Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4484

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முருகப்பெருமானை வணங்க வணங்க, வணங்குவோரிடம் உள்ள லோபித்தனம் மறையும். அன்னதானம் செய்வார்கள், ஜீவதயவை பெறுவார்கள், ஜீவதயவின் தலைவன் முருகனின் அருள்பார்வைக்கு ஆளாகுவார்கள். அதனால் செல்வம் மேலும் பெருகும், நீடிய ஆயுளும், மனவளமும், அருள்வளமும் பெருகும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் பெறுவார்கள். ……………… பிறப்பை அறுக்கும் பெருந்தகையாம் முருகனை சிறப்புடன் பூசிக்க சித்தியும் உண்டாம். உண்டாம் சித்தி ஓதி உணர்ந்திட கண்டவர் கண்ட கருத்து இதுவாகும்.

குரு உபதேசம் 4483

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. நிலையாமையை உணரச் செய்தும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிலைப்பதற்கு அருள்செய்வதும் ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்பதை உணரலாம்.

குரு உபதேசம் 4482

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. வாயில்லா ஜீவன்களுக்கு இடையூறு செய்வது தடுக்கப்படும். ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, போராட்டத்தின் மூலமாகவோ மக்களை கொன்று குவிப்பவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் அறியலாம். ……………… மாட்சிமை மிக்க மாமன்னன் முருகனே ஆட்சி புரிவான் அகிலம் செழிக்க.

குரு உபதேசம் 4481

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. நாட்டுப்பற்றுள்ள மக்கள் ஆட்சிக்கு வருவார்கள், பருவமழை தவறாது பெய்யும், இயற்கை சீற்றங்கள் இருக்காது, கொடிய நோய்கள் வராது, கலப்படம் இருக்காது, லஞ்ச லாவண்யங்கள் இருக்காது, நாட்டில் இயற்கைவளம் பெருகி எப்போதும் பசுமையாக இருக்கும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4480

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இகவாழ்வாகிய இல்லறமாயினும் சரி, பரவாழ்வாகிய துறவறமானாலும் இன்னும் அநேகம் அநேகமான விவசாயம், மருத்துவம், தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சிகள், அரசியல், பதவிகள், பட்டங்கள் என எந்த துறையாயினும் சரி இவற்றில் வெற்றி பெற வேண்டுமாயின் இக்கலைகளுக்கும், அறிவிற்கும், வாழ்விற்கும் காரணமான தலைவனாய் இருந்து நம்மை வழி நடத்துபவன் முருகப்பெருமானே என்றும், முருகனருள் கூடினாலன்றி யாதொன்றிலும் வெற்றி பெறவோ, வெளிப்படவோ பிரகாசிக்கவோ முடியாது என்பதையும் அறியலாம். எல்லாவற்றிற்கும் மேலானதும் அனைத்தையும் தரவல்லதானதும், கிடைப்பதற்கரிய … Read more

குரு உபதேசம் 4479

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. அறம், பொருள், இன்பம், வீடுபேற்றிற்கு தலைவனான முருகப்பெருமான் திருவடிகளை பூஜிக்க பூஜிக்க இளமை நிலையாமை, உடம்பு நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை அறியச்செய்தும் இதற்கு காரணமாய் இருக்கக்கூடிய தூல தேகத்தையும், சூட்சும தேகத்தையும் அறியச்செய்து அதாவது புறஉடம்பையும், அகஉடம்பையும் அறியச் செய்து, தூல தேகத்தினில் உள்ள காமவிகாரத்தை நீத்து போகச்செய்து சூட்சும தேகமாகிய ஒளிதேகத்தை பெற அருள்செய்வான் முருகன் என்பதையும் அறியலாம். ………………. வித்தகன் முருகனை விரும்பியே போற்றிட சத்தும் சித்தும் கைவசமாமே. … Read more

குரு உபதேசம் 4478

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தாய் தந்தையர் இருக்கும்போது அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செவ்வனே செய்து தாய் தந்தையரிடம் ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும் அதை விட்டுவிட்டு வாழும் போது தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவரசெய்யாமல் தாய் தந்தையர் இறந்தபின் அவர்களுக்கு நன்மை செய்கிறேன் என்று அமாவாசை விரதம் இருப்பது போன்ற, இறந்தவர்களுக்கு செய்கின்ற சடங்குகளால் ஆன செயல்களை பேரறிவுடைய ஞானிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இருக்கும்போது கடமையை சரிவர செய்யாமல் இறந்தவர்களுக்காக செய்கின்ற அத்துணை … Read more

குரு உபதேசம் 4477

முருகப்பெருமான் திருவடிகளைப்பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இவ்வுலகினில் முருகப்பெருமான் தலைமையிலே ஞானிகளின் அருட்பார்வையால் கலியுகம் முடிந்து ஞானயுகம் துவங்கி ஞானிகள் ஆட்சி ஏற்படுவது உறுதி என்பதையும் அது வெகுவிரைவில் இவ்வுலகினில் அமைக்கப்படும் என்பதையும் தெளிவாக உணரலாம். முருகப்பெருமான் தலைமையில் நடக்கவிருக்கும் ஆட்சியில் பணிபுரிய, பதவிவகிக்க, தொண்டு செய்ய, சேவையாற்ற, வழிநடத்த என பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தேவைப்படுவார்கள் என்றபோதும் அத்தொண்டரெல்லாம் முருகப்பெருமான் வகுத்த அடிப்படை தகுதிகளை பெற்றால்தான் முருகனது ஆட்சியில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். உயிர்க்கொலை தவிர்த்து, … Read more

குரு உபதேசம் 4476

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்தால்…. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்த புண்ணியவான்களுக்கு மட்டுமே முருகப்பெருமானை பூஜிக்கவும், வழிபடவும், அருளைப்பெறவும் வாய்ப்புகள் கிடைக்குமென்றும் மற்றயவர்க்கெல்லாம் அந்த வாய்ப்பு இல்லை என்பதையும் அறியலாம்.