குரு உபதேசம் 4614
அகத்தீசனைவணங்கி பூசித்து ஆசிபெற்றிட்டால்…. தாய்தந்தையர், உடன்பிறந்தோர், உறவினர், நட்பு என அனைத்தும் ஒருகால எல்லைக்குள்தான் நம்முடன் வர முடியும். அவரவர் காலம் முடிந்து விட்டால் வரமுடியாது, காலத்தால் அனைவரும் மரணமடைவார்கள். ஆனால் முதுபெரும் ஞானிகள் திருவடியைப் பற்றினோர்க்கு ஞானியர் துணை எக்காலத்தும் எச்சென்மத்திலும் விடாது தொடர்ந்து பற்றி வரும் என்பதை அறியலாம்.


