Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 33

33. துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும் அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி   துரியமும் கடந்த சுக பூரணம் தரும் அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !   ஆனந்த நிலையான துரிய நிலையை கடந்த பேரானந்த நிலையான துரியாதீத நிலையில் கிடைக்கும் நிரந்தர பூரணப் பேரின்பத்தை ஞான வெளியான சிற்சபையில் திகழும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

தினம் ஒரு அகவல் 32

32. முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள் அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்தருள் அச்சுடராம் சபை அருட்பெருஞ்ஜோதி !   சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகிய முச்சுடர்களும் பொருந்துமாறு இயங்க உள்ள ஆதார சக்தியாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி. முச்சுடரின் இணைப்பே முக்திக்கு வழிவகுக்கும்.

தினம் ஒரு அகவல் 31

31. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி   சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி !   மனிதர்கள் வகுத்த அனைத்துச் சமயங்களின் எல்லைகளையும், பிரிவுகளையும் கடந்த நிலையில் இருக்கும், ஒப்பற்ற தனிப் பொருளான பரவெளியில் ஒளி வீசி நிற்கும் பேரொளியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திகழ்கிறார்.

தினம் ஒரு அகவல் 30

30. என்றா தியசுடர்க் கியனிலை யாயது வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி   என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது அன்றாம் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி !   என்றுமே ஆதியாக மூலமாக இருக்கும் பேரொளியாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஞானத் திருச்சபையில் வீற்றிருக்கிறார்.

தினம் ஒரு அகவல் 29

29. வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம் ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   வேத ஆகமங்களின் விளைவுகட்கு எல்லாம் ஆதாரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி !   வேதங்கள், ஆகமங்கள் போன்றவற்றில் உள்ள ஞான உபதேசங்களுக்கும், வழிகாட்டுதலுக்கும் ஆதாரமான ஞான வெளியில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 28

28. ஏக மனேக மெனப்பகர் வெளியெனும் ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   ஏகம் அனேகம் எனப் பகர் வெளி எனும் ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், இந்த உலகில் நிலைத்திருக்கும் ஒரே நித்திய உண்மைப் பொருளாகவும், இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின் ஆன்மாகவும் , சிற்சபை எனும் ஞான வெளியில் பேரொளியாக திகழ்கிறார்.

தினம் ஒரு அகவல் 27

27. காரண காரியங் காட்டிடு வெளியெனும் ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   காரண காரியம் காட்டிடு வெளி எனும் ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், இந்த உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பொருட்களின், உயிர்களின் காரணங்களையும் காரியங்களையும்  வெளிச்சம் போட்டுக் காட்டும் ஞான வெளியாக, வேதங்களால் போற்றப்படும் சிற்சபையில் ஒளி வீசித் திகழ்கிறார்.

தினம் ஒரு அகவல் 26

26. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும் ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி   சாகாக்கலை நிலை தழைத்திடும் வெளி எனும் ஆகாயத்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி !   எல்லையற்ற கருணை வடிவான பேரொளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே, மரணமில்லாப் பெருவாழ்வு (சாகாக்கலை) அருளும் வல்லமை படைத்தவராக இருக்கிறார்கள்.