admin
தினம் ஒரு அகவல் 25
சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும் அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி சச்சிதானந்தத் தனிப் பரவெளி எனும் அச்சியல் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி ! குற்றம் ஏதுமில்லா ஞானவெளியில் சத் (உண்மை), சித் (ஞானம்), ஆனந்தம் (பேரின்பம்) ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த இறைநிலையான சச்சிதானந்த நிலையில் எங்கும் வியாபித்துள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !
தினம் ஒரு அகவல் 24
தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும் அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி தத்துவ அதீத தனிப்பொருள் வெளியெனும் அத்திரு அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி ! முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்கும் ஒப்பற்ற மெய்ப் பொருளின் ஞான வெளியாகிய, அந்தத் திருவருள் பொருந்திய அம்பலத்திலும் (ஞான சபையிலும்) விளங்கும் அருள்மயமான பேரொளியே!
தினம் ஒரு அகவல் 23
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும் அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி தகர மெய் ஞானத் தனிப்பெரு வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி ! தகரம் : உள்ளம் அகரம் : மூலம் உள்ளத்தின் உள்ள மெய்ஞ்ஞானமயமான தனிப்பெரு வெளியாகிய, மேலும் அனைத்திற்கும் மூலமான அகரம் நிலைபெற்றிருக்கும் இருப்பிடமாகவும் திகழும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !
தினம் ஒரு அகவல் 22
சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும் அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி சுத்த சித்தாந்த சுகப்பெரு வெளியெனும் அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ! சித்தாந்தம் : சைவநெறியின் முடிவுநிலை. தூய சைவ சித்தாந்தத்தின் முடிவு நிலையான பேரின்பப் பெருவெளியாகவும், அந்தத் தனிச்சிறப்பு மிக்க ஞானசபையாகவும் திகழும் அருட்பெருஞ்ஜோதி !
தினம் ஒரு அகவல் 21
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும் அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி சுத்த வேதாந்தத் துரியமேல் வெளியெனும் அத்தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ! வேதாந்தம் : வேதங்களின் முடிவு ( வேதம் + அந்தம் ) துரியம் : வேதாந்தத்தின் முடிவு. துரியம் மேல் : துரியாதீதம். அத்தகு : அந்த தகுதியுடைய தூய வேதாந்தத்தின் உயர் நிலையான துரியத்தையும் கடந்து, துரியாதீதத்தில் விளங்கும் ஞான வெளியாகிய, அந்த மகத்தான தகுதியுடைய சிற்சபையாகவும் திகழும் … Read more
தினம் ஒரு அகவல் 20
பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும் அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி பெரிய நாதாந்தப் பெருநிலை வெளியெனும் அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி ! நாதாந்தம் : ஒலியின் முடிவு ( நாதம் + அந்தம் ) – ஓம் சிற்றம்பலம் : சிற்சபை, ஞானசபை. எல்லாவற்றிற்கும் ஆதாரமான ஒலியாகிய பரம்பொருளை (“ஓம்”) உணரும் நிலையே நாதாந்தமாகும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருமை பொருந்திய ஞானவெளியில், “ஓம்” என்ற ஞானசபையில் வீற்றிருக்கிறார்.
தினம் ஒரு அகவல் 19
19. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும் அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி விமல போதாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும் அமல சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி ! போதாந்தம் – அறிவின் எல்லை ( போதம் + அந்தம் ) விமலம் : மாசற்ற, குற்றமற்ற மாசற்றதும், அறிவின் இறுதி நிலையானதும் ஆகிய மெய்ப்பொருளைக் கொண்ட ஞான வெளியாகவும், களங்கமற்ற ஞானசபையாகவும் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !
தினம் ஒரு அகவல் 18
18. ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும் ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி ஞான யோகாந்த நடத் திரு வெளியெனும் ஆனி இல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ! யோகாந்தம் : யோகத்தின் முடிவு ( யோகம் + அந்தம் ) ஆனி இல் – குற்றமற்ற ஞான யோகத்தின் எல்லையாக இறைவன் திருநடனம் புரியும் தூய வெளியாகவும், எவ்விதக் குறையும் அற்ற ஞானசபையாகவும் விளங்கும் அருள்மயமான ஆண்டவரே !


