Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4458

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால் இயற்கை சீற்றங்களிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். முருகனை, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவஉணவை உண்டு காலை மாலை இரவு என பத்து நிமிடமேனும் மனமுருகி பூஜிப்பதோடு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வருவதோடு முருகனை எப்போதும் நாமஜெபமாகிய பூஜைகளை ஏராளமானோர் செய்திட்டால் இயற்கை சீற்றங்களே வராமல் முருகன் அருள் செய்வான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4457

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி தினமும் மறவாமல் பூஜித்து தினம் தினம்தவறாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ முருகப்பெருமான் திருவடிகளை மனமுருகி பூஜித்திடல் வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு … Read more

குரு உபதேசம் 4456

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…. ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்து, காப்பாற்றிக் கொண்டிருப்பவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம். முருகப்பெருமானின் ஆசிபெற விரும்பினால் அவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு எவன் தொண்டு செய்கின்றானோ அவனுக்கு ஞானவாழ்வை தந்து, மரணமிலாப் பெருவாழ்வையும் தருவான் முருகப்பெருமான் என்பதையும் அறியலா

குரு உபதேசம் 4455

முருகப்பெருமான் திருவடிகளைப்  பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முருகப்பெருமானால் படைக்கப்பட்ட ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள எந்த ஜீவராசிகளுக்கும் செய்கின்ற உதவிகள் அனைத்தும் நேரிடையாக முருகப்பெருமானின் திருவடிகளையே சென்றடையும் என்பதை அறியலாம். இனிவரும் ஞானசித்தர் காலங்களிலே ஜீவர்களுக்கு செய்கின்ற ஆராதனைகளே இறைவனுக்கு செய்யும் ஆராதனைகளாக பெருமளவில் செய்யப்படும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4454

முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. சைவத்தலைவன் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால், பூஜிப்போர்க்கு சைவ உணவின் மீது நாட்டம் வருவது இயல்பேயாகும். இதுநாள் வரை அசைவ உணவு பழக்கத்திற்கு ஆளாகியிருந்தாலும் இன்றேனும் முருகனை வணங்கினால் முருகனது கருணையால் அசைவ பழக்கத்திலிருந்து விடுபட்டு பாவியாகாத உணவான சைவ உணவினை உண்டு நாமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4453

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. ஆறறிவு உள்ள மனிதன் வாயில்லா ஜீவன்களுக்கு இடையூறு செய்வதும், அதை கொலை செய்வதும் பாவம் என்றும், அந்த உயிர் படும் துன்பத்தை கண்டு ரசித்தால் அது நம்மை நரகத்தில் தள்ளி கொடும் துன்பத்தை தரும் என்பதை அறியலாம். ஆறறிவு உள்ள மனிதன் மற்றொருவனை துன்புறுத்தினால் துன்பப்பட்டவன் பலசாலியாக இருந்தால் துன்புறுத்தியவனை கடுமையாக தாக்குவான். பிறரை துன்புறுத்தினால் துன்பப்படுபவன் நலிவுற்றவனாய் இருந்தால் அவன், தான் படும் துன்பத்தை “ஐயோ அம்மா வலிக்கிறதே … Read more

குரு உபதேசம் 4452

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முதுபெரும் ஞானத்தலைவன் முருகனை உளமார அனைவரும் வணங்க வணங்க இவ்வுலகமும் நாடும், முருகனது கருணைக்கு ஆளாகி, இவ்வுலகினில் மனிதர்கள் ஆட்சி முடிந்து ஞானிகள் ஆட்சி அமையும் என்பதை அறியலாம். முருகப்பெருமான் தலைமையேற்று நடக்கவிருக்கும் ஞானசித்தர்கள் ஆட்சியிலே அளவான வரிவிதிப்பும், மக்களின் தகுதிக்கேற்ப வரிவிதிப்பும், சூழ்நிலைக்கேற்ப வரிவிதிப்பும் கடைப்பிடிக்கப்பட்டு மனிதாபிமானத்திற்கே முதலிடம் என்பதையும், லஞ்சலாவண்யங்கள் கடுமையாக ஒடுக்கப்படும் என்பதையும், கலப்படம் செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

குரு உபதேசம் 4451

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சுத்தமும், அசுத்தமும் கலந்துள்ள தேகத்தை ஒரு மெல்லிய நுட்பமான வேதியியல் செய்து அசுத்தத்தை நீத்து சுத்த தேகமாகிய ஒளி தேகத்தை உறுதிபடுத்திக் கொண்டவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். இந்த ரகசியத்தை முதன் முதலில் கண்டவன் முருகப்பெருமான்தான். இந்த வாய்ப்பை நாமும் பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு, தினம்தினம் மறவாமல் காலை மாலை என மூன்று வேளைகளும் குறைந்தது பத்து நிமிடமேனும், … Read more

குரு உபதேசம் 4450

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இக்காலத்தில் சாட்சிகள் இல்லாமல் குற்றம் செய்தவர்களும் பணபலம், ஆள்பலம், புகழ், அதிகாரம், பதவி, சிபாரிசு போன்றவைகளின் உதவியினால் நீதியின் பிடிக்கு அகப்படாமல் மனித அளவில் உள்ள சட்டங்களிலிருந்து வேண்டுமானால் தப்பித்து விடலாம். ஆனால் இறைவனின் தீர்ப்பிற்கு முன் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்பதையும், வருங்காலம் ஞானசித்தர் காலமதனாலே ஞானசித்தர் யுகத்தின், ஞானசித்தர் ஆட்சியின் தலைவன் முருகப்பெருமான் என்பதினாலே அவனது ஆட்சியிலே இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, உலகின் பலகோடி இடங்களில் நடப்பவைகளை … Read more