குரு உபதேசம் 4612
அகத்தீசனைவணங்கி பூசித்து ஆசிபெற்றிட்டால்…. மற்ற உயிர்களுக்கு கெடுதல் செய்து மகிழ்ச்சி அடைகின்ற பாவி, தனது பாவத்தால் அவனும் கெடுவான், அவனை சார்ந்த குற்றத்தினாலே அவனை சார்ந்தோரும் கெடுவார்கள் என்பதை அறியலாம்.
அகத்தீசனைவணங்கி பூசித்து ஆசிபெற்றிட்டால்…. மற்ற உயிர்களுக்கு கெடுதல் செய்து மகிழ்ச்சி அடைகின்ற பாவி, தனது பாவத்தால் அவனும் கெடுவான், அவனை சார்ந்த குற்றத்தினாலே அவனை சார்ந்தோரும் கெடுவார்கள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிறந்த யாவரும் ஒருநாள் இறந்தே போக வேண்டும். இது இயற்கையின் நியதியாகும். அத்தகைய இயற்கையின் நியதியினை வென்று என்றும் அழிவிலாத மரணமிலாப் பெருவாழ்வை பெறவேண்டுமானால் எல்லாம்வல்ல ஞானபண்டிதன் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூசித்து முருகனது ஆசியைப் பெற்று விட்டால், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள் முருகப்பெருமானின் ஆசியினாலே மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பெறுதற்கரிய மானுடப்பிறவியை பெற்ற போதும், நரகமும் சொர்க்கமுமாய் உள்ள காமதேகத்தினில் உள்ள மும்மலக்கசடை முருகனை வணங்க வணங்க வணங்க, முருகனது கருணை கூடி, நீக்க முடியாத தேகக்கசடையும் முருகனருளால் நீக்கிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.
அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கைக் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களிலேயே மனிதபிறப்பில் மட்டுமே நன்மையும், தீமையும், நரகமும் சொர்க்கமுமாய் கலந்து படைத்துள்ளான் இயற்கை கடவுள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிற உயிர்களுக்கு கருணை காட்டுதல், விட்டுக் கொடுத்தல், அனுசரித்து போதல், மன்னித்தல், மறத்தல் போன்ற பண்புகள் பெருக பெருக இயற்கை சீற்றம் வராது என்பதை அறியலாம்.
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பதவி, பணம், ஆட்படை, அதிகாரம், உடல் நலம், ஆரோக்கியம் அத்தனையும் முன்செய்த நல்வினையால் கிடைத்தது என்பதை அறியாமல், தவறாக பயன்படுத்துகின்ற மக்கள் கலியின் மாயையினாலே மிகுதியாக பெருகிவிட்டார்கள். ஆதலினாலே உறுதியாக இவ்வுலகினில் இயற்கை சீற்றம் வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கை சீற்றங்கள் வரத்தான் செய்யும், அப்படி இயற்கை சீற்றங்கள் வந்தாலும் அகத்தீசனை வணங்குகின்றோரெல்லாம் இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முதுபெரும் ஞானிகள் அருளிய, சிவபுராணம், திருமந்திரம், திருஅருட்பா போன்ற ஞான நூல்களை படித்து பூஜிக்கின்ற ஆர்வம் உண்டாகி பக்தி நூல்களைப் படித்து, மனமுருகி பூஜித்து முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றுகின்ற வைராக்கியம் வரும்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. இப்பிரபஞ்சத்தில் இன்று ஒருவன் ஒரு செயலை, அது நன்மையோ தீமையோ செய்வானாகில் அது மீண்டும் அவனுக்கே வந்து சேரும் என்பது மாற்ற முடியாத, மறுக்க முடியாத உண்மையாகும். அது சற்று முன்பின்னாகவோ அல்லது பல ஜென்மங்களிலோ அவனது ஆன்மாவைப் பற்றி கண்டிப்பாக தொடர்ந்து அதன் விளைவுகள் அவனை அடைந்தே தீரும் எனும் மாற்ற முடியாத மறுக்க முடியாத உண்மையை முருகனருளால் உணர்வார்கள். கடவுளின் பெயரால் ஆடு, கோழி போன்ற உயிர்களை பலியிட்டால் … Read more