குரு உபதேசம் 4617
அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிற உயிர்களுக்கு செய்கின்ற உதவிகளே ஞானமாக மாறும் என்பதை அறியலாம்.
அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிற உயிர்களுக்கு செய்கின்ற உதவிகளே ஞானமாக மாறும் என்பதை அறியலாம்.
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. உயிர் வாழ உணவு உண்பது மிகமிக அவசியம். ஒவ்வொரு உயிரும் தாம் வாழ எல்லா வகையிலும் போராடி வாழ்கிறது. ஒவ்வொரு உயிரும் வாழத்தான் விரும்பும், சாகுவதற்காக அல்ல. உயிர்கள் வாழ உணவு அவசியம். உயிர் வாழ உணவு உண்பது, என்பது தேவைதான். அதற்காக இயற்கை மனிதனுக்கு இவ்வுலகினில் ஏராளமான காய் வகை, கனி வகை, கீரைகள், பருப்புகள், இலைகள், கிழங்குகள் என பலபலவிதமான தாவரங்களை படைத்து அவற்றை பயிர் செய்யும் முறையும் … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மனிதன் எழுத்தாளன், ஓவியன், கவிஞன், விஞ்ஞானி, கல்வியாளன், பேச்சாளன் என மிகச்சிறந்த வகையிலே திறமைகள் பெற்றிருந்தாலும் அவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திலே இறந்துதான் போவார்கள். என்றும் அழியாத முருகனது திருவடிகளைப் பற்றினால்தான் எதனாலும் பாதிப்படையாமல் மனிதன் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறியலாம்.
அகத்தீசனைவணங்கி பூசித்து ஆசிபெற்றிட்டால்…. தாய்தந்தையர், உடன்பிறந்தோர், உறவினர், நட்பு என அனைத்தும் ஒருகால எல்லைக்குள்தான் நம்முடன் வர முடியும். அவரவர் காலம் முடிந்து விட்டால் வரமுடியாது, காலத்தால் அனைவரும் மரணமடைவார்கள். ஆனால் முதுபெரும் ஞானிகள் திருவடியைப் பற்றினோர்க்கு ஞானியர் துணை எக்காலத்தும் எச்சென்மத்திலும் விடாது தொடர்ந்து பற்றி வரும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மற்றவர்க்கு இடையூறு செய்யாமலும், பிறர் செய்யும் இடையூறுகளை பொறுத்துக் கொள்ளும் மனநிலையையும் பெறுவார்கள். அதனால் அவனும் அவனைச் சார்ந்தோரும், மகிழ்வுடன் முருகனருளால் வாழ்வார்கள் என்பதையும் அறியலாம்.
அகத்தீசனைவணங்கி பூசித்து ஆசிபெற்றிட்டால்…. மற்ற உயிர்களுக்கு கெடுதல் செய்து மகிழ்ச்சி அடைகின்ற பாவி, தனது பாவத்தால் அவனும் கெடுவான், அவனை சார்ந்த குற்றத்தினாலே அவனை சார்ந்தோரும் கெடுவார்கள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிறந்த யாவரும் ஒருநாள் இறந்தே போக வேண்டும். இது இயற்கையின் நியதியாகும். அத்தகைய இயற்கையின் நியதியினை வென்று என்றும் அழிவிலாத மரணமிலாப் பெருவாழ்வை பெறவேண்டுமானால் எல்லாம்வல்ல ஞானபண்டிதன் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூசித்து முருகனது ஆசியைப் பெற்று விட்டால், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள் முருகப்பெருமானின் ஆசியினாலே மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பெறுதற்கரிய மானுடப்பிறவியை பெற்ற போதும், நரகமும் சொர்க்கமுமாய் உள்ள காமதேகத்தினில் உள்ள மும்மலக்கசடை முருகனை வணங்க வணங்க வணங்க, முருகனது கருணை கூடி, நீக்க முடியாத தேகக்கசடையும் முருகனருளால் நீக்கிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.
அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கைக் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களிலேயே மனிதபிறப்பில் மட்டுமே நன்மையும், தீமையும், நரகமும் சொர்க்கமுமாய் கலந்து படைத்துள்ளான் இயற்கை கடவுள் என்பதை அறியலாம்.