Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4414

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாது சைவ உணவை மேற்கொண்டு முருகனை பூஜிக்க பூஜிக்க பூஜிப்போர் எந்த வகையிலும் எந்தவிதமான துன்பமும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ்வார்கள் என்பதை அறியலாம். …………….. அண்ணல் முருகனின் அருளினைப் போற்றவே இன்னலும் இல்லை இருவினையும் இல்லை. காலத்தை வென்ற கந்த கடவுளை ஞாலத்தை ஆள்வான் நன்மக்கள் வாழவே.

குரு உபதேசம் 4413

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கடவுளுக்கும் கடவுளான கந்தக்கடவுளான முருகப்பெருமானை போற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் நாமும் கடவுளாகலாம் என்பதை அறியலாம். …………….. கடவுளுக்கும் கடவுளான கந்தக்கடவுளை திடம்பட பூஜிக்க சித்தியும் உண்டாம்.

குரு உபதேசம் 4412

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான், தாய்தந்தையால் எடுத்த இந்த காமதேகத்தில் சத்தும் அசத்தும் நரகமும் சொர்க்கமும் கலந்துள்ளதை பலகோடி யுகங்களாய் பாடுபட்டு தவமாய் தவமிருந்து உலக உயிர்கள்பால் அளவிலாத தயவு காட்டி தயவே வடிவானவனாக மாறி மகா தவசியாக விளங்கி ஆராய்ந்து ஆராய்ந்து கண்டு கொண்டான். காமதேகத்தினுள் உள்ள அசத்தை நீக்கி சத்தை நிலை நிறுத்தினால் எந்த தேகம் காமத்திற்கு காரணமாகி நம்மை அழிக்கின்றதோ அந்த காமதேகமே அசத்தை … Read more

குரு உபதேசம் 4411

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அசுரர்களை வதம் செய்து வென்று நல்லோரை அன்று காத்த முருகப்பெருமான் பக்தர்களின் வேண்டுகோளிற்கு இணங்கி, நல்லோர் படும் துன்பம் கண்டு இரங்கி, பண்புள்ளோரை துன்புறுத்தும் அசுரர்களை அடக்கி, இவ்வுலகினிலே மனிதர்கள் ஆட்சியை முடித்து ஞானிகள் தலைமையில் ஞானஆட்சியை ஏற்படுத்துவான் என்பதையும், முருகனது ஞானஆட்சியிலே கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசியும், கலப்படமில்லாத உணவுப்பொருளும், லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகமும், குற்றங்கள் குறைந்தும், குற்றம் செய்யவே அச்சப்படும்படியான நீதிநிர்வாகமும், கொலை கொள்ளையற்ற தூய சமுதாயம் உண்டாகி … Read more

குரு உபதேசம் 4410

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானிகள் தலைமையில் உருவாகும் ஞானசித்தர்கள் காலத்தில், ஞானசித்தர்கள் ஆட்சியிலே பதவிக்கும், அரசியல் சார்ந்த அரசு அதிகாரிகளும், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களும் தேர்ந்தெடுக்கும் போது புலால் உண்ணாத மாண்புடையோராய்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முக்கிய பொறுப்புகளில் உள்ளோர் மது அருந்தாதவராயும், புலால் உண்ணாதவராயும், பொருள் பற்று அற்றவர்களாயும் உள்ளவர்களே ஆட்சி பொறுப்பிற்கு ஞானிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மற்றவர்க்கு அந்த வாய்ப்புகள் ஒருபோதும் தரப்படமாட்டாது என்பதையும் அறியலாம். …………….. அகிலத்தலைவன் ஆறுமுகன் ஆட்சியால் மகிழ்வார் மக்கள் … Read more

குரு உபதேசம் 4409

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இதுகாலம் வரையில் மனிதர்கள் ஆட்சி நடைபெற்றது. இனிவரும் காலம் ஞானசித்தர்கள் காலமதனாலே ஞானசித்தர் ஆட்சியிலே ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் அன்பு செலுத்தி ஞானபண்டிதன் ஆசியை பெறுகின்ற வாய்ப்பையும், ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்ற வாய்ப்பையும் பெறலாம் என்பதை அறியலாம். …………….. காலத்தை வென்ற கந்த கடவுளே ஞாலத்தை ஆள்வான் நாம் செய்த புண்ணியமே!

குரு உபதேசம் 4408

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தூயநெறி வந்திட்ட மாபெரும் புண்ணியவான்களான ஞானியர் ஆசியில்லாமல் முருகப்பெருமானை அறியவோ, ஆசிபெறவோ முடியாது என்பதை தெரிந்து கொள்ளலாம். …………….. கடைத்தேற்றவல்ல கந்தனை போற்றிட இடைபின்கலை இரண்டும் எளிதில் சித்தியே.

குரு உபதேசம் 4407

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானவழிதனிலே வருகின்றவர்க்கு கொடுக்கப்பட்ட அறிவு, கல்வி பெற்றதேகம், செல்வம், வாய்ப்புகள், தக்க துணைகள் என அனைத்தும் உலக நன்மைக்கு பயன்படுத்த கொடுக்கப்பட்டதே தவிர தனிமனித விருப்புவெறுப்புகளுக்கு பயன்படுத்த அல்ல என்பதை புரிந்து கொள்வதோடு, பிறவியின் நோக்கம், உலகநலன் காப்பதும், தர்மத்தை காப்பதும், இனி பிறவா நிலை அடைவதும் என்பதை அறிந்து கொள்வதோடு பந்தபாசத்தினை, இல்லறத்தினை ஒரு எல்லையில் வைத்து பழகும் சிறப்பறிவையும் பெறுவான். உலகியல் தொடர்புகளை தனது தவ … Read more

குரு உபதேசம் 4406

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராய் விளங்கி, ஞானத்தலைவனாய் விளங்கி நின்று அருள்பாலித்து வாசி நடத்திக் கொடுக்கப்பட்ட முதன்மை சீடராம், சித்தர்கோன் என்றும் குருமுனி என்றும் சொல்லப்படுகின்ற அகத்தியர் பெருமான் முதல் நந்தீசர், திருமூலர், காலாங்கிநாதர், போகர், பட்டினத்தார், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், கருவூர்தேவர், இராமலிங்கசுவாமிகள் என நவகோடி சித்தரிஷி கணங்களைக் கொண்டதும், வாழையடி வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபினர் தம்மையும், முருகப்பெருமானையும் வணங்கினால், முற்றுப்பெற்ற ஞானிகள் கருணைக்கு ஆளாகி ஞானத்தலைவன் முருகப்பெருமானால் … Read more