admin
குரு உபதேசம் 4410
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானிகள் தலைமையில் உருவாகும் ஞானசித்தர்கள் காலத்தில், ஞானசித்தர்கள் ஆட்சியிலே பதவிக்கும், அரசியல் சார்ந்த அரசு அதிகாரிகளும், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களும் தேர்ந்தெடுக்கும் போது புலால் உண்ணாத மாண்புடையோராய்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முக்கிய பொறுப்புகளில் உள்ளோர் மது அருந்தாதவராயும், புலால் உண்ணாதவராயும், பொருள் பற்று அற்றவர்களாயும் உள்ளவர்களே ஆட்சி பொறுப்பிற்கு ஞானிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மற்றவர்க்கு அந்த வாய்ப்புகள் ஒருபோதும் தரப்படமாட்டாது என்பதையும் அறியலாம். …………….. அகிலத்தலைவன் ஆறுமுகன் ஆட்சியால் மகிழ்வார் மக்கள் … Read more
குரு உபதேசம் 4409
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இதுகாலம் வரையில் மனிதர்கள் ஆட்சி நடைபெற்றது. இனிவரும் காலம் ஞானசித்தர்கள் காலமதனாலே ஞானசித்தர் ஆட்சியிலே ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் அன்பு செலுத்தி ஞானபண்டிதன் ஆசியை பெறுகின்ற வாய்ப்பையும், ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்ற வாய்ப்பையும் பெறலாம் என்பதை அறியலாம். …………….. காலத்தை வென்ற கந்த கடவுளே ஞாலத்தை ஆள்வான் நாம் செய்த புண்ணியமே!
குரு உபதேசம் 4408
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தூயநெறி வந்திட்ட மாபெரும் புண்ணியவான்களான ஞானியர் ஆசியில்லாமல் முருகப்பெருமானை அறியவோ, ஆசிபெறவோ முடியாது என்பதை தெரிந்து கொள்ளலாம். …………….. கடைத்தேற்றவல்ல கந்தனை போற்றிட இடைபின்கலை இரண்டும் எளிதில் சித்தியே.
குரு உபதேசம் 4407
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானவழிதனிலே வருகின்றவர்க்கு கொடுக்கப்பட்ட அறிவு, கல்வி பெற்றதேகம், செல்வம், வாய்ப்புகள், தக்க துணைகள் என அனைத்தும் உலக நன்மைக்கு பயன்படுத்த கொடுக்கப்பட்டதே தவிர தனிமனித விருப்புவெறுப்புகளுக்கு பயன்படுத்த அல்ல என்பதை புரிந்து கொள்வதோடு, பிறவியின் நோக்கம், உலகநலன் காப்பதும், தர்மத்தை காப்பதும், இனி பிறவா நிலை அடைவதும் என்பதை அறிந்து கொள்வதோடு பந்தபாசத்தினை, இல்லறத்தினை ஒரு எல்லையில் வைத்து பழகும் சிறப்பறிவையும் பெறுவான். உலகியல் தொடர்புகளை தனது தவ … Read more
குரு உபதேசம் 4406
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராய் விளங்கி, ஞானத்தலைவனாய் விளங்கி நின்று அருள்பாலித்து வாசி நடத்திக் கொடுக்கப்பட்ட முதன்மை சீடராம், சித்தர்கோன் என்றும் குருமுனி என்றும் சொல்லப்படுகின்ற அகத்தியர் பெருமான் முதல் நந்தீசர், திருமூலர், காலாங்கிநாதர், போகர், பட்டினத்தார், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், கருவூர்தேவர், இராமலிங்கசுவாமிகள் என நவகோடி சித்தரிஷி கணங்களைக் கொண்டதும், வாழையடி வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபினர் தம்மையும், முருகப்பெருமானையும் வணங்கினால், முற்றுப்பெற்ற ஞானிகள் கருணைக்கு ஆளாகி ஞானத்தலைவன் முருகப்பெருமானால் … Read more
குரு உபதேசம் 4405
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது திருவடி பற்றி ஆசிபெற்று ஆட்சி பொறுப்பிலே அமர்ந்து ஆட்சி செய்வோர் முருகனது பிரதிநிதிகளாக செயல்படுவதினாலே அந்த ஆட்சியிலே மக்கள் அரசிற்கு கட்டும் வரிப்பணமெல்லாம் சிவன் கொடுத்த பொருளாய் எண்ணி, சிவன் சொத்தாக போற்றப்படும். பொது சொத்தை அபகரித்தல் என்பது சிவன் சொத்தை அபகரிப்பதாக எண்ணப்பட்டு கடும் தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து பொது சொத்தை சிவன் சொத்தாகவும், மக்கள் வரிப்பணத்தை சிவன் சொத்தாகவும் போற்றி பாதுகாப்பார்கள். முருகனது … Read more
குரு உபதேசம் 4404
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உடம்பே ஞானத்தை அடைய கருவியாகவும் காரண கருவியாகவும், காரிய கருவியாகவும் உள்ளதை அறியலாம். எந்த உடம்பு பல ஜென்மங்களாக தொடர்ந்து செய்திட்ட பாவங்களினால் ஞானம் அடைவது தடைபட்டதோ அந்த உடம்பின் துணை கொண்டே புண்ணியங்களை செய்ய செய்ய, தருமங்களை செய்யவும், சிந்தித்தும் அவரவர் கையால் கொடுத்தும் பழக பழக தீமைசெய்து பழகிய தேகம், நன்மை செய்ய பழகியதால் பாவம் ஒழிந்து புண்ணியம் பெருகும். புண்ணியம் பெருக பெருக மெய் … Read more
குரு உபதேசம் 4403
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நல்வினை தீவினையில் நம்பிக்கையும், அன்னதானத்தில் நம்பிக்கையும் சைவத்தில் நம்பிக்கையும் வைத்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற அறிவைப் பெறலாம். …………….. பாடுபெறும் முருகபிரான் பதத்தை போற்றிட வீடுபேறு உண்டாம் விரைந்தே.