admin
குரு உபதேசம் 4599
அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முருகப்பெருமான்தான் யோகத்திற்கும் தவத்திற்கும், ஞானத்திற்கும் தலைவன் என்பதை அறியாமல் அவரவர் மனதில் தோன்றியபடியெல்லாம் கண்டவர் சொன்னதன் பெயரிலோ, கட்டணம் கட்டி கேட்டதன் பெயரிலோ அல்லது காசுக்காக கற்றுக் கொடுத்ததையோ நம்பி யோகப் பயிற்சிகளை செய்வாராகில் கட்டாயம் ஒரு காலபரியந்தத்தில் தலைவன் ஆசியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்தே போவான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4598
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. கண்மூடி மௌனமாக அமர்ந்திருப்பது தியானம் அன்று. மனதினுள் முருகப்பெருமான் திருவடிகளை எண்ணி முருகனது திருநாமங்களை மந்திர ஜெபமாக சொல்லி வணங்குவதே தியானம் என்று பொருள்படும். அதுவே தவமும் ஆகும். அதுவே ஆசி பெறும் வழியும் என்பதை உணரலாம்.
குரு உபதேசம் 4597
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. சைவ உணவை கடைப்பிடிப்பதோடு முற்றுப்பெற்ற முனிவனாகிய முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்ற அறிவும் பிறருக்கு உதவி செய்கின்ற மனப்பக்குவமும் வந்தருளும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4596
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி வணங்கி ஆசிபெற்றிட்டால்…. ஜீவதயவே வடிவானவனும், ஜீவதயவினை அளவிலாது பெருக்கி பெருக்கி செஞ்சுடர் ஜோதி வடிவினனாகி சதகோடி சூரிய பிரகாசமுள்ள அருட்பெருஞ்ஜோதி சுடராகி, என்றும் மரணமிலாத பெருவாழ்வையும் பிறப்பு இறப்பற்ற நிலையையும், ஆயிரங்கோடி மன்மதர்களை ஒத்த பேரழகுடையவனாய், மாறா இளமையுடையவனாய் ஆகி, ஞானத்திற்கே மூல சக்தியாய், ஞானபண்டிதனாக விளங்கி இயற்கை கடவுளோடு இயற்கை கடவுளாய் இரண்டற கலந்து எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றவனுமாகிய முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றாலன்றி ஒருவனுக்கு … Read more
குரு உபதேசம் 4595
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தோன்றிய உயிர்கள் இறுதியில் முற்றுப்பெறுவதற்கு ஒரே வாய்ப்பு மனிததேகம் மட்டுமே. கடவுள் தன்மை அடையவே இயற்கை கடவுளால் உண்டாக்கப்பட்டதே மனிதப் பிறப்பாகும். அப்படி பல்லாயிரங்கோடி ஆண்டுகள் தவமாய் தவமிருந்து பெற்ற மானுட பிறப்பின் மகத்துவம் புரிந்து கொள்ளாமல் வாழ்வினை வீணாக்கி விடக்கூடாது.
குரு உபதேசம் 4594
முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட்டால் : ஞானத்தலைவர் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற மக்களுக்கெல்லாம் ஞானவாழ்வு சித்திக்கும் என்பதை சத்தியமாக அறியலாம். ……………… சத்தியவான் நந்தனார் தாளிணை போற்றிட சித்தியும் உண்டாம், திடமாம் வாழ்வு. ஆற்றலாம் நந்தனார் அருளைப் போற்றிட ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். மாசற்ற நந்தனார் மலரடி போற்றவே ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம். வந்தித்தேன் நந்தனாரை வாழ்த்தினேன் சிந்தித்தேன் சித்தியும் பெற்றேனே. பாடுபெறும் நந்தனார் பாதம் பணிந்திட வீடுபேறு உண்டாம் விளம்பு. ஆற்றலாம் நந்தனார் அருளைப் … Read more
குரு உபதேசம் 4593
அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால் : ஞானிகள் திருவடியே நம்மை கடைத்தேற்றும் என்று அறியலாம்.


