Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4529

முருகா என்றால்: பல பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம் அவரவர் செய்திட்ட பாவத்தின் பயனை ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து பாவவினை நீக்கி காத்து, இரட்சித்து, வீடுபேற்றினை அருள்வான் முருகன் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4528

முருகா என்றால்: உலக நன்மைக்காகவே அவதாரம் செய்தவன்தான் முருகப்பெருமான் என்றும் அவன் திருவடியை பற்றி பூசித்து ஆசிபெறுவதே அறிவு என்றும் அதுவே சாகாக் கல்வி என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4527

முருகா என்றால்: பொருள் மீது பற்றறச் செய்தும், பொது சேவையில் ஆர்வத்தை உண்டு பண்ணியும், தன் திருவடியை தொடர்ந்து பற்றச் செய்தும், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய ஆர்வத்தை உண்டு பண்ணியும் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்வான் முருகப்பெருமான்.

குரு உபதேசம் 4526

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எவர் ஒருவர் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி மனம் உருகி பூஜைகள் செய்து ஆசி பெறுகிறார்களோ, அவர்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் அனைத்தும் உணர்த்தப்படும். ஆதலின் முருகப்பெருமானை வணங்கியவர்க்கு முருகப்பெருமானின் அருட்கடாட்சத்தினால் பணத்திற்காக யோகம் கற்பிக்கும் பொய்தவ வேடதாரிகளிடம் சென்று ஏமாந்து போகவும் மாட்டார்கள். தகுதியற்ற வகையிலே யோகம் செய்து உடம்பை வீணாக்கி செத்துப் போகமாட்டார்கள், யோகமும் ஞானமும் முருகன் அருளாலன்றி வாய்க்காது என்பதும், யோகமும் ஞானமும் பக்தியினாலும், … Read more

குரு உபதேசம் 4525

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. காமக்கனல், யோகக்கனல், மூலக்கனல், பசிக்கனல், கோபக்கனல் என்கிற ஐந்து வகையான கனல்களையும் அளவு மீறாது சமமாக வைத்துக் கொள்ளும் நுட்பமான பயிற்சியே, நுட்பமான அறிவே யோகமாகும் என்பதையும், இந்த பயிற்சிகளை தாங்குவதான தேகம் யோகதேகமாக இருக்க வேண்டும் என்பதாலும், அது யோகிகளுக்கே அமையும் என்பதாலும், இந்த ஐந்து கனல்களையும் கட்டுப்படுத்தும் முறை யோகிகளால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதாலும், இல்லறத்தானால் இதை செயல்படுத்த முடியாது என்பதாலும், அதற்குரிய தேகம் இல்லறத்தானிடத்து … Read more

குரு உபதேசம் 4524

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசன் ஆசி பெற்று முருகனை இடைவிடாது ஞானிகள் துணையுடன் தளராத திடசித்த வைராக்கியத்துடன் தளராது பூஜைகளும் தானதருமங்களையும் செய்து செய்து மகா புண்ணியவானாகிய சாதகனுக்கு தக்க சந்தர்ப்பத்தில் வினைகள் தீர்ந்து சமநிலை அடையும் காலத்து அவனுள் தோன்றும் முருகப்பெருமான் ஜோதி பிழம்பாக தோன்றி சாதகனின் வாசியோடு வாசியாக கலந்து சாதகனின் தேகத்தினுள் பிரவேசித்து வாசியோகம் நடத்திட துவங்குவான். முருகனது வாசியோகம் துவங்கிட ஞானிகளையெல்லாம் அகத்தியர் தலைமையில் ஒன்று கூடி … Read more

குரு உபதேசம் 4523

முருகப்பெருமான் திருவடிகள் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானத்தலைவன் முருகனே என்பதை உணர்ந்து ஞானபண்டிதன் முருகனது திருவடிகளிலே உள்ளம், உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து தம்மை முருகனது திருவடிகளுக்கு கொத்தடிமையாக ஒப்புவித்து என்னைக் கொத்தடிமையாக ஏற்றுக் கொள் முருகா! முருகா! முருகா! என்றே தளராது இடைவிடாது மனம் உருகி உருகி பூஜை செய்ய செய்ய முருகனது கடைக்கண் பார்வைக்கு, அச்சாதகன் ஆளாகி, அச்சாதகனது பாவபுண்ணியச் சுமைகளை குறைத்திட அருள் செய்வான் முருகப்பெருமான். பாவசுமை குறைய … Read more