Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4378

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உலகிலுள்ளோர்க்கு வருகின்ற இடையூறுகளை அறியவும், அதை தீர்க்கவும் முடிகின்ற வாய்ப்பையும் முருகனருளால் பெறலாம். …………….. பாசமாம் பசுவும் பதியில் ஒன்றிடில் ஆசற்ற வாழ்வும் அருளும் முக்தியே. அகிலம் போற்றும் ஆறுமுகப்பெருமானே மகிழ ஆட்சி செய்வான் மண்ணுலகம் செழிக்க.

குரு உபதேசம் 4377

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் அற்புதமான ஒரு சொர்க்கமயமான ஆட்சியாக மாறுகின்ற ஞானசித்தர்கள் ஆட்சியிலே, பருவமழை தவறாது பெய்து உலகெங்கும் செழிக்கின்ற ஆட்சியிலே, சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம், சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்றும் எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக எண்ணும் பொதுநிலை ஆட்சியிலே எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழும் அற்புத வாழ்வினை வாழ்கின்றதானதும் இதுவரை இந்த பூவுலகமே காணாத ஒரு அதிசய அற்புத ஞான ஆட்சியிலே … Read more

குரு உபதேசம் 4376

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. காமதேகத்தினில் உள்ள அந்த அற்புத சக்தியை முருகனருளால் தட்டி எழுப்பி செயல்படுத்த துவங்கினால் மும்மலக் கசடுடைய காமதேகத்தை அச்சக்தி வென்று இந்த மானுட தேகத்தையும் அற்புத தேகமாக மாற்றி ஒளி உடம்பாக்கிவிடும் என்பதையும் அறியலாம். முருகனது அருள் கூடினால் ஞானம் பெறலாம். முருகனது அருளைப் பெற வேண்டுமாயின் இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு செலுத்திட வேண்டும். அன்பு செலுத்த செலுத்த, செலுத்துவோர்க்கு ஜீவதயவை பெருக்கும், ஜீவதயவு பெருக … Read more

குரு உபதேசம் 4375

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இவ்வுலகினிலே மனிதர்களை மனிதர்கள் ஆட்சி செய்து செய்து, ஏராளமான வகையிலே ஒருவரை ஒருவர் அதிகாரத்தாலும், பணபலத்தாலும், ஆள்படையின் துணையினாலும் அளவு கடந்த வகையிலே துன்பப்படுத்தி விட்ட காரணத்தாலே பண்புடையோரும், பக்தர்களும், பத்தினி பெண்டிரும், பஞ்சபராரிகளும் துன்பம் தாளாது மனதினுள் இறைவனை அழுது தொழுததினாலே, எல்லாம்வல்ல இறைவன் முருகப்பெருமான் மனமிரங்கி இவ்வுலகினில் வெகுவிரைவில் ஞானஆட்சியை ஞானிகள் தலைமையிலே அமைக்க இருக்கிறார் என்பதை அறியலாம். ஞானஆட்சியிலே ஜீவதயவே அடிப்படையாக இருக்கும் என்பதையும், … Read more

குரு உபதேசம் 4374

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானின் திருவடிகளை உலக மக்கள் எந்த அளவிற்கு வணங்குகிறார்களோ, முருகப்பெருமான் தலைமையை எந்த அளவிற்கு மக்கள் விரைவில் ஏற்கிறார்களோ, முருகப்பெருமானை ஞான ஆட்சி அமைக்க எந்த அளவிற்கு மக்கள் மனம் உருகி அழைக்கின்றார்களோ, அந்த அளவிற்கு  முருகப்பெருமான் விரைந்து வெளிப்பட்டு இவ்வுலகினில் ஞானியர் கூட்டம் புடைசூழ தேவாதி தேவரெல்லாம் ஒன்றுகூடிய  ஞான ஆட்சியை இவ்வுலகினில் அமைப்பான் என்பதை உணரலாம். உலக மக்களே! அழையுங்கள் ஆறுமுகனை ஆட்சி அமைக்க. உலக … Read more

குரு உபதேசம் 4373

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது தலைமையில் முருகனது தொண்டர்களால் இந்நாடு ஆட்சி செய்யப்பட்டால், நாடெங்கும் புண்ணியமும் அருள்பலமும் பெருகி எல்லோரிடத்தும் ஜீவதயவு உண்டாகி நாடெங்கும் பருவமழை தவறாது பெய்து எங்கு பார்த்தாலும் நல்ல விளைச்சலும், பசுமையும் மிகுந்து காணப்பட்டு அந்த நாட்டிலுள்ள மனிதர்கள் சொர்க்க வாழ்வை வாழ்வதோடு அந்நாட்டிலுள்ள அனைத்து உயிர்களாகிய எல்லா ஜீவராசிகளும் மகிழ்வுடன் வாழ்கின்ற ஒரு சொர்க்கமயமான வாழ்வை வாழ்கின்ற அமைப்பை பெறலாம் என்பதை அறிவார்கள். முருகப்பெருமானின் ஆசியை பெறபெற … Read more

குரு உபதேசம் 4372

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. கற்புடைய பெண்களை கற்பழிப்போர், கலப்படம் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், அதிகாரத்தின் துணையோடு பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்கிறவர்களும் பொது சொத்தை அபகரித்து வாழ்பவரும் அசுரர்களாக கருதப்பட்டு முருகப்பெருமானால் தண்டிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவார்கள்.

குரு உபதேசம் 4371

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. தற்காலத்தில் தவறு செய்வோர் தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர் ஞானிகளால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம். மணிவாசகப் பெருமானின் மலரடி போற்றிட அணிமா சித்தியும் அடைவார் திண்ணமே. மகத்துவம் மிக்கதோர் மணிவாசகப் பெருமானை அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம்.

குரு உபதேசம் 4370

முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தொல்லுலகில் நல்லோர்கள் படுகின்ற துன்பத்தை காணச் சகியாமல் ஞானபண்டிதனே நேரில் தோன்றி நல்லோரை காப்பான் என்பதும் உண்மையே, கலியுகம் முடித்து ஞானயுகமதனை அமைப்பான் என்பதும் உண்மையே.