Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4567

அகத்தீசனை வணங்கிட: தெய்வத்தின் பெயரால் உயிர்களை கொலை செய்வது, பாவம் என்று அறியலாம்.

குரு உபதேசம் 4566

முருகப்பெருமானை வணங்கிட: கொடுக்கக் கூடிய மனமும் அதற்குரிய வாய்ப்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக்கூடிய அறிவையும் முருகப்பெருமான்தான் அருள்வான் என்பதையும் அறியலாம். பாடுபெறும் திருவடியை பணிந்தே பூசிக்க வீடுபேறு உண்டாம் விளம்பு.

குரு உபதேசம் 4565

அகத்தீசனை வணங்கிட: பூஜை செய்வதற்குரிய அறிவும் புண்ணியம் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் பெறலாம்.

குரு உபதேசம் 4564

அகத்தீசனை வணங்கிட: எந்த உடம்பு காமத்திற்கு காரணமாக இருக்கின்றதோ அந்த உடம்பே ஞானத்திற்கும் காரணமாக உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

குரு உபதேசம் 4563

முருகப்பெருமானை வணங்கிட: யோகத்துக்கும், ஞானத்திற்கும் தலைவன் முருகப்பெருமானே. முருகப்பெருமான் அன்றி, மனிதர்கள் வாசி நடத்தி கொடுப்பது என்பதெல்லாம் வெறும் பொய்யென்றும், ஏமாற்று வேலை என்றும், அவர்களை முருகப்பெருமான் தண்டிப்பார் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4562

அகத்தீசனை வணங்கிட: சைவஉணவை மேற்கொண்டும் ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்றவர்க்கும், அன்னதானம் செய்கின்ற மக்களுக்கும்தான் வாசி வசப்படுகின்ற வாய்ப்பை அகத்தீசன் தருவார் என்று அறியலாம்.

குரு உபதேசம் 4561

அகத்தீசனை வணங்கிட: உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடித்தவர்கள் தான் ஞானிகள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4560

முருகப்பெருமானை வணங்கிட: தயை குணம்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதை அறியலாம். சீலமாம் முருகனின் திருவடி போற்றிட காலத்தை வெல்ல கருத்தும் தோன்றுமே. சீலமாம் முருகனின் திருவடி போற்றிட தூல சூட்சுமம் கைவசமாமே.

குரு உபதேசம் 4559

அகத்தீசனை வணங்கிட: மும்மலத்தால் ஆன உடம்புதான் தொடர் பிறவிக்கு காரணம் என்பதை அறிந்து மும்மலத்தை நீக்கிக் கொள்ளலாம்.