Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4584

முருகனை பூஜித்து ஆசிபெற்றிட: உயிர்களிடத்து செலுத்துகின்ற அன்பே பக்தியாக மாறும். அந்த பக்தியே இறைவனிடத்து ஆசிபெற உறுதுணையாய் வரும் என்பதையும் அறியலாம். மாசற்ற மணிவாசகன் திருவடியை ஆசற்றார் போற்றியே அகம் மகிழ்வர். கனிவுடைய மணிவாசகன் கழலிணை போற்றிட பணிவான வாழ்வும் பண்பும் உண்டாம். வாட்டமற்ற மணிவாசகன் வழங்கிய வாசகத்தை நாட்டமுற்று படித்திட நலமாம் சித்தியே கல்லும் கனியும் கனிவான வாசகத்தை அல்லும் பகலும் அருளாளரே போற்றுவர்.

குரு உபதேசம் 4583

அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட: மற்ற உயிர்கள் மகிழும்படியான வகையிலே வாழ்கின்ற அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் 4582

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றால்: மும்மலமாகிய சிறையை உடைத்து மும்மலச்சிறையில் அடைப்பட்ட ஆன்மாவை விடுவித்து சித்தி பெறலாம் என்பதும், அந்த மும்மலச் சிறையை உடைத்தெறியும் வல்லவன் முருகனே என்றும் முருகப்பெருமானால்தான் மும்மலச் சிறையை உடைத்து சிறைப்பட்ட ஆன்மாவை விடுவித்து கடைத்தேற்ற முடியுமென்றும் அறியலாம். வல்லவன் முருகனை வாழ்த்துவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம். ஆற்றலாம் முருகனின் அருளை தினமும் போற்றியே மகிழ்வர் புண்ணியரே. மணிவாசகப் பெருமானை மகிழப் பூஜித்தால் கனிவான சித்தியை காண்பார் உண்மையே. வள்ளல் … Read more

குரு உபதேசம் 4581

முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: வாசிக்கு தலைவன் முருகப்பெருமான் தான் என்பதை அறியலாம். அச்சம் தவிர்த்தருளும் அருளாளன் முருகனையே நிச்சயமாக நினைத்திடல் நலமே சத்து அறிந்த முருகனின் தாளிணை போற்றிட சித்து அனைத்தும் திடமாம் சித்தியே.

குரு உபதேசம் 4580

அகத்தீசன் ஆசிபெற்றிட்டால்: ஞானிகள் அத்தனைபேரும் முருகப்பெருமானின் ஆசி பெற்றே வாசி வசப்பட்டவர்கள் என்று அறியலாம்.

குரு உபதேசம் 4579

முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து உண்பதே உண்மையான சைவம் என்று அறியலாம். வீடுபேறு அருளும் வேலவன் திருவடியை நாடியே போற்றிட நன்மை உண்டாம். கற்றறிந்த முருகனின் கழலிணை போற்றிட கற்றறிந்தார் கற்ற கல்வியின் பயனே. கல்வியின் பயனே கழலிணை பணிதல்.

குரு உபதேசம் 4578

அகத்தீசன் ஆசிபெற்றிட்டால்: ஜீவதயவு பெருகுவதற்கு சைவ உணவே சிறந்தது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4577

முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: முனிவர்களுக்கெல்லாம் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற அறிவை பெறலாம். நற்றவ முருகனை நாளும் போற்றிட உற்ற தவமது ஓதி உணர்வீர். ஆற்றலாம் முருகனின் அருளைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

குரு உபதேசம் 4576

அகத்தீசன் ஆசி பெற்றிட்டால்: ஞானிகளின் திருவடிகளைப் பற்றி பூசிப்பதே உண்மையான பக்தி என்பதை அறியலாம்.