Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4419

முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பிறப்பு, இறப்பு, வீடுபேறு ஆகியவற்றைப் பற்றி அறிந்தாலும் பிறவாநிலையாகிய வீடு பேற்றிற்கு தலைவனும், அதை அளிக்கும் தலைவனும் முருகனே என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4418

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. விலைவாசி கட்டுக்குள் இருக்கும், லஞ்சலாவண்யங்கள் இருக்காது, எந்த பொருளிலும் கலப்படம் இருக்காது, எங்கும் சமநீதி, சமதர்மம் ஓங்கி அரசு அதிகாரிகள் முதல் சாதாரணமானவர்களும் முருகனது அருளினாலே நேர்மையான அதிகாரிகளுக்கும் நிம்மதி உண்டாகும். …………….. ஆலவாய் அண்ணலின் அருந்தவ புதல்வனே ஞாலத்தை ஆள்வான் நன்மக்கள் போற்றவே. யுகம்பல கடந்த உத்தம வேலனை அகம்மகிழ போற்றிட ஆனந்தமாமே.

குரு உபதேசம் 4417

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பொது நிர்வாகத்திலுள்ளோர் முருகப்பெருமானை வணங்க வணங்க தக்க சான்றோர் நட்பினை முருகனருளால் அமையப் பெறுவர். தக்க சான்றோர் நட்பும், முருகனது ஆசியையும், அருளையும் பெறுகின்றவர்தான் சிறப்பான வகையில் நிர்வாகம் செய்து மக்களுக்கு உகந்த வகையில் நடந்து ஆசிபெறலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4416

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மக்கள் துன்பங்கள் தீரவே ஞானிகள் தலைமையிலே ஞானிகள் ஆட்சி அமைகிறது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4415

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உண்மையான சாதுசங்கம் ஒன்று உண்டென்றால் அது முருகப்பெருமான் தலைமையேற்று நடத்துகின்ற ஏழாம் படை வீடாம் ஓங்காரக்குடிலாகும். குடிலதனிலே வந்து அரங்க தரிசனம் பெற்றிட்டால் அரங்கனாய் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமானின் அருளைப் பெற்றுவிட்டால் நாட்டினிலே இயற்கை சீற்றங்கள் கட்டுப்படும், மிகுதி மழை இருக்காது, பருவமழை தவறாது பெய்யும் என்பதையும் அறியலாம். …………….. தேற்றமாம் முருகனின் திருவடியைப் போற்றிட மாற்றமும் உண்டு மனமும் செம்மையே.

குரு உபதேசம் 4414

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாது சைவ உணவை மேற்கொண்டு முருகனை பூஜிக்க பூஜிக்க பூஜிப்போர் எந்த வகையிலும் எந்தவிதமான துன்பமும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ்வார்கள் என்பதை அறியலாம். …………….. அண்ணல் முருகனின் அருளினைப் போற்றவே இன்னலும் இல்லை இருவினையும் இல்லை. காலத்தை வென்ற கந்த கடவுளை ஞாலத்தை ஆள்வான் நன்மக்கள் வாழவே.

குரு உபதேசம் 4413

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கடவுளுக்கும் கடவுளான கந்தக்கடவுளான முருகப்பெருமானை போற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் நாமும் கடவுளாகலாம் என்பதை அறியலாம். …………….. கடவுளுக்கும் கடவுளான கந்தக்கடவுளை திடம்பட பூஜிக்க சித்தியும் உண்டாம்.

குரு உபதேசம் 4412

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான், தாய்தந்தையால் எடுத்த இந்த காமதேகத்தில் சத்தும் அசத்தும் நரகமும் சொர்க்கமும் கலந்துள்ளதை பலகோடி யுகங்களாய் பாடுபட்டு தவமாய் தவமிருந்து உலக உயிர்கள்பால் அளவிலாத தயவு காட்டி தயவே வடிவானவனாக மாறி மகா தவசியாக விளங்கி ஆராய்ந்து ஆராய்ந்து கண்டு கொண்டான். காமதேகத்தினுள் உள்ள அசத்தை நீக்கி சத்தை நிலை நிறுத்தினால் எந்த தேகம் காமத்திற்கு காரணமாகி நம்மை அழிக்கின்றதோ அந்த காமதேகமே அசத்தை … Read more

குரு உபதேசம் 4411

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அசுரர்களை வதம் செய்து வென்று நல்லோரை அன்று காத்த முருகப்பெருமான் பக்தர்களின் வேண்டுகோளிற்கு இணங்கி, நல்லோர் படும் துன்பம் கண்டு இரங்கி, பண்புள்ளோரை துன்புறுத்தும் அசுரர்களை அடக்கி, இவ்வுலகினிலே மனிதர்கள் ஆட்சியை முடித்து ஞானிகள் தலைமையில் ஞானஆட்சியை ஏற்படுத்துவான் என்பதையும், முருகனது ஞானஆட்சியிலே கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசியும், கலப்படமில்லாத உணவுப்பொருளும், லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகமும், குற்றங்கள் குறைந்தும், குற்றம் செய்யவே அச்சப்படும்படியான நீதிநிர்வாகமும், கொலை கொள்ளையற்ற தூய சமுதாயம் உண்டாகி … Read more