Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4496

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. அன்னதானத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும், முருகப்பெருமானின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், முருகனை வணங்காதோரும், சைவத்தில் நம்பிக்கை இல்லாதவரும் எவ்வளவுதான் கல்வி கற்ற பெரும் அறிவாளியாக இருந்தாலும், வல்லமைப் பெற்ற செல்வராய் இருந்தாலும் அவர்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கமாட்டான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4495

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தன்னை காத்துக் கொள்ள சிலர் உடற்பயிற்சிகள் செய்வார்கள், உடம்பை பாதுகாக்கஉடற்பயிற்சி தேவைதான். ஆனால் உயிர் பாதுகாப்பை எவ்வாறு பெறுவார்கள்? உடம்பு எவ்வளவு வலிவுடையதாய் இருப்பினும் உயிரில்லையேல் வலிவுள்ள உடம்பிற்கு மதிப்பில்லை என்பதை உணரமாட்டார்கள். தனது வாழ்வு வளம்பெற பொருளீட்டுவார்கள், உயிர் பலம் பெற என்ன செய்தார் என்றால் ஒன்றுமில்லை. இப்படி அழியக்கூடிய உடம்பிற்காக எத்தனை எத்தனை பாதுகாப்பு, அலங்காரம், ஆராதனை, பொருள் சேமிப்பு என வாழ்நாளை வீணாக்குவதைவிட எல்லாம்வல்ல காக்கும் தெய்வம் முருகன் … Read more

குரு உபதேசம் 4494

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. இதுநாள் வரையில் உலகில் உள்ள சாதிகளின் பெயராலும் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் அரசியலின் செல்வாக்காலும், நாட்டு மக்களுக்கு செய்த அராஜகம் அனைத்தும் ஞானபண்டிதன் முருகப்பெருமானால் கட்டுப்படுத்தப்பட்டு, ஞானஆட்சி ஏற்பட்டு நாடே முருகனருளால் சுபிட்சமாகும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4493

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. அரசினை வழிநடத்தி மக்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகள் அரசியலின் பெயரால் மக்களுடைய சொத்தான பொதுச்சொத்துக்களையும் அபகரிப்பதோடு பொதுமக்கள் பணத்தினை ஏராளமாய் தனக்காக சேகரித்து வைத்துள்ளார்கள். இனி வரும் காலத்தில் ஞானசித்தர் காலத்திலே அவர்கள் நீதிக்கு புறம்பாக சேர்த்த அத்துணை சொத்தும், கடவுளின் பெயரால் மீண்டும் பெறப்பட்டு நாட்டு மக்களுக்கு சென்றடையும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4492

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தானத்தில் சிறந்தது அன்னதானமே! அதை செம்மையாக செய்ய கற்றுக்கொண்டவன்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் என்பதை அறியலாம். மற்றைய தானங்கள் அனைத்தும் அன்னதானத்தின் பலனைவிட குறைவானதேயாம். அன்னதானம் என்பது உடலையும், உயிரையும் மகிழ்விப்பதால் எல்லா தானங்களிலும் சிறந்தது என்றும் ஜீவதயவின் முழு வெளிப்பாடு அன்னதானத்தினில் தான் அடைய முடியும் என்றும் அறியலாம். மற்றைய தானங்கள் வாய்ப்பு உள்ள போது, காலம் தாழ்த்திக்கூட செய்யலாம், ஆனால் மனிதர்களுக்கு பசியாற்றும் பரோபகார செயலான அன்னதானத்தில் ஒருபோதும் … Read more

குரு உபதேசம் 4491

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. நாம் காணுகின்ற அனைத்தும் நிலையில்லாதது என்றும், அவை அழியக் கூடியது என்றும், அழியாமல் நிலைப்பது நாம் செய்கின்ற தானதருமங்களும், தர்மத்தலைவன் முருகப்பெருமானின் திருவடி பூஜைகளும் தான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4490

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மனிதனாய் பிறந்தவன், தான் கற்ற ஏட்டுக் கல்வியின் பயனால் பெரிய விஞ்ஞானியாக இருக்கலாம், பெரிய அறிவாளியாக இருக்கலாம், பெரிய தொழில் அதிபனாக இருக்கலாம், ஏன் இன்னும் அநேகம் அநேகம் திறமை உடையவராய் கூட இருக்கலாம். ஆனால் முருகனை வணங்காதவர்களுடைய அறிவு பொய்யறிவு, அவனது செல்வமும் அழியக்கூடிய செல்வமே. அதுவும் தமிழனாய் பிறந்தும் ஒருவன் முருகப்பெருமானை குருவாய் தெய்வமாய் ஏற்று வணங்காமல் பல்வேறு தெய்வங்களை வணங்குவதும் அல்லது தெய்வ நம்பிக்கையே இல்லாமல் … Read more

குரு உபதேசம் 4489

முருகப்பெருமான் திருவடிகளை வணங்கிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மன்னவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பது ஆன்றோர் வாக்கு. மக்களை வழிநடத்தி பாவியாகாது காத்து தருமத்தின் வழி மக்களை வழிநடத்தி சென்று நாடு செழிக்க, மக்கள் நலமுடன் வாழ, தன்னலமற்று தொண்டாய் தாம் ஏற்ற பதவியை பயன்படுத்தி ஆட்சி செய்ய வேண்டியவர்களில் சிலர் தடம் மாறி உயிர்க்கொலை செய்து புலால் உண்பவர்களாகவும், மது அருந்தி அறிவு மயக்கத்திற்கு உள்ளானவர்களாகவும், தர்மத்தின் வழி செல்லாது அதர்மம் புரிபவர்களாகவும், பதவியில் அமர்ந்து நாட்டினில் பாவச்சுமை … Read more

குரு உபதேசம் 4488

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. சடங்குகளை செய்வதினால் மட்டும் ஒருவர் சித்தி பெற முடியாது என்பதை எவ்வளவு வலியுறுத்தி கூறினாலும் பாவம் செய்திட்ட பாவிகளுக்கு உண்மை ஆன்மீகத்தில் நம்பிக்கை வராது. தாம் செய்வதே சரி எனும் உணர்வே மேலோங்கி நிற்கும். முன் செய்த பாவங்களால் தான் இப்படி நடக்கிறது என்பதை அறிந்து முன்செய்த பாவங்கள் தீர்ந்திட உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும். எல்லாம் தந்தருளும் … Read more