றும் நிலைப்பெற்று அருளுகின்ற முருகப்பெருமான் திருவடியே உண்மை என்று அறியலாம். …………….. பகலவனாம் முருகனின் பாதம் பணிந்திடவே இகல்எல்லாம் விலகியே இன்பம் உண்டாம்.
அகத்தீசனை வணங்கிட: நாம் கற்ற கல்வியும், நாம் பெற்ற செல்வம் அனைத்தும் அநித்தியமானது என்றும், ஆசான் திருவடி மட்டுமே நித்தியமானது என்றும் அறியலாம்.
முருகனை வணங்கிட: சதானந்த நிலை நின்று அருட்பெருஞ்ஜோதி வடிவினனாகி எண்ணிலா கோடி பரந்து விரிந்து அருள் பிரகாசமாய் சொல்லொண்ணா பேரானந்த நிலை நின்று அருளும் முருகப்பெருமான் அமைதியுடன் பேரானந்த நிலை நின்று அருள் புரிகின்றனன். பேரானந்த நிலை நிற்கும் முருகனை அழைத்தாலன்றி நம்மீது அவன்தன் அருட்கண் பார்வை திரும்பாது. இவ்வுலகினிலே உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு ஜீவதயவின் வழியில் தூய நெறி வழி நடந்து, எவ்வுயிருக்கும் தீங்கு நினையாது உள்ள மென்மையான … Read more
அகத்தீசனை வணங்கிட: பசியுள்ள பிள்ளைகள் தாயிடம் உணவு கேட்டால் தருவாள். ஆயிரம் ஆயிரம் தாயினும் மிக்க தயவுடை தனிப்பெருங்கருணை மிக்க ஞானிகள் திருவடி பணிந்து பத்தினி பெண்டிரும், பக்தர்களும், யோகிகளும், பஞ்சபராரிகளும், பாதிக்கப்பட்டோரும், பண்புள்ளோரும் நலம் பெற வேண்டுகோள் வைத்து, வேண்டுகோளை கேட்டால்தான் தருவான் தனிப்பெருங்கருணையுடைய ஞானிகளெல்லாம். கேட்டால்தான் பெறலாம் என்பதையும் கேட்காவிட்டால் ஞானிகள் எப்படி அருள் செய்ய முடியும். ஆதலினால் இடைவிடாது தனக்காகவும், தன்னை சார்ந்தவர்களுக்காகவும் உலக நன்மைக்காகவும் தொடர்ந்து திருவடி பூஜைகளை செய்ய வேண்டுமென்றும் … Read more
முருகனை வணங்கிட: உலகத்தில் அதர்மம் மிகுதியாகும் போதெல்லாம் ஞானத்தலைவன் முருகப்பெருமானே விஷ்ணுபகவானாகவும், அகத்தியராகவும், அவதாரங்களாகவும் தோன்றி அதர்மத்தை அழித்து நீதியை நிலை நாட்டினான் என்பதை அறியலாம். தாயினும் மிக்க தயவுடை தனிப்பெருங்கருணை தெய்வம் முருகப்பெருமானே வேற்படை கொண்டு அதர்மத்தை அழித்து பண்புடையோரை காப்பான் என்பதையும் அறியலாம். பொல்லா மாமாயை சூழ் கலியுகம் காக்க மக்களை மீட்க ஞானயுகம் அமைக்க அவனே ஞானியாக அரங்கர் வடிவினில் அவதரித்துள்ளதையும் அறியலாம். பூரணமாக பூவுலகை ஆளவே வாரணக்கொடியோன் வருவான் உண்மையே.