தினம் ஒரு அகவல் 82
82. மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது ஆயினை என்று அருள் அருட்பெருஞ்ஜோதி ! மேயினை – பொருந்துதல் எனக்குள் பொருந்தி, உண்மைப் பரம்பொருளாய் வெளிப்பட்டு, “நீயே நானாகி விட்டாய்!” என்று எனக்கு உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


