Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4475

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்தால்…. ஆன்மீகம், அரசியல், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம், இசை, ஓவியம் என கலைகள் அனைத்திற்கும் முருகனே தலைவன் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4474

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. புண்ணிய செயல்களை செய்து புண்ணியத்தை பெறுவதற்கும், பூஜைகள் செய்து பூஜாபலத்தை பெறுவதற்கும் புண்ணியபலத்தால், பூஜைபலத்தால் ஞானிகள் ஆசியைப் பெற்று இனிபிறவா நிலையை அடையும் மார்க்கத்தை அறியவும் முருகப்பெருமான் அருள் இருந்தால்தான் முடியும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4473

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…. பாதிக்கப்பட்டோரெல்லாம், தடுமாறுகின்றோரெல்லாம் முருகன் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால் எல்லாம்வல்ல பரப்பிரம்ம நாயகன், சர்வ வல்லமை பெற்ற முருகப்பெருமானால் பக்தர் தம் வேண்டுகோள் ஏற்கப்பட்டு தக்க பாதுகாப்பையும், தக்க நீதியையும் அந்த ஆதிமூல ஞானத்தலைவன் முன்னின்று வழங்குவதாடு மக்களை கதறச் செய்தவர்களுக்கு தக்க பதிலும் தருவான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4472

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. புண்ணியம் செய்வதற்கும், பக்தி செலுத்துவதற்கும் முருகனே துணையாய் இருந்து வழிநடத்தி நம்மை காப்பாற்றுவான்.

குரு உபதேசம் 4471

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மக்கள் ஆட்சி முடிந்து ஞானிகள் தலைமையில் கடவுள் ஆட்சி இவ்வுலகினில் இனி ஏற்பட போவதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு முருகனை வணங்குகிறார்களோ அவ்வளவு விரைவில் கடவுளாட்சி இவ்வுலகினில் அமையும் என்பதையும் அறியலாம். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொண்டு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து எல்லாம்வல்ல ஞானபண்டிதன் திருநாமங்களை “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் … Read more

குரு உபதேசம் 4470

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முருகனை வணங்க வணங்க, எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரிகின்ற ஜீவதயவை வரமாய் பெறுவார்கள். ஜீவதயவு பெருக பெருக, மும்மலக்கசடால் ஆன இந்த தேகமே பேரின்பத்திற்கு காரணமாக அமைகிறதையும் அறியச்செய்து அறியாமையையும், பலகீனங்களையும் உண்டாக்குகின்ற மும்மலதேகத்தின் தன்மையை உணரச்செய்கிறான். தேகம் மரணமிலாப் பெருவாழ்வை பெறத் தடையாக இருப்பது மும்மலமே என்றும், நமது தேகமே மும்மலக் குற்றத்தால் அறியாமை உண்டுபண்ணுகிறது என்பதையும் அறியச்செய்து மும்மலக் கசடை நீக்கி தூய தேகம் வெளிப்பட … Read more

குரு உபதேசம் 4469

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…. மும்மலத்தாலான உடம்பையும், அதனுள் உள்ள மலக்குற்றங்களையும் அறியச்செய்தும் அந்த உடம்பினுள்ளே உள்ள அற்புத சக்தியை தட்டி எழுப்பியும், அச்சக்தி வெளிப்பட உற்ற துணையாய் இருந்து அழியக்கூடிய இந்த மனிததேகத்தை, காமதேகத்தை அழியாத பொன்னுடம்பாய், ஒளி உடம்பாய் ஆக்கி என்றும் அழிவிலாத தேகமாக மாற்றி யுகயுகத்தும் அழியாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4468

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகளெல்லாம் நம்முள் அகன்று அனைவரும் ஒரே இனமாக கருதப்படுகின்ற மனோநிலையும், சூழ்நிலையும் உண்டாகி அனைத்தும் ஒரே இனமாக கருதப்படும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4467

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…. நோய், வறுமை, பகை, மனஉளைச்சல் ஆகியவை தீருவதற்கு அன்னதானம் தான் மருந்து என அறிந்திட்டாலும் அன்னதானம் செய்து அவரவர் வினைகளை போக்கிட தக்க சூழ்நிலையும், வழிவகைகளும் முருகப்பெருமான் அருள் இருந்தால்தான், முருகன் அருள் செய்தால்தான், முருகன் விரும்பினால்தான் பெற முடியும் என்பதையும் அறியலாம். முருகனது அருளாசியே தர்மமாய், வினை நீக்கமாய் மாறும் என்பதையும் அறியலாம்.