Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4427

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இயற்கை சீற்றங்களினாலும், பல்வேறு வகையான இடையூறுகளினாலும், பாதிக்காமல் வாழவிரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து கடவுள் நம்பிக்கையோடு முருகனை வணங்க வணங்க இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்கலாம். இயற்கை கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களிலேயே மிகச் சிறந்த உயிரினம் மனிதர்களே. மனிதர்களும் மற்ற ஜீவராசிகளும் இயற்கைக் கடவுளால்தான் காப்பாற்றப்படுகிறோம் என்பதை அறியவில்லை. ஆயினும் இயற்கை நம்மை தோற்றுவிக்கும், காக்கும், அழித்துவிடும். ஆனால் இயற்கையை வென்ற முதுபெரும் தலைவன், இயற்கையோடு இயற்கையாக இரண்டற … Read more

குரு உபதேசம் 4426

முருகப்பெருமான் திருவடிகளைப்  பற்றி  பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்பதும், உயிர்க்கொலை செய்யக் கூடாது என்பதையும் ஜீவதயவினை தரவல்லதான அன்னதானம் செய்ய வாய்ப்பையும் பெறுவதோடு, பாவசுமையிலிருந்து மீண்டு இயற்கை சீற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்பிலிருந்து தப்பித்தும் கொள்ளலாம், இயற்கை சீற்றம் ஏற்படாதவாறும் காக்கலாம். சைவத்தை கடைப்பிடிப்போர் மிகுதி ஆகஆக இயற்கை சீற்றம் இருக்காது, பருவமழை சீராக பெய்யும், நிலநடுக்கம் வராது, பூகம்பம் உண்டாகாது என்பதை அறிவதோடு முருகனது அருளை பெற்றால்தான் இவையனைத்தையும் அறிய … Read more

குரு உபதேசம் 4425

முருகப்பெருமான் திருவடிகளைப்  பற்றி  பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சைவத் தலைவன் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்தாலன்றி எது உண்மை? எது பொய்? என்று புரியாது. மக்களை வழிநடத்த உண்மை அறிவே வேண்டும். ஆதலினாலே சைவத்தலைவன் முருகப்பெருமானை வணங்கிட உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். நாட்டினை வளமுள்ளதாக மாற்றிட முதலில் அதிகாரத்தில் உள்ளோரும், பதவியில் உள்ளோரும், நாட்டை வழிநடத்தும் அதிகாரிகளும், மக்களை காக்கின்ற பணிகளிலே, வழிநடத்தும் பணிகளிலே என நாட்டில் உள்ள … Read more

குரு உபதேசம் 4424

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதர்கள் ஆட்சியில் மிகுதி மழை, மிகுதி வறட்சி, நிலநடுக்கம் போன்றவைகள் வரத்தான் செய்யும். ஞானிகள் ஆட்சியிலே மிகுதி மழை இருக்காது, இயற்கை சீற்றங்களும் இருக்காது, தேவைக்குட்பட்ட மழை பெய்து நாடெங்கும் நல்ல சூழ்நிலையில் ஞானவாழ்வை வாழ்வார்கள். கொள்ளை, கொலை, கற்பழிப்புகள் போன்றவை இருக்காது. எங்கும் எதிலும் அமைதியான வாழ்வு உண்டாகும் என்பதை அறியலாம். …………….. கடந்தான் கந்தனின் கழலிணை போற்றிட கடக்க துணை வரும் கந்தன் கழலே.

குரு உபதேசம் 4423

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மக்களின் துன்பங்களை உணர முடியாத அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளும் அவரவர்க்கு உண்டான வாய்ப்பை இழப்பார்கள் என்பதை அறியலாம். …………….. கொற்றவன் முருகனை கூவி அழைத்திட நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவனே!

குரு உபதேசம் 4422

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இயற்கை சீற்றங்களினாலே எந்தவிதமான இடையூறுகளும் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானை வணங்குவோர்க்கு வராது என்பதை அறியலாம். …………….. பணிந்தேன் முருகனின் பாதம் பணிந்தேன் துணிந்தேன் கூற்றுவனை கொல்லவும் துணிந்தேன்.

குரு உபதேசம் 4421

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி  பெற்றிட்டால்…. உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்றும், மது அருந்துகின்றவன், சூதாடுகின்றவன் போன்றவர்களது நட்பு அமையாமல் நம்மை காப்பான். ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்று கூறி நாமஜெபம்தனை தொடர்ந்து செய்கின்றவர்களுக்கு நல்ல நட்பு அமையும், சொந்த வீடு அமையும், பண்புள்ள மனைவி, பிள்ளைகள் உண்டாகும், வறுமையில்லா வாழ்வினை வாழ்கின்ற அமைப்பையும் பெறுவார்கள். தொடர் பிறவிக்கு காரணம் அறியாமை என்றும், அறியாமைக்கு காரணம் மும்மலக் குற்றம்தான் என்பதையும், மும்மல குற்றத்தை … Read more

குரு உபதேசம் 4420

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு ஏழைக்கு உணவு தந்தால் கடவுளுக்கே உணவு தந்ததாக அறிகின்ற அறிவும், ஒரு ஏழைக்கு மானம் காக்க தருகின்ற உடை கடவுளுக்கே உடை தந்ததாக அறிகின்ற அறிவைப் பெற்று, எல்லாம் கடவுளால் படைக்கப்பட்டவர்களே என்றும், கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு செய்கின்ற அத்தனையும் கடவுளுக்கு செய்வதாகவே அர்த்தம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4419

முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பிறப்பு, இறப்பு, வீடுபேறு ஆகியவற்றைப் பற்றி அறிந்தாலும் பிறவாநிலையாகிய வீடு பேற்றிற்கு தலைவனும், அதை அளிக்கும் தலைவனும் முருகனே என்பதை அறியலாம்.