admin
குரு உபதேசம் 4563
முருகப்பெருமானை வணங்கிட: யோகத்துக்கும், ஞானத்திற்கும் தலைவன் முருகப்பெருமானே. முருகப்பெருமான் அன்றி, மனிதர்கள் வாசி நடத்தி கொடுப்பது என்பதெல்லாம் வெறும் பொய்யென்றும், ஏமாற்று வேலை என்றும், அவர்களை முருகப்பெருமான் தண்டிப்பார் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4562
அகத்தீசனை வணங்கிட: சைவஉணவை மேற்கொண்டும் ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்றவர்க்கும், அன்னதானம் செய்கின்ற மக்களுக்கும்தான் வாசி வசப்படுகின்ற வாய்ப்பை அகத்தீசன் தருவார் என்று அறியலாம்.
குரு உபதேசம் 4561
அகத்தீசனை வணங்கிட: உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடித்தவர்கள் தான் ஞானிகள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4560
முருகப்பெருமானை வணங்கிட: தயை குணம்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதை அறியலாம். சீலமாம் முருகனின் திருவடி போற்றிட காலத்தை வெல்ல கருத்தும் தோன்றுமே. சீலமாம் முருகனின் திருவடி போற்றிட தூல சூட்சுமம் கைவசமாமே.
குரு உபதேசம் 4559
அகத்தீசனை வணங்கிட: மும்மலத்தால் ஆன உடம்புதான் தொடர் பிறவிக்கு காரணம் என்பதை அறிந்து மும்மலத்தை நீக்கிக் கொள்ளலாம்.
குரு உபதேசம் 4558
முருகப்பெருமானை வணங்கிட: எந்தெந்த வகையில் தொடர் பிறவி ஏற்படும் என்றும், அதற்கு காரணம் என்ன என்பதையும் அறிந்து நீக்கிக் கொள்ளலாம். நிலையில்லாத உடம்பை பெற்ற நாம் முருகன் அருளால் நிலையில்லாத உடம்பை நிலையான உடம்பாக உறுதிப்படுத்திக் கொள்ளும் வழியை அறியலாம். முருகப்பெருமான் திருவடியே வேதம் என்றும், அவன் நாமஜெபமே தவம் என்றும், அவனது நாமமே மந்திரம் என்றும், அவனது ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும், அதில் வெற்றி பெறுவதே ஞானம் என்றும் அறிந்து கொள்ளலாம். காரண குருவான கந்தனைப் … Read more
குரு உபதேசம் 4557
அகத்தீசனை வணங்கிட: அகத்தீசனை பூஜை செய்திட செய்திட, பொறிபுலன்கள் நமக்கு விரோதமாக செயல்படாமல் அவற்றை நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதே தவம் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4556
முருகனை வணங்கிட: இப்பிறப்பு, மறுபிறப்பு, மீண்டும் பிறவாமை ஆகிய இரகசியங்களை முதன் முதலில் அறிந்து வென்று பிறவாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வை பெற்றவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். பசியின் கொடுமையால் உணவினது பெருமையையும், வறுமையின் கொடுமையால் செல்வத்தின் பெருமையையும், காமவிகாரத்தின் கொடுமையால் பெண்ணின் பெருமையையும், நோயின் கொடுமையால் மருத்துவரின் பெருமையையும் அறிந்து தெளிவது போல கடைத்தேற விரும்பி முயற்சி செய்து முன்னேற விரும்புகின்றபோது ஆன்மீக வழிதனை அறிய முற்படும் முயற்சிகளினால் முருகனின் பெருமையை உணரலாம். அன்றி முயற்சி … Read more


