குரு உபதேசம் 4553
அகத்தீசனை வணங்கிட: ஒரு செயலை செய்ய முற்படும்போதே அந்த செயல் தனக்கும், தன்னை சார்ந்தோர்க்கும், பொதுவிலும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையுமா என ஆராய்ந்து பார்க்கும் அறிவினை பெறலாம்.
அகத்தீசனை வணங்கிட: ஒரு செயலை செய்ய முற்படும்போதே அந்த செயல் தனக்கும், தன்னை சார்ந்தோர்க்கும், பொதுவிலும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையுமா என ஆராய்ந்து பார்க்கும் அறிவினை பெறலாம்.
அகத்தீசனை வணங்கிட: உண்மை பக்தி எதுவெனில் ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூசிப்பதே என்பதையும், அதுவே இவ்வுலகினில் எல்லாவற்றிற்கும் மேலான சிறந்த பக்தி நெறியாகும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கிட: புண்ணியவான்கள்தான் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற முடியும் என்பதை அறியலாம். வாழும் கலையை வழங்கிய முருகனை நாளும் போற்றியே நலம் பெறுதல் நலமே! கனிவேலன் தந்த கனிவான தமிழை கனியாக்கி தருதல் கடனே! நஞ்சை அமுதாக்கிய நாயகன் முருகனை நெஞ்சில் நினைக்க நினைத்தவை சித்தியே!
அகத்தீசனை வணங்கிட: பிற உயிர்கள் அஞ்சி நடுங்கும்படி செய்கின்றவனுக்கு, தான் அஞ்சி நடுங்கும்படியான சூழ்நிலை வரும் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட: சுத்தம், அசுத்தத்தை அறிந்து அசுத்தத்தை நீக்கி சுத்தி செய்து, சுத்த தேகத்தைப் பெற்று சதகோடி சூரிய பிரகாசமுள்ள ஒளி தேகமாக மாற்றிக் கொண்டவன் முருகனே என்றும், அவனே அருட்பெருஞ்ஜோதி வடிவினாகி நின்றனன் என்பதையும், அறிவதோடு உடல் மாசு நீங்கினாலன்றி உயிர் மாசு நீங்காது என்றும், உடல் மாசு நீங்கினால் உயிர்மாசும் நீங்கி, அறிவு தெளிவாகி செம்பொருள் அறிவாகி என்றும் அழியாத பேரின்ப நிலையான மரணமிலாப் பெருவாழ்வையும் முற்றுப்பெற்ற உண்மை ஞானத்தையும் அதுவே தரும் என்பதையும் … Read more
அகத்தீசனை வணங்கிட: பெறுதற்கரிய மானுடதேகம் பெற்றவர்கள்தான் பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அவ்வுயிர்களுக்கு உதவி செய்து அவ்வுயிர்படும் துன்பத்தை நீக்குகின்ற வல்லமையையும் பெற்றது என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட: மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களை உணரச் செய்தும் மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம். மகத்துவம் பொருந்திய மணிவாசகப் பெருமானை அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம். முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும். தாய்மை குணம் தந்த முருகனை வாய்மையாய்ப் போற்றி வழிபடுதல் நலமே. கற்றதன் பயனே கழல் பணிதல் என்றே உற்றநல் அறிவென்றே உண்மை உணர்வோம்.
அகத்தீசனை வணங்கிட: நாம் பல ஜென்மங்களிலே மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்கள் இந்த ஜென்மத்திலே நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கு தடையாய் உள்ளது என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட: என்றும் நிலைப்பெற்று அருளுகின்ற முருகப்பெருமான் திருவடியே உண்மை என்று அறியலாம். …………….. பகலவனாம் முருகனின் பாதம் பணிந்திடவே இகல்எல்லாம் விலகியே இன்பம் உண்டாம்.