Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 260

இப்படி கண்டனை யினியுறு படியெலாம் அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி – 260   இப்படி கண்டு எனை இனி உறுபடி எலாம் அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி !   இதுவரை  ஞான அனுபவத்தில் கண்ட அனைத்தும் மற்றும் இனி நீ அடையவிருக்கும் எல்லா உயர் நிலைகளும் நீ நினைத்தபடியே நிறைவேறும் என்று உறுதியளித்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 258

எட்டிரண் டென்பன வியலுமுற் படியென அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 258   எட்டு இரண்டு என்பன இயலும் முற்படி என அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !   சீவனாகிய (அகாரம் – 8) உயிரையும், சிவனாகிய (உகாரம் – 2) பரமாத்மாவையும் அறிந்து கொள்வதே ஞானத்தின் முதல்படி என்று நிலையான பொருளாய் இருந்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 256

இன்பசித் தியினிய லேக மனேகம் அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 256   இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம் அன்பருக்கு என்ற என் அருட்பெருஞ்ஜோதி !   பேரின்பத்தைத் தரக்கூடிய சித்தியின் (ஆற்றலின்) இயல்பான தன்மை, ஒரே சக்தியாக இருந்து பலவிதமான இன்ப அனுபவங்களாக விரிந்து வெளிப்படுவதாகும். அந்த இன்பம் அனைத்தும் ஜீவகாருண்யம் என்னும் அன்பு நெறியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியது என்று எனக்கு உணர்த்திய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 254

ஏகசிற் சித்தியே யியலுற வனேகம் ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 254   ஏக சித்சித்தியே இயலுற அனேகம் ஆகியது என்ற என் அருட்பெருஞ்ஜோதி !   ஞானத்தினால் ஏற்படும் சித்தியே வல்லமை கொண்ட ஒரே சித்தி என்றும், அந்த சித்தியே பல சித்திகள் விளைய காரணமாக உள்ளது என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 252

சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம் அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 252   சித்தி என்பது நிலை சேர்ந்த அநுபவம் அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி !   சித்தி என்பது இறைநிலையை அடைந்ததால் உண்டாகும் அனுபவமே என்றும், அதுவே உண்மையான வல்லமை என்றும் எனக்குத் தெளிவாக உணர்த்திய என்னுடைய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 250

முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம் அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 250   முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம் அத்தக என்ற என் அருட்பெருஞ்ஜோதி !   முத்தி என்பது நாம் அடைய வேண்டிய இறுதி இலக்கு அல்ல; அது, உலக நன்மைக்காக சித்திகளைச் செய்வதற்கான தகுதியைப் பெற, நாம் முன்னரே அடைய வேண்டிய ஒரு சாதனம் (நெறி) மட்டுமே என்று எனக்குத் தெளிவாக உணர்த்திய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 248

புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 248   புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை அடைவதென்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !   உயர்ந்த நிலையான (புடை உறு) சித்தி நிலை அடைவதற்குதான் அதற்கு முந்தைய நிலையான முக்தி அடைவது என்று எனக்கு உணர்த்தி அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 246

ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும் ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 246   ஞான சித்தியின் வகை நல் விரிவனைத்தும் ஆனியின்றி எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !   தூய அறிவின் மூலம் அடையக்கூடிய ஞான சித்திகளின் வகைகள், அவற்றின் நன்மை நிறைந்த விரிவான பலன்கள் அனைத்தையும், குறைவில்லாமல் (ஆனியின்றி) என்னிடத்து நிலைபெற்று நிற்கும்படி எனக்கு அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 244

யோகசித் திகள்வகை யுறுபல கோடியும் ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 244   யோக சித்திகள் வகை உறு பல கோடியும் ஆக என்று எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !   யோகப் பயிற்சியால் அடையக்கூடிய பல கோடிக்கணக்கான சித்திகளின் வகைகளையும் நுட்பங்களையும், “அவை அனைத்தும் உனக்கு கிடைப்பதாக” என்று எனக்கு அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!