Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4449

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மனிதன் எழுத்தாளன், ஓவியன், கவிஞன், விஞ்ஞானி, கல்வியாளன், பேச்சாளன் என மிகச்சிறந்த வகையிலே திறமைகள் பெற்றிருந்தாலும் அவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திலே இறந்துதான் போவார்கள். என்றும் அழியாத முருகனது திருவடிகளைப் பற்றினால்தான் எதனாலும் பாதிப்படையாமல் மனிதன் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4448

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பண்புள்ள அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துணிந்து செயல்பட்டு வெற்றி காணும் காலம் வெகுவிரைவில் ஞானிகள் ஆட்சியிலே வரும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4447

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மற்றவர்க்கு இடையூறு செய்யாமலும், பிறர் செய்யும் இடையூறுகளை பொறுத்துக் கொள்ளும் மனநிலையையும் பெறுவார்கள். அதனால் அவனும் அவனைச் சார்ந்தோரும், மகிழ்வுடன் முருகனருளால் வாழ்வார்கள் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4446

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிறந்த யாவரும் ஒருநாள் இறந்தே போக வேண்டும். இது இயற்கையின் நியதியாகும். அத்தகைய இயற்கையின் நியதியினை வென்று என்றும் அழிவிலாத மரணமிலாப் பெருவாழ்வை பெறவேண்டுமானால் எல்லாம்வல்ல ஞானபண்டிதன் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூசித்து முருகனது ஆசியைப் பெற்று விட்டால், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள் முருகப்பெருமானின் ஆசியினாலே மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4445

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பெறுதற்கரிய மானுடப்பிறவியை பெற்ற போதும், நரகமும் சொர்க்கமுமாய் உள்ள காமதேகத்தினில் உள்ள மும்மலக்கசடை முருகனை வணங்க வணங்க வணங்க, முருகனது கருணை கூடி, நீக்க முடியாத தேகக்கசடையும் முருகனருளால் நீக்கிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4444

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தாயினும் மேலான கருணையுடைய தனிப்பெரும் கருணைத் தெய்வம் முருகப்பெருமானே வெகுண்டு எழுந்ததினால் இவ்வுலகினை காத்து நின்ற முருகனது கருணைக்கரம் விலகிவிடுகின்ற படியினாலே மக்கள் இதுவரை செய்த பாவபுண்ணியம் இயற்கை சீற்றங்களாக மாறி, தீயன செய்தோரை கடுமையாக தாக்கத்தான் போகிறது. ஆயினும் மனம் திருந்தி இனியேனும் முருகனது திருவடி பற்றி மனமுருகி வேண்டி அவரவரும் தாம் தாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரி முருகனை அழுது தொழுது வணங்கி மன்றாடி தாம் செய்த … Read more

குரு உபதேசம் 4443

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிற உயிர்களுக்கு கருணை காட்டுதல், விட்டுக் கொடுத்தல், அனுசரித்து போதல், மன்னித்தல், மறத்தல் போன்ற பண்புகள் பெருக பெருக இயற்கை சீற்றம் வராது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4442

முருகப்பெருமான் திருவடிபற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. வறுமையற்ற வாழ்வும், கவலையற்ற வாழ்வும், விஷஜந்துகளால், விபத்தினால், இயற்கை சீற்றங்களினால், முன்ஜென்ம பாவங்களினால், மரண கண்டங்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏதும் அணுகாத அமைதியான வாழ்வை வாழலாம். மனஅமைதியுடன் கூடிய ஆரோக்கியமும் நீடிய ஆயுளைப் பெறலாம். மனக்குழப்பத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் மருந்து முருகனின் நாமங்களே என்பதையும் அறியலாம். மன அழுத்தமும், மனக்குழப்பமும், முன்ஜென்ம பாவங்களினால்தான் வருகின்றதனால் பயிற்சிகளை செய்வதின் மூலம் ஒருபோதும் மனக்குழப்பத்திலிருந்து விடுபட முடியாது, மனஅழுத்தமும் தீராது. ஜென்மஜென்மமாய் செய்த பாவத்தை பொடிப்பொடியாக்கும் … Read more

குரு உபதேசம் 4441

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முதுபெரும் ஞானிகள் அருளிய, சிவபுராணம், திருமந்திரம், திருஅருட்பா போன்ற ஞான நூல்களை படித்து பூஜிக்கின்ற ஆர்வம் உண்டாகி பக்தி நூல்களைப் படித்து, மனமுருகி பூஜித்து முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றுகின்ற வைராக்கியம் வரும். முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றி பூஜிக்க பூஜிக்க குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள், சூதாடமாட்டார்கள், பிறர் மதிக்க ஆடம்பரமாக நடந்து கொள்ள மாட்டார்கள், வருவாய்க்கு உட்பட்டு செலவு செய்து சிக்கன வாழ்வை மேற்கொள்வார்கள், கடன் வாங்க மாட்டார்கள், எல்லாம்வல்ல இறைவன் … Read more