Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4571

முருகனை வணங்கிட: மும்மலக் குற்றத்தாலான தேகமே தொடர் பிறவிக்கு காரணமாய் உள்ளதை அறிந்து முதன் முதலில் மும்மலக்குற்றத்தை நீக்கிக் கொண்டு ஒளிதேகம் பெற்றவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட குற்றமற்ற வாழ்வும் நற்குணமும் உண்டாம்.

குரு உபதேசம் 4570

அகத்தீசனை வணங்கிட: உயர் பிறப்பாகிய மனித தேகம் பெற்றவர்கள் இளமை இருக்கும்போதே தக்க ஆசானைத் தேடி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவை பெறலாம்.

குரு உபதேசம் 4569

முருகனை வணங்கிட: முருகனே சத்தும் சித்துமாக இருப்பதை அறியலாம். வித்தகன் முருகனடியை விரும்பியே போற்றிட சத்தும் சித்தும் கைவசமாமே. இடைபின் கலைநடுவில் இயங்கிடும் சுழிமுனையை தடையற கண்டிட தான் அவனாமே.

குரு உபதேசம் 4568

அகத்தீசனை வணங்கிட: தாய்மை குணம் உள்ள அகத்தீசனை பூசித்து ஆசி பெற நினைப்பதே சிறந்த அறிவாகும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4567

அகத்தீசனை வணங்கிட: தெய்வத்தின் பெயரால் உயிர்களை கொலை செய்வது, பாவம் என்று அறியலாம்.

குரு உபதேசம் 4566

முருகப்பெருமானை வணங்கிட: கொடுக்கக் கூடிய மனமும் அதற்குரிய வாய்ப்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக்கூடிய அறிவையும் முருகப்பெருமான்தான் அருள்வான் என்பதையும் அறியலாம். பாடுபெறும் திருவடியை பணிந்தே பூசிக்க வீடுபேறு உண்டாம் விளம்பு.

குரு உபதேசம் 4565

அகத்தீசனை வணங்கிட: பூஜை செய்வதற்குரிய அறிவும் புண்ணியம் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் பெறலாம்.

குரு உபதேசம் 4564

அகத்தீசனை வணங்கிட: எந்த உடம்பு காமத்திற்கு காரணமாக இருக்கின்றதோ அந்த உடம்பே ஞானத்திற்கும் காரணமாக உள்ளதை அறிந்து கொள்ளலாம்.