Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4369

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பொது சொத்தை அபகரிக்காமல் தப்பிக்கலாம், பொதுசேவை மனப்பான்மையுடையவராய் ஆகலாம், தேச விரோதமான செயல்களை செய்யாமல் தப்பிக்கலாம், தமக்கு கொடுக்கப்பட்ட பதவி அதிகாரங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு நன்மைகள் செய்யும் எண்ணம் வரும். அதன் மூலம் அவரவரும் தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.  

குரு உபதேசம் 4368

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு மனிதனுக்கு விடாத பிறவிகளை உண்டுபண்ணுவது அவனது காமதேகமே காரணம் என்பதை அறியலாம். …………….. காமனைக் கடிந்த கந்தனின் நாமத்தைச் சொல்லிட நமனும் அஞ்சுவன்.

குரு உபதேசம் 4367

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பஞ்சமகா சக்திகளும் முருகனின் ஆணைக்கு உட்பட்டு நடப்பதினாலே, நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4366

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், நவகோடி சித்தரிஷி கணங்களுக்கும், தலைவனான முருகப்பெருமான் நேரில் தோன்றி ஞானசித்தர் காலத்தை வழி நடத்துவான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4365

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானசித்தர்கள் காலமாகிய வருங்காலங்களிலே பண்புடையோர்களால்தான் ஆட்சி செய்யப்படும் என்பதையும், அத்தகைய பண்புடையோரை முருகப்பெருமானால் அரூபநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அற்புதமாய் ஆட்சி பொறுப்பிலே அமர்த்தப்படுவார்கள் என்பதையும் அறியலாம். ஆட்சி பொறுப்பை பண்புள்ளவர்கள் தகுதிகளை பெற, அவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவத்தை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டுமென்றும், பொது சொத்து அனைத்தும் மக்களது வரிப்பணத்தினால் ஆக்கப்பட்டது என்பதனால் அது இறை சொத்து, அதாவது சிவன் சொத்தாகும் என்பதை அறிந்தவராயும், பொது … Read more

குரு உபதேசம் 4364

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனி பிறவா மார்க்கமாகிய மரணமிலாப் பெருவாழ்வின் ரகசியத்தை அறியலாம். தொடர்பிறவிக்கு காரணமாய் இருப்பது உடம்பா? உயிரா? என ஆராய்ந்து பார்க்கும் போது உடல் மாசு காரணமாகத்தான் உயிர் மாசுபடுகிறது. உடல் மாசு நீங்கினால் உயிர் மாசு நீங்கும். உடல்மாசும் உயிர்மாசும் நீங்கி இனி பிறவாமையை அடைய விரும்புகிறவர்கள் ஞானபண்டிதன் முருகப்பெருமானின் ஆசியைப் பெறவேண்டும். முருகனது ஆசியைப் பெற விரும்பினால் தினமும் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், … Read more