Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4470

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முருகனை வணங்க வணங்க, எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரிகின்ற ஜீவதயவை வரமாய் பெறுவார்கள். ஜீவதயவு பெருக பெருக, மும்மலக்கசடால் ஆன இந்த தேகமே பேரின்பத்திற்கு காரணமாக அமைகிறதையும் அறியச்செய்து அறியாமையையும், பலகீனங்களையும் உண்டாக்குகின்ற மும்மலதேகத்தின் தன்மையை உணரச்செய்கிறான். தேகம் மரணமிலாப் பெருவாழ்வை பெறத் தடையாக இருப்பது மும்மலமே என்றும், நமது தேகமே மும்மலக் குற்றத்தால் அறியாமை உண்டுபண்ணுகிறது என்பதையும் அறியச்செய்து மும்மலக் கசடை நீக்கி தூய தேகம் வெளிப்பட … Read more

குரு உபதேசம் 4469

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…. மும்மலத்தாலான உடம்பையும், அதனுள் உள்ள மலக்குற்றங்களையும் அறியச்செய்தும் அந்த உடம்பினுள்ளே உள்ள அற்புத சக்தியை தட்டி எழுப்பியும், அச்சக்தி வெளிப்பட உற்ற துணையாய் இருந்து அழியக்கூடிய இந்த மனிததேகத்தை, காமதேகத்தை அழியாத பொன்னுடம்பாய், ஒளி உடம்பாய் ஆக்கி என்றும் அழிவிலாத தேகமாக மாற்றி யுகயுகத்தும் அழியாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4468

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகளெல்லாம் நம்முள் அகன்று அனைவரும் ஒரே இனமாக கருதப்படுகின்ற மனோநிலையும், சூழ்நிலையும் உண்டாகி அனைத்தும் ஒரே இனமாக கருதப்படும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4467

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…. நோய், வறுமை, பகை, மனஉளைச்சல் ஆகியவை தீருவதற்கு அன்னதானம் தான் மருந்து என அறிந்திட்டாலும் அன்னதானம் செய்து அவரவர் வினைகளை போக்கிட தக்க சூழ்நிலையும், வழிவகைகளும் முருகப்பெருமான் அருள் இருந்தால்தான், முருகன் அருள் செய்தால்தான், முருகன் விரும்பினால்தான் பெற முடியும் என்பதையும் அறியலாம். முருகனது அருளாசியே தர்மமாய், வினை நீக்கமாய் மாறும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4466

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. முருகப்பெருமானே தலைமை தாங்கி உலகப்பெருமாற்றத்தை நடத்த இருப்பதால் கலப்படம், லஞ்ச லாவண்யம், தீவிரவாதம் ஆகிய அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் என்று அறியலாம்.

குரு உபதேசம் 4465

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காட்டிற்கு காரணமான மனித தேகத்தை சார்ந்து பிறவிக்கு காரணமான காமதேகத்தை நீர்த்து ஒளி உடம்பாக ஆக்குகிற சக்தியனைத்தும் முருகப்பெருமானுக்கே உண்டு என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4464

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றிபூசித்து ஆசிபெற்றிட்டால்…. புண்ணியபலம், அருள்பலம் என்ற சொல்லிற்கே மூலகாரணமாக இருப்பவனே முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4463

முருகப்பெருமான் திருவடிகளைபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிறப்பையும், இறப்பையும் மாற்றி இனி பிறவா நிலையை அடையலாம், மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம்.

குரு உபதேசம் 4462

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கை கடவுளால் மனிதனுள் வைக்கப்பட்ட அற்புத சக்தியை தட்டி எழுப்ப புண்ணியமும் அருளாசியும் வேண்டும். முருகப்பெருமானை வணங்க வணங்க முருகனது அருள் கூடி நிற்பதோடு புண்ணிய பலத்தின் உதவியால் அந்த சக்தி தட்டி எழுப்பப்படும். அதுவே எல்லாவற்றையும் தரும் என்பதையும் அறியலாம். கோடானு கோடி யுகங்கள் தவம் செய்து தாம் பெற்றிட்ட அற்புத சக்தியின் வெளிப்பாட்டின் மகிமையை தாம் அடைந்த அந்த பேரின்பத்தை மற்றவர்க்கும் அற்புதமாய் பெருந்தாய் பெருங்கருணையோடு வழங்கி அனைவரையும் … Read more