Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4614

அகத்தீசனைவணங்கி பூசித்து ஆசிபெற்றிட்டால்…. தாய்தந்தையர், உடன்பிறந்தோர், உறவினர், நட்பு என அனைத்தும் ஒருகால எல்லைக்குள்தான் நம்முடன் வர முடியும். அவரவர் காலம் முடிந்து விட்டால் வரமுடியாது, காலத்தால் அனைவரும் மரணமடைவார்கள். ஆனால் முதுபெரும் ஞானிகள் திருவடியைப் பற்றினோர்க்கு ஞானியர் துணை எக்காலத்தும் எச்சென்மத்திலும் விடாது தொடர்ந்து பற்றி வரும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4613

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மற்றவர்க்கு இடையூறு செய்யாமலும், பிறர் செய்யும் இடையூறுகளை பொறுத்துக் கொள்ளும் மனநிலையையும் பெறுவார்கள். அதனால் அவனும் அவனைச் சார்ந்தோரும், மகிழ்வுடன் முருகனருளால் வாழ்வார்கள் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4612

அகத்தீசனைவணங்கி பூசித்து ஆசிபெற்றிட்டால்…. மற்ற உயிர்களுக்கு கெடுதல் செய்து மகிழ்ச்சி அடைகின்ற பாவி, தனது பாவத்தால் அவனும் கெடுவான், அவனை சார்ந்த குற்றத்தினாலே அவனை சார்ந்தோரும் கெடுவார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4611

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிறந்த யாவரும் ஒருநாள் இறந்தே போக வேண்டும். இது இயற்கையின் நியதியாகும். அத்தகைய இயற்கையின் நியதியினை வென்று என்றும் அழிவிலாத மரணமிலாப் பெருவாழ்வை பெறவேண்டுமானால் எல்லாம்வல்ல ஞானபண்டிதன் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூசித்து முருகனது ஆசியைப் பெற்று விட்டால், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள் முருகப்பெருமானின் ஆசியினாலே மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4610

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பெறுதற்கரிய மானுடப்பிறவியை பெற்ற போதும், நரகமும் சொர்க்கமுமாய் உள்ள காமதேகத்தினில் உள்ள மும்மலக்கசடை முருகனை வணங்க வணங்க வணங்க, முருகனது கருணை கூடி, நீக்க முடியாத தேகக்கசடையும் முருகனருளால் நீக்கிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4609

அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கைக் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களிலேயே மனிதபிறப்பில் மட்டுமே நன்மையும், தீமையும், நரகமும் சொர்க்கமுமாய் கலந்து படைத்துள்ளான் இயற்கை கடவுள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4608

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிற உயிர்களுக்கு கருணை காட்டுதல், விட்டுக் கொடுத்தல், அனுசரித்து போதல், மன்னித்தல், மறத்தல் போன்ற பண்புகள் பெருக பெருக இயற்கை சீற்றம் வராது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4607

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பதவி, பணம், ஆட்படை, அதிகாரம், உடல் நலம், ஆரோக்கியம் அத்தனையும் முன்செய்த நல்வினையால் கிடைத்தது என்பதை அறியாமல், தவறாக பயன்படுத்துகின்ற மக்கள் கலியின் மாயையினாலே மிகுதியாக பெருகிவிட்டார்கள். ஆதலினாலே உறுதியாக இவ்வுலகினில் இயற்கை சீற்றம் வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.