Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4225

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மரணமிலாப் பெருவாழ்வை கண்டுபிடித்து முதன்முதலில் மரணமிலாப் பெருவாழ்வை அடைந்தவன் முருகப்பெருமான் தான் என்றும், அவனது அளவிடற்கரிய கருணையால்தான் மரணமிலாப் பெருவாழ்வை ஒன்பது கோடி ஞானிகளும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை அடைய முடிந்தது என்றும், முருகனது கருணையே மரணமிலாப் பெருவாழ்வை அடைவதற்கு காரணமாய் உள்ளதென்பதையும் முருகன் இல்லையேல் யோகமும் இல்லை, ஞானமும் இல்லை என்பதையும், முருகன் அருளை முழுமையாகப் பெற்றால் நாமும் மரணமிலாப் பெருவாழ்வை அடைதல் கூடும் … Read more

குரு உபதேசம் 4224

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : போலி வேடதாரிகளை பார்ப்பதே பாவம் என்று அறிகின்ற அறிவைப் பெறலாம். ஆகவே முருகப்பெருமான் ஆட்சிக்கு வந்தால், போலி வேடதாரிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள், பண்புள்ள சான்றோர்களுக்கு பாதுகாப்பு இருக்கும், உண்மை ஆன்மீகவாதிகள் நலம் பெறுவார்கள், பத்தினி பெண்டிர்கள், சான்றோர்கள், நலிந்த ஏழைகள் இவர்களுக்கு பாதுகாப்பு உண்டாகும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4223

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்கின்ற வைராக்கியமும், முருகப்பெருமான்தான் கடவுள் என்று அறிகின்ற அறிவும், அவனது ஆசியை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற வைராக்கியமும் முருகனது ஆசி பெற்றால்தான் முடியும் என்பதையும் அறிந்து முருகனது ஆசியை பெற்றால் எல்லாம் கூடும் என்பதையும் அறியலாம். பாலன் முருகன் பாதம் பணிந்திட காலனும் அஞ்சுவான் கண்டவர் கருத்தே. எந்தை கந்தன் இணையடி போற்றிட சிந்தையும் தெளியும் திடமாம் அறிவு. பன்முகமாக பரவும் சிந்தையை சண்முகன் திருவடி … Read more

குரு உபதேசம் 4222

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இக பர வாழ்விற்கு என்றும் துணையாய் இருப்பது முருகன் திருவடியே என்று அறியலாம். கடந்த ஒன்றை கண்டவன் கந்தன் கடந்த ஒன்றை காட்டுவான் உண்மையே.

குரு உபதேசம் 4221

முருகனை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : வெப்பமாகிய சூரிய கலையையும், குளிர்ச்சியாகிய சந்திரகலையையும், அக்னியாகிய சுழிமுனையில் செலுத்தி ஒரு மென்மையான வேதியியல் செய்தால் மாசுள்ள தேகம் மாசு நீங்கி ஒளிதேகம் பெறலாம் என்று அறியலாம். ஒளிதேகம் பெற்ற உத்தமன் முருகன் திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெறுவதே உண்மையான கல்வியும், சாகாக்கல்வியும் ஆகும். சாகாக்கல்வி அறிந்தவனும் முருகனே! சாகாக்கல்வி தந்தவனும் முருகனே!

குரு உபதேசம் 4220

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள ஜீவராசிகள் மகிழ வாழ்வதற்குரிய அறிவும் பரிபக்குவமும் முருகப்பெருமான் அருளால்தான் பெற முடியும் என்று அறியலாம். வேலவன் அடியை போற்றுவோம் வெற்றி பெறுவோம் காலனை வென்ற கந்தனை போற்றுவோம். நவகோடி சித்தர்கள் நாயகன் முருகனே பவவினை அகலவே பரிந்தருள்வான்.

குரு உபதேசம் 4219

முருகனை பூஜித்து ஆசி பெற்றிட : பக்தி, யோகம், ஞானம், தானம் இந்த நான்கும் சித்திபெறுவதற்கு முருகப்பெருமான் ஆசியால்தான் முடியும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4218

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமானின் திருவடி நிழலில் வாழ்கின்ற மக்கள் பிற உயிர்கள் மகிழும்படியான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம். கந்தனை போற்றியே வந்தனை செய்திட சிந்தை தெளிவாகும் மனமே சிந்தை தெளிவாகும். வள்ளலார் திருவடியை வாழ்த்தி வணங்குவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

குரு உபதேசம் 4217

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானி என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் வந்தது என்றும், ஞானி என்றாலே ஞானியானவர் முருகப்பெருமான் ஆசி பெற்றவர்தான் என்பதையும் அறியலாம். பணிந்தேன் குகனின் பாதம் பணிந்தேன் துணிந்தேன் கூற்றுவனை கொல்லவும் துணிந்தேன். வேதத் தலைவன் வேலனைப் போற்றிட நாதவிந்து நல்கும் முக்தியே.