Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4436

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. கண்மூடி மௌனமாக அமர்ந்திருப்பது தியானம் அன்று. மனதினுள் முருகப்பெருமான் திருவடிகளை எண்ணி முருகனது திருநாமங்களை மந்திர ஜெபமாக சொல்லி வணங்குவதே தியானம் என்று பொருள்படும். அதுவே தவமும் ஆகும். அதுவே ஆசி பெறும் வழியும் என்பதை உணரலாம்.

குரு உபதேசம் 4435

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. நவகோடி சித்தரிஷிகணங்களுக்கு தலைவனாய், முப்பத்து முக்கோடி தேவரிஷிகளுக்கும் தலைவனாய், நவகிரக நாயகர் தலைவனாய், மும்மூர்த்திகளுக்கும் மேலாய், சப்தரிஷிகளுக்கும் தலைவனாய், அஷ்டதிக்கு பாலகர்களுக்கும் தலைவனாய், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிமார்களுக்கும், பதினான்கு லட்ச தேவர்களுக்கும் தலைவனாய் விளங்கி நின்று அருட்பேராற்றலாய் சதகோடி சூரியபிரகாசத்துடன் உலக உயிர்களிடத்தெல்லாம் நீக்கமற நிறைந்து நிற்கின்றவனும் மும்மூர்த்திகளுக்கும் எட்டாத முருகப்பெருமான் கலியுகத்தின் கொடுமைகளைக் கண்டு தானே நேரில் அவதாரமாக தோன்றி மனித ரூபத்திலே இவ்வுலகினில் வருகை தந்து உலகப்பெருமாற்றத்தை ஏற்படுத்தி … Read more

குரு உபதேசம் 4434

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி வணங்கி ஆசி பெற்றிட்டால்…. ஜீவதயவே வடிவானவனும், ஜீவதயவினை அளவிலாது பெருக்கி பெருக்கி செஞ்சுடர் ஜோதி வடிவினனாகி சதகோடி சூரிய பிரகாசமுள்ள அருட்பெருஞ்ஜோதி சுடராகி, என்றும் மரணமிலாத பெருவாழ்வையும் பிறப்பு இறப்பற்ற நிலையையும், ஆயிரங்கோடி மன்மதர்களை ஒத்த பேரழகுடையவனாய், மாறா இளமையுடையவனாய் ஆகி, ஞானத்திற்கே மூல சக்தியாய், ஞானபண்டிதனாக விளங்கி இயற்கை கடவுளோடு இயற்கை கடவுளாய் இரண்டற கலந்து எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றவனுமாகிய முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றாலன்றி … Read more

குரு உபதேசம் 4433

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதன் கடவுள் தன்மையை அடைவதற்கான மார்க்கத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவன் முருகப்பெருமானே ஆவார் என்பதை அறிந்து தெளிந்து உணரலாம். உலக மக்கள் மாணவர்களாக இருந்தபோது பள்ளிகளில் தக்கமுறையில் பக்திநெறியையும், புண்ணியத்தின் அவசியத்தையும் போதிக்காத காரணத்தினாலே தான், மாணவர்களிடத்து பக்தி இல்லாமல் போய் பாவ புண்ணியங்களை அறியாது, தீய நெறியில் சென்றதாலே இவ்வுலகினில் புண்ணியம் குறைந்து இயற்கை சீற்றங்கள் உண்டாவதை அறியலாம். …………….. முப்பாலும் கடந்த முருகப்பிரான் திருவடியை தப்பாமல் … Read more

குரு உபதேசம் 4432

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எந்த காமதேகம் நம்மை வஞ்சித்து தொடர் பிறவியை உண்டாக்குகிறதோ அந்த காமதேகத்தை சுத்தி செய்து சுத்தமாக்கி இனி பிறவா மார்க்கத்தையும் நமக்கு அருள்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.  

குரு உபதேசம் 4431

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் தலைமையில் நடக்கக்கூடிய ஞான ஆட்சியில் கலப்படம் இருக்காது, விலைவாசி ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட்டு மக்கள் ஞானிகள் பாதுகாப்பிலே பாதுகாப்புடன் அமைதியான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம். …………….. அமைதியான வாழ்வு அருளும் முருகனை இமைப்பொழுதும் மறவாது ஏற்றியே தொழுவோமே. பயன்மிக்க முருகனின் பதத்தை போற்றிட நயமிக்க ஆட்சி நல்குவார் முருகனே!

குரு உபதேசம் 4430

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பாவபுண்ணியங்களில் நம்பிக்கையற்றோர், கடவுள் நம்பிக்கை இல்லாதோர், நீதிநெறிக்கு உட்படாத தான்தோன்றிதனமான வாழ்வை வாழ்வோர்களது எண்ணிக்கை மிகுதியாக மிகுதியாக பூமியின் பாவச்சுமை ஏறுவதினாலே மிகுதி மழையும், மிகுதி வறட்சியும் ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை அறியலாம். நாட்டில் பாவிகள் குறைந்து புண்ணியவான்கள் அதிகமாக அதிகமாக இயற்கை கட்டுக்குள் இருந்து மக்களை வாழ வைக்கும் என்பதையும் அறியலாம். …………….. கார்மயில் வாகனன் கந்தனைப் போற்றிட பார்போற்ற வாழ்வார் பயனே!

குரு உபதேசம் 4429

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், முக்தி மார்க்கம், யோக மார்க்கம், மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கம் என்ற எந்த ஒரு மார்க்கத்தை கடைப்பிடித்து முக்தியடைய விரும்பினாலும் முக்திக்கு தலைவன் முருகனே என்பதையும் முருகன் அருளினால்தான் பக்தியும், யோகமும், ஞானமும், முக்தியும் மரணமிலாப் பெருவாழ்வும் கைகூடும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4428

முருகப்பெருமான் திருவடிகளைப்  பற்றி  பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனே தமிழை உருவாக்கியவன், முருகனே ஞானத்தையும் உண்டாக்கியவன், முருகனே அனைத்து கலைகளுக்கும் தலைவன், தமிழே ஞான மொழி, தமிழ் கற்றால்தான் ஞானம் பெற முடியும் எனும் சிறப்பறிவை பெறலாம். தமிழ் கடவுள் முருகனே ஞானபண்டிதனாக இருப்பதையும், முருகப்பெருமான் திருவடி பற்றி மனமுருகி பூஜித்து வணங்க வணங்க உயிர்க்கொலை செய்து புலால் உண்டதால்தான் நமக்கு ஞானம் தடைபட்டதை உணர்வார்கள். புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டாலன்றி ஞானத்தில் முன்னேற … Read more